惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
B
Blog
MyScale Blog
MyScale Blog
V
V2EX
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
量子位
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
罗磊的独立博客
L
LangChain Blog
I
InfoQ
云风的 BLOG
云风的 BLOG
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
V
Visual Studio Blog
月光博客
月光博客
The Cloudflare Blog
雷峰网
雷峰网

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-04-11 · via hindutamil

Updated on: 

அலைகள் இல்லாத கடலும் இல்லை, கவலைகள் இல்லாத மனிதனும் இல்லை, இதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் எதிர் கொண்டு வாழும் மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு 11-ம் ராசியில் லாப ஸ்தானத் தில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகளெல்லாம் இனி நிறைவேறும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். நல்ல லாபமும் உண்டு. திடீர் பண வரவு உண்டு. கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு பிரபலங்களின் உதவியுடன் நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். அடிக்கடி கோபப்படாதீர்கள். வயிற்று வலி, மூச்சுத் திணறல் நீங்கும்.

குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குருபகவான் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிகழும். சகோதர வகையில் மனக் கசப்புகள் வரும். சொத்துப் பிரச்சினைகள் தலை தூக்கும். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு பகவான் 4-ம் வீட்டுக்கு செல்வதால் சொந்த பந்தங்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அரசு வேலைகளை அலைந்து திரிந்து முடிப்பீர்கள்.

புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. தாயாருக்கு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். 31.10.26 முதல் 25.01.27 வரை குரு பகவான் அதிசாரமாக 5-ம் வீட்டுக்கு செல்வதால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலையுயர்ந்த ஆபரணம்- அணிகலன்களை வாங்குவீர்கள்.

ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 11-ம் வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் தொடர்வதால் வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சொந்த ஊரில் கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் இனிவரும். கடன் தொல்லைகள் அடியோடு விலகும். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 10-ம் வீட்டுக்கும், கேது 4-ம் வீட்டுக்கும் வருவதால் அரைகுறை யாக நின்ற வேலைகள் முழுமையடையும்.

சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: உங்களின் விரய வீடான 12-ல் சனிபகவான் தொடர்வதால் ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள். அரசு விஷயங்களில் கவனம் தேவை. அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். அண்டை வீட்டாரின் தேவையறிந்து உதவி செய்வீர்கள். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் அமைதி திரும்பும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அடகில் வைத்திருந்த நகைகளை மீட்பீர்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கன்னிப் பெண்களுக்கு கல்லூரி படிப்பில் வெற்றியுண்டு. தடைபட்ட கல்யாணம் இனி விமர்சையாக நடக்கும். மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

புரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையை அதிகப்படுத்த புது யுக்திகளை கையாளுவீர்கள். வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. கூட்டுத்தொழில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் ஆதாயம் பெறும். எலக்ட்ரிக்கல், உணவு வகைகளால் அதிக லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும். பணிச் சுமை அதிகரிக்கும். கணினி துறையினருக்கு அயல்நாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு திறமைக்கேற்ப வாய்ப்பு கிட்டும். மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு செலவுகளாலும், பயணங்களாலும் உங்களை அலைக்கழித்தாலும், பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக் கொடுக்கும்.

பரிகாரம்: விழுப்புரத்திலிருந்து (30 கி.மீ) திருக்கோவிலூர் செல்லும் வழியில் அரகண்டநல்லூரில் இறங்கி கிழக்கே 2 கிமீ தொலைவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை ஒரு சனிக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.