惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 【当耐特】
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
C
Check Point Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Blog — PlanetScale
Blog — PlanetScale
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏
Google DeepMind News
Google DeepMind News
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
宝玉的分享
宝玉的分享
Recent Announcements
Recent Announcements
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园_首页
J
Java Code Geeks
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
I
InfoQ
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கவலைகளைத் தின்னும் பொம்மைகள்! | குவாதேமாலா நாட்டுப்புறக் கதை
2026-05-13 · via hindutamil

Updated on

2 min read

குவாதேமாலாவின் மேற்கு மலைப்பகுதிகளில் மேகங்கள் நிலத்தைத் தொட்டுச் செல்லும் குளிர்ந்த கிராமத்தில், யாமிலெத் வாழ்ந்து வந்தாள். அவ்வூர் மக்கள் ஏழைகள். அவர்களின் முதன்மைத் தொழில் மலைச்சரிவுகளில் மக்காச்சோளம் பயிரிடுவதும், வண்ணமயமான ஆடைகளை நெய்வதும்தான்.

யாமிலெத்தின் அப்பா நீண்ட நாள்களுக்கு முன்பே வேலை தேடி நகரத்திற்குச் சென்றுவிட்டார். யாமிலெத் தன் அம்மா, பாட்டியுடன் ஒரு வைக்கோல் குடிசையில் வசித்துவந்தாள்.

யாமிலெத்தின் பாட்டி சிறந்த நெசவாளி. ஆனால், முதுமையின் காரணமாகக் கைகள் நடுங்கியதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. குடும்பத்தின் வருமானம் குறைந்தது. வீட்டில் இருந்த மக்காச்சோளமும் தீர்ந்துவிட்டது.

“ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லையே... நாளைக்கு என்ன செய்வது? எவ்வளவு நாள் பட்டினி கிடக்க முடியும்?” என்று யாமிலெத்தின் அம்மா புலம்பினார். “வேலை தேடி நகரத்துக்குப் போனவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லையே?” என்று பாட்டி கவலைப்பட்டார்.

வீட்டின் கஷ்டங்களைப் பார்த்து யாமிலெத் வருத்தப்பட்டாள். அறையின் மூலையில் கிடந்த பழைய துணித் துண்டுகள், வண்ண நூல்கள் அவள் பார்வையில் பட்டன. அவற்றைப் பார்த்ததும் பாட்டி ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது. ‘உலகத்தோர் கவலைகளைப் போக்க தேவதைகள் சிறிய உருவங்களாக வருவார்கள்.’

யாமிலெத்துக்கு ஒரு யோசனை தோன்றியது. அவள் சிறிய குச்சிகளை இணைத்து உடல், கைகள், கால்களுக்கான உருவமாக ஆக்கினாள். அதில் துண்டுத் துணிகளைக் கட்டி, மனித பொம்மைகளைச் செய்தாள். அவற்றுக்கு அழகிய ஆடைகளையும் தைத்து அணிவித்தாள்.

ஒரு விரல் அளவே இருந்த அந்தச் சிறிய பொம்மைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தன. மொத்தம் ஆறு பொம்மைகள். அவற்றின் முகங்களை வண்ணத்தால் வரைந்தாள். அவை பார்ப்பதற்கு அழகாகவும், கவலையற்றுச் சிரிப்பது போலவும் இருந்தன.

அன்று இரவு பாட்டி தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தார். யாமிலெத் அந்தச் சிறிய பொம்மைகளை அவரிடம் கொடுத்தாள். “பாட்டி, இவை துயரம் தீர்க்கும் தேவதைகள். உங்கள் கவலைகளை இந்தப் பொம்மைகளிடம் ரகசியமாகச் சொல்லுங்கள்.

பிறகு அவற்றை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டுத் தூங்குங்கள். இந்தப் பொம்மைகள் உங்கள் கவலைகளைத் தின்றுவிடும்” என்று நம்பிக்கையோடு சொன்னாள் யாமிலெத். “பொம்மைகள் எப்படி மனிதர்களின் கவலைகளைத் திங்க முடியும்?” என்று சிரித்தார் பாட்டி.

