惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
Blog — PlanetScale
Blog — PlanetScale
B
Blog
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
月光博客
月光博客
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Vercel News
Vercel News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
WordPress大学
WordPress大学
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements
腾讯CDC
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
The Cloudflare Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தின் நிதிநிலை: எச்சரிக்கை மணி ஒலிக்கிறதா?
எஸ்.வி.ரமணி · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை, மாநிலத்தின் நிதிநிலையில் உருவாகி வரும் சவால்களை விரிவாக வெளிப்படுத்துகிறது. இது, ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, இது தமிழகத்தின் வளர்ச்சி பாதை, நிதி நிலைத்தன்மை மற்றும் எதிர்கால ஆட்சி முறை குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு முக்கியமான கேள்வியை இந்த வெள்ளை அறிக்கை முன்வைக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வந்த காலகட்டத்தில், தமிழகத்தின் நிதிநிலை ஏன் தொடர்ந்து மோசமடைந்தது? இந்தியாவின் பல மாநிலங்கள் பெருந்தொற்றுக்கு பிந்தைய ஆண்டுகளை வருவாய் உயர்த்துவதற்கும், செலவுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், நிதி ஒழுங்குமுறையை மீட்டெடுப்பதற்கும் பயன்படுத்தின. ஆனால் தமிழகம் பல முக்கிய நிதி அளவுகோல்களில் எதிர்மாறான திசையில் பயணித்ததாக வெள்ளை அறிக்கை வாதிடுகிறது.

இந்தியாவின் மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட, நகரமயமாக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பன்முகப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், இந்த சாதனைகளின் பின்னால் ஒரு நிதிசார் பலவீனம் உருவாகிக் கொண்டிருப்பதாக வெள்ளை அறிக்கை எச்சரிக்கிறது. எனவே ,தமிழகம் எதிர்கொள்ளும் சவால் வெறும் நிதிசார் சவால் அல்ல. அது வளர்ச்சி சார்ந்த சவால், அரசியல் சவால் மற்றும் எதிர்கால தலைமுறைகளைப் பாதிக்கக்கூடிய சவாலாகும்.

உருவாகி வரும் நிதிசார் அழுத்தம்

2021-ஆம் ஆண்டில் சுமார் ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் மொத்த பொறுப்புகள், 2026-ஆம் ஆண்டில் ரூ.10 லட்சம் கோடியை அணுகும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. கடனின் அளவை விட அதனைச் சேவையாற்றும் செலவுதான் அதிக கவலையை ஏற்படுத்துகிறது. 2021-22-ஆம் ஆண்டில் சுமார் ரூ.41,500 கோடியாக இருந்த வட்டி செலவினம், 2025-26-ஆம் ஆண்டில் ரூ.67,000 கோடியைத் தாண்டியுள்ளது.

அதாவது மாநிலம் திரட்டும் ஒவ்வொரு வருவாயிலும் கணிசமான பகுதி புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அல்ல, பழைய கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்கே செலவாகிறது. அதிலும் கவலைக்கிடமான விஷயம், தமிழகம் தற்போது புதிய சொத்துகளை உருவாக்குவதற்காக செலவிடுவதை விட பழைய கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக அதிகமாக செலவிடுகிறது என்பதுதான்.

ஒப்பீட்டில் உண்மையான எச்சரிக்கை

இந்த வெள்ளை அறிக்கையின் மிகவும் முக்கியமான அம்சம் தமிழகத்தின் கடன் அளவு மட்டுமல்ல; அதன் ஒப்பீட்டு செயல்திறனாகும். ஏனெனில் தமிழகத்துக்கு பொருளாதார திறன் இல்லாதது பிரச்சினையல்ல. அந்த திறனை நிதி வலிமையாக மாற்றுவதில் ஏற்பட்ட குறைபாடுகள்தான் முக்கியமான கேள்வியாக எழுகின்றன.

வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டும் முக்கிய பிரச்சினைகள்

வெள்ளை அறிக்கை ஆறு முக்கிய கவலைகளை அடையாளப்படுத்துகிறது. முதலாவதாக, மாநிலத்தின் மொத்தக் கடன் மற்றும் பொறுப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரண்டாவது, வட்டி செலவினங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. மூன்றாவது, வருவாய் பற்றாக்குறை ஒரு தற்காலிக பிரச்சினையாக இல்லாமல் கட்டமைப்பு சார்ந்த பிரச்சினையாக மாறியுள்ளது.

