惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园_首页
大猫的无限游戏
大猫的无限游戏
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog
Engineering at Meta
Engineering at Meta
量子位
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
Tailwind CSS Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
N
Netflix TechBlog - Medium
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
博客园 - 【当耐特】
云风的 BLOG
云风的 BLOG
博客园 - Franky
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு - டீசல் விலை உயர்வால் முடிவு
வெற்றி மயிலோன் · 2026-05-21 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மே 20 முதல் அமலுக்கு வரும் வகையில் சரக்குக் கட்டணங்களை உயர்த்த போக்குவரத்துத் துறை சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையால் விலைவாசி மேலும் உயரும் என நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சரக்கு கட்டண உயர்வு அகில இந்திய போக்குவரத்துத் துறையினர் நலச் சங்கம் (AITWA) சார்பில் வியாழக்கிழமையன்று (மே 21) அறிவிக்கப்பட்டன.

‘இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டீசல் விலை நிலையாகவே இருந்து வந்தன. இதனால் சரக்குக் கட்டணங்களை பெரிய அளவில் உயர்த்தவில்லை. தற்போது அமலுக்கு வந்த டீசல் விலையின் கடும் உயர்வு காரணமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது’ என அந்த சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வைச் சமாளிக்கும் வகையில், போக்குவரத்துத் துறையினர் 'எரிபொருள் சரிசெய்தல் காரணி' (FAF) எனப்படும் ஒரு புதிய கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

போக்குவரத்து துறையின் செலவுகளில் 65% பங்கினை டீசலின் விலை நிர்ணயிக்கிறது. எனவே டீசல் விலைக்கான செலவை ஈடுகட்டும் வகையில், சரக்கு கட்டணங்களை உயர்த்த இந்த கணக்கீட்டு முறை உதவும் என போக்குவரத்து துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், போக்குவரத்துத் துறையினர் தங்கள் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு உதவும் வகையில், இந்த புதிய வழிமுறையை ஏற்றுக்கொண்டு கூடுதல் கட்டணத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அகில இந்திய போக்குவரத்துத் துறையினர் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோல, பல இடங்களில் டீசல் பற்றாக்குறையால் லாரிகள் ஆங்காங்கே சிக்கிக்கொள்வதால், சரக்குகள் வந்து சேர்வதில் ஏற்படும் தாமதத்துக்கு எவ்வித அபராதமும் விதிக்க வேண்டாம் என்றும் போக்குவரத்து துறையினர் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சரக்கு கட்டணம் 4% உயர்த்தப்படுவதால், நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சரக்கு கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.