ஆனால் யாமிலெத்தின் கண்களில் இருந்த நம்பிக்கையைக் கண்டு, “சரி, முயல்கிறேன்” என்றார். ஒவ்வொரு பொம்மையையும் கையில் எடுத்து, “நாளை உணவுக்கு வழிகாட்டு“, “என் கைகளின் நடுக்கத்தை நிறுத்து“, “என் மகனை வீட்டுக்கு அனுப்பு” என்று தன் இதயத்தின் சுமைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்தார் பாட்டி. பின் அவற்றை ஒரு சிறிய பையில் போட்டுத் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினார்.

பல மாதங்களுக்குப் பிறகு அன்று பாட்டி நிம்மதியாக உறங்கினார். காலை உற்சாகத்தோடு எழுந்தார். “யாமிலெத்! இன்று என் மனம் மிகவும் லேசாக இருக்கிறது. எதைக் கண்டும் கவலையோ பயமோ இல்லை. ஏதோ ஒரு பலம் எனக்குள் வந்தது மாதிரி இருக்கிறது! நிஜமாகவே உன் பொம்மைகள் என் கவலைகளைத் தின்றுவிட்டன என்று நினைக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் பாட்டி.

என்ன ஆச்சரியம், அன்று மதியமே யாமிலெத்தின் அப்பா நகரத்திலிருந்து நிறைய உணவு வகைகளுடனும் பணத்துடனும் வீட்டுக்கு வந்தார். சில நாள்களில் பாட்டியின் கைகளில் இருந்த நடுக்கம் ஓரளவு குறைந்து, அவர் மீண்டும் நெசவு செய்ய ஆரம்பித்தார். இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது.

“யாமிலெத்தின் பொம்மைகள் கவலைகளைத் தீர்க்கின்றன. அவை மந்திரப் பொம்மைகள்” என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். கிராமத்தில் இருந்த ஒவ்வொரு வரும் யாமிலெத்தைத் தேடி வந்தனர். ஏனென்றால், கவலையோ வருத்தங்களோ இல்லாத மனிதர்களே இல்லையே.

மழை பெய்யாமல் பயிர்கள் வாடிய விவசாயிகள், வறுமையால் துன்புறும் ஏழைகள், பணமும் நகைகளும் திருடுபோய்விடுமோ என அஞ்சிய பணக்காரர்கள், நோய்வாய்ப் பட்டவர்களின் குடும்பத்தினர் எனப் பலதரப்பட்டவர்களும் யாமிலெத்திடம் வெவ்வேறு கவலை களுக்காகப் பொம்மைகளைக் கேட்டனர்.

யாமிலெத் யாரிடமும் பணம் வாங்காமல், பழைய துணித் துண்டுகளைக் கேட்டு வாங்கி, அவர்களுக்குப் பொம்மைகளைச் செய்து கொடுத்தாள். அவர்களிடம், “கவலைகளை உங்களுக்குள் வைத்துக்கொண்டால் அவை உங்களைத் தின்றுவிடும்.

அவற்றை இந்தப் பொம்மைகளிடம் சொன்னால், அவை தின்றுவிடும்” என்று சொன்னாள் யாமிலெத். காலப்போக்கில் மற்றவர்களும் இந்தப் பொம்மைகளைச் செய்யத் தொடங்கினர்.

‘கவலை தீர்க்கும் பொம்மைகள்’ குவாதேமாலாவின் குடிசைத் தொழிலாக ஆனது. இன்று குவாதேமாலாவி லிருந்து உலகம் முழுவதும் இந்தப் பொம்மைகள் (Worry Dolls) ஏற்றுமதியாகின்றன.

இன்றும் குவாதேமாலாவின் குளிர்ந்த இரவு நேரத்தில், ஆயிரக்கணக்கான தலையணைகளுக்கு அடியில் அந்தப் பொம்மைகள் மனிதர்களின் கவலைகளைத் தின்று கொண்டிருக்கின்றன! இதனால் அந்த மக்கள் காலையில் புத்துணர்ச்சியோடு விழிக்கின்றனர்!