நான்காவது, மாநிலத்தின் சொந்த வருவாய் திரட்டும் திறன் பலவீனமடைந்துள்ளது. ஐந்தாவது, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலவுகள் போன்ற கட்டாயச் செலவுகள் அரசின் வருவாயில் பெரும் பங்கைக் கைப்பற்றுகின்றன. ஆறாவது, மின்சார வாரியம், போக்குவரத்து கழகங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை மாநிலத்தின் எதிர்கால நிதிசார் சுமையை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால், தமிழகம் எதிர்கொள்ளும் நிதிசார் சவால் தற்காலிகமானதல்ல; அது கட்டமைப்பு ரீதியான சவாலாக மாறியிருப்பது தெளிவாகிறது.

ஏன் இது முக்கியமானது?

அதிக கடன் மற்றும் தொடர்ச்சியான பற்றாக்குறைகளால் பாதிக்கப்பட்ட அரசுகள் படிப்படியாக தங்களின் கொள்கை சுதந்திரத்தை இழக்கத் தொடங்குகின்றன. ஆகவே, இங்கே எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உடனடியாக உருவாகும் நிதி நெருக்கடி அல்ல. மாறாக, மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை மெதுவாகக் குறைக்கும் தேக்கநிலையே உண்மையான கவலையாகும்.

பொருளாதார வரலாறு நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. பொருளாதாரங்கள் பெரும்பாலும் திடீரென வீழ்ச்சியடைவதில்லை. வளர்ச்சி வேகம் மெல்ல மந்தமடைந்து, உள்கட்டமைப்பு திட்டங்கள் பின்னடைவைச் சந்தித்து, முதலீட்டு ஓட்டம் குறைந்து, பொதுச் சேவைகளின் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசுகள் எதிர்கால வளர்ச்சியைத் திட்டமிடுவதை விட நிதிச் சுமைகளை நிர்வகிப்பதிலேயே கவனம் செலுத்தும் சூழல் உருவாகிறது. இதுவே வெள்ளை அறிக்கை மறைமுகமாக எச்சரிக்கும் அபாயமாகும்.

அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட செலவுகளுக்குச் செலவாகும்போது, எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடுகள் குறையத் தொடங்குகின்றன. இதனால் ஒரு தீய சுழற்சி உருவாகிறது. முதலீடு குறைகிறது. வளர்ச்சி மந்தமடைகிறது. வருவாய் உயர்வு குறைகிறது. பற்றாக்குறை அதிகரிக்கிறது. அதனை சமாளிக்க மேலும் கடன் பெறப்படுகிறது. புதிய கடன்கள் எதிர்கால வட்டி சுமையை அதிகரிக்கின்றன. இந்தச் சுழற்சியை உடைக்க திட்டமிட்ட நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

மக்கள் தொகை மாற்றம் – கவனிக்கப்படாத சவால்

தமிழ்நாடு எதிர்கொள்ளும் மற்றொரு முக்கியமான சவால் மக்கள் தொகை மாற்றமாகும். மாநிலம் வேகமாக முதியோர் சமூகமாக மாறி வருவதால், சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியச் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், நலத்திட்டங்களின் மீதான அரசின் பொறுப்பும் மேலும் விரிவடையும்.

அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வேலைவாய்ப்பு வயதினரின் பங்கு குறையத் தொடங்குவதால், வருவாய் ஈட்டும் திறனுக்கும் அரசின் செலவுத் தேவைகளுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது எதிர்காலத்தில் மிகப் பெரிய சவாலாக மாறக்கூடும். இது வெறும் மக்கள் தொகை விவாதமல்ல. எதிர்கால நிதி திட்டமிடலின் மையக் கேள்வியாக மாறவிருக்கிறது.

அரசியல் பரிமாணம்

ஒரு வலுவான நிதி அடித்தளம் இல்லாமல் எந்த அரசும் நீண்ட காலத்திற்கு நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் பொதுச் சேவைகளைத் தொடர முடியாது. எந்த அரசு இந்த நிலையை உருவாக்கியது என்பது முக்கியமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமான கேள்வி:

இந்த நிலைக்கு நம்பகமான தீர்வை வழங்கப் போவது யார்?

வெள்ளை அறிக்கை எழுப்பும் மிக முக்கியமான அரசியல் கேள்வி இதுவே.

நடவடிக்கை இல்லை எனில் நடப்பது என்ன?

திருத்த நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டால், தமிழகம் ஓர் ஆபத்தான சுற்றுவட்டத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. கடன் அதிகரிக்கும், வட்டி செலவுகள் உயரும், கட்டாயச் செலவுகள் பெருகும், அரசின் நிதி நெகிழ்வுத்தன்மை குறையும். எதிர்கால அரசுகள் புதிய திட்டங்களை உருவாக்குவதை விட பழைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவே அதிக நேரமும் வளங்களும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

இதன் விளைவாக உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான முதலீடுகள் பாதிக்கப்படலாம். எனவே செயலற்றிருப்பதற்கான விலை உடனடி நெருக்கடியாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது மாநிலத்தின் வளர்ச்சி திறனை மெதுவாக சிதைக்கும். இதை தடுக்க திருத்த நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்படுமா என்பதுதான் உண்மையான கேள்வி.

