












முதல்வர் விஜய் மற்றும் ராஜ் தாக்கரே
Updated on
:
1 min read
மும்பை: நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் நீட் தேர்வு முறையை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் விஜய்யின் நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் தேசிய அளவில் நடைபெற்ற மருத்துவ கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு பயிற்சியில் அளிக்கும் நிறுவனங்கள் சில கூட்டு களவாணிகளாக உள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2024-ல் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த போது மத்திய அரசு செய்தது என்ன? தேர்வை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
நீட் தேர்வு முறையே தேவையற்றது. இதை கடந்த 2016 முதல் நான் சொல்லி வருகிறேன். இந்த தேர்வு பணம் படைத்தவர்களுக்கானதாக உள்ளது. தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இதைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் விஜய்யும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதற்கான முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் ஐந்து தென் மாநிலங்களில் (மகாராஷ்டிரா உட்பட) மொத்தம் 350 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதுவே வட பகுதியில் உள்ள பெரிய மாநிலங்களில் 180 மருத்துவக் கல்லூரிகள்தான் உள்ளன. இதன் மூலம் வட மாநிலங்களை மாணவர்கள், தென் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பலன் அடைகின்றனர்.
அதனால் இந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதேபோல் நீட் தேர்வில் முறைகேடு அரங்கேறி வரும் சூழலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும், மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் தென் மாநிலங்களுடன் இணைந்து நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டி குரல் கொடுக்க வேண்டும்” என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。