惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
博客园 - 【当耐特】
IT之家
IT之家
M
MIT News - Artificial intelligence
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog
F
Fortinet All Blogs
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
G
Google Developers Blog
Vercel News
Vercel News
爱范儿
爱范儿
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
I
InfoQ
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MongoDB | Blog
MongoDB | Blog
A
About on SuperTechFans
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
C
Check Point Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செவிலியர் ப...
2026-05-24 · via hindutamil

திருச்சி அரசு மருத்துவமனை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் எஸ்.ரமேஷ். உடன் சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்.ரவிசங்கர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள். (உள்படம்) உயிரிழந்த சீதாலட்சுமி.படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on

2 min read

திருச்சி: ​திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் அறுவை சிகிச்​சைக்கு அனு​ம​திக்​கப்​பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி திடீரென உயி​ரிழந்​தார். தவறான சிகிச்​சை​யால் அவர் உயி​ரிழந்​த​தாக புகார் தெரி​வித்து உறவினர்​கள், சக மாணவி​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களு​டன் அமைச்​சர் ரமேஷ் பேச்​சு​வார்த்தை நடத்தி சமா​தானப்​படுத்​தி​னார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் குளத்​தூர் வட்​டம் மணக்​குடிப்​பட்​டியைச் சேர்ந்​தவர் சேட்​டு. விவ​சாய தொழிலா​ளி. இவரது மகள் சீதாலட்​சுமி(19), திருச்சி கிஆபெ விஸ்​வ​நாதம் அரசு மருத்​து​வக் கல்​லூரி நிர்​வாகத்​தின் கீழ் இயங்கி வரும் அரசு செவிலியர் பயிற்​சிப் பள்​ளி​யில் 3-ம் ஆண்டு டிப்​ளமோ படிப்பு படித்து வந்​தார்.

இந்​நிலை​யில், மூக்​கில் வளர்ந்​திருந்த சதை பிரச்​சினைக்​காக சீதாலட்​சுமி திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்ந்​தார். இதையடுத்து அவருக்கு நேற்று முன்​தினம் அறுவை சிகிச்சை செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. இதற்​காக அவருக்கு மயக்க மருந்து செலுத்​தி​ய​போது படபடப்பு அதி​க​மாகி​யுள்​ளது. இதனால், மயக்​கநிலை​யில் இருந்து மீட்​டெடுக்​கும் முயற்​சி​யில் மருத்​து​வர்​கள் ஈடு​பட்​டும், பலனின்றி அன்று இரவு சீதாலட்​சுமி உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சை​யால் தான் சீதாலட்​சுமி​ உயி​ரிழந்​த​தாக புகார் தெரி​வித்து அவரது பெற்​றோர், உறவினர்​கள், சக மாணவி​கள் திருச்சி அரசு மருத்​து​வ​மனை முன்பு நேற்று மறியலில் ஈடு​பட்​டனர். 2 மணி நேரத்​துக்​கும் மேலாக போராட்​டம் நீடித்த நிலை​யில், அவர்​களிடம் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் உடன்​பாடு ஏற்​பட​வில்​லை.

தகவலறிந்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் எஸ்​.ரமேஷ், மத்​திய மண்டல ஜ.ஜி. பால​கிருஷ்ணன், சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் எம்​.ர​விசங்​கர், ஆட்​சி​யர் வே.சர​வணன் உள்​ளிட்​டோர் அங்கு சென்று பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்க அரசு குழு அமைத்​துள்​ள​தாக அமைச்​சர் ரமேஷ் தெரி​வித்​தார். இதையடுத்​து, அவர்​கள் மறியலை கைவிட்​டு, மருத்​து​வ​மனை வளாகத்​துக்​குள் போராட்​டத்​தில் ஈடு​பட்டனர்.

பின்​னர், அமைச்​சர் ரமேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “இந்த சம்​பவம் தொடர்​பாக தற்​காலிக நடவடிக்கை எடுக்க ஆட்​சி​யருக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. முதல்​வர், சுகா​தா​ரத் துறை அமைச்​சரின் அறி​வுறுத்​தலின் பேரில் சிறப்பு விசா​ரணைக் குழு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. அந்​தக் குழுவின் விசா​ரணை​யில் மருத்​து​வர்​கள் மீது தவறு இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டால் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்றார்.

உயர்​மட்ட குழு அமைப்பு: இந்த சம்​பவம் தொடர்​பாக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் திருச்​செங்​கோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலியர் பயிற்சி மாணவி உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த சென்னை ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை கண்​காணிப்​பாளர் பாஸ்​கர் தலை​மை​யில் 4 மருத்​து​வர்​கள் கொண்ட உயர்​மட்​டக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அக்​குழு​வினர் திருச்​சிக்கு விரைந்​துள்​ளனர். அவர்​கள் விசா​ரணை நடத்தி அறிக்கை வழங்​கு​வர். அதன் அடிப்​படை​யில் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

மக்​கள் பிர​தி​நி​தி​கள் தவிர மற்ற யாரும் மருத்​து​வ​மனை​களில் ஆய்வு நடத்​தக்​கூ​டாது. போலீ​ஸாரை சுதந்​திர​மாக செயல்​பட​விட்​டாலே குற்​றங்​கள் குறைந்​து​விடும். முன்பு இருந்த அரசில் அரசி​யல் தலை​யீடு அதி​க​மாக இருந்​தது. ஆனால், இப்​போது அது​போல் இல்​லை. எங்கு குறை இருந்​தா​லும் சரி செய்ய அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொள்​வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்​.

ஆட்சியரிடம் முறையீடு: போராட்டத்தில் ஈடுபட்ட செவிலிய மாணவிகளில் 15 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.சரவணனை சந்தித்து, ‘உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு,குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மயக்கவியல் மருத்துவரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செவிலிய மாணவிகள் கலைந்து சென்றனர்.