நிதி மீட்சிக்கான செயல்திட்டம்

தமிழகத்தின் பொருளாதார வலிமைகள் இன்னும் போதுமான அளவில் உள்ளன. எனவே நோக்கம் செலவுக் குறைப்போ அல்லது கடுமையான சிக்கனமோ அல்ல. நிலையான வளர்ச்சியுடன் கூடிய நிதி மீட்பே இலக்காக இருக்க வேண்டும். நீண்டகால நிதிசார் சீர்திருத்தத்திற்கான முதல் படியாக, ஒரு சுயாதீனமான ‘தமிழக பொருளாதார மற்றும் நிதி மீட்பு ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும்.

பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள், முன்னாள் நிர்வாகிகள், நிதி வல்லுநர்கள் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்கள் இதில் இடம்பெற வேண்டும். கடன் மேலாண்மை, வருவாய் உயர்வு, பொதுத்துறை சீர்திருத்தம், முதலீட்டு விரிவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான பத்து ஆண்டு செயல்திட்டத்தை இந்த ஆணையம் உருவாக்க வேண்டும்.

வரி விகிதங்களை உயர்த்துவதற்குப் பதிலாக, வருவாய் கசிவுகளைத் தடுக்க வேண்டும். தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இணக்கத்தன்மை கண்காணிப்பு மற்றும் தரவு ஒருங்கிணைப்பு போன்றவை வருவாய் திரட்டலை மேம்படுத்த உதவும். குறிப்பாக மின்சாரத் துறை உடனடி கவனம் பெற வேண்டும்.

மின்சார இழப்புகளைக் குறைத்தல், கட்டண வசூலை மேம்படுத்தல், நிர்வாக நவீனமயமாக்கல் மற்றும் நிதி பொறுப்புணர்வை அதிகரித்தல் ஆகியவை முக்கியம். மூலதன முதலீடுகளைப் பாதுகாத்து விரிவுபடுத்தப்பட வேண்டும். நிதி சீர்திருத்தம் என்ற பெயரில் வளர்ச்சி முதலீடுகள் பாதிக்கப்படக் கூடாது. சாலைகள், துறைமுகங்கள், தொழிற்பூங்காக்கள், குடிநீர் அமைப்புகள், மின்சார பரிமாற்ற வலையமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகள் போன்ற துறைகளில் முதலீடு தொடர வேண்டும்.

தமிழ்நாடு எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்கும் உயர்தொழில்நுட்ப உற்பத்தி, மேம்பட்ட தொழில் துறைகள், பசுமை ஆற்றல் மற்றும் அறிவுசார் பொருளாதாரத் துறைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். கடன் குறைப்பு, வருவாய் பற்றாக்குறை நீக்கம், பொதுத்துறை சீர்திருத்தம் மற்றும் முதலீட்டு வளர்ச்சி ஆகியவற்றுக்கான தெளிவான இலக்குகளுடன் பத்து ஆண்டு நிதி வரைபடம் வெளியிடப்பட வேண்டும்.

அரசின் செலவுகள் எவ்வளவு என்பதைக் காட்டிலும் அதன் விளைவுகள் என்ன என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் சமூக நீதியையும் செயல்திறனையும் ஒரே நேரத்தில் மேம்படுத்த முடியும்.

தமிழ்நாடு தனது நவீன வரலாற்றில் பல சவால்களை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. விவசாய மாநிலத்திலிருந்து தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளில் முன்னணியில் இருக்கும் மாநிலமாக அது வளர்ந்துள்ளது.

வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டும் சவால்கள் தீவிரமானவை. ஆனால் அவை தீர்க்க முடியாதவை அல்ல. தமிழகத்திடம் வலுவான பொருளாதார அடித்தளம் உள்ளது. திறமையான மனிதவளம் உள்ளது. நிர்வாக அனுபவம் உள்ளது. தொழில் துறை திறன் உள்ளது. தேவையானது அரசியல் மனவலிமை, நிர்வாக ஒழுங்கு மற்றும் நீண்டகால திட்டம் மட்டுமே.

இந்த வெள்ளை அறிக்கையின் உண்மையான மதிப்பு பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதில் இல்லை. மாறாக, தமிழகத்துக்கு ஒரு புதிய திசையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குவதில்தான் உள்ளது. மாநிலம் இந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்தினால், இந்த வெள்ளை அறிக்கை நிதிசார் வீழ்ச்சியைப் பதிவு செய்த ஆவணமாக அல்லாமல், தமிழகத்தின் அடுத்த பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக வரலாற்றில் நினைவுகூரப்படலாம்.