惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
N
Netflix TechBlog - Medium
F
Fortinet All Blogs
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog RSS Feed
小众软件
小众软件
The GitHub Blog
The GitHub Blog
S
SegmentFault 最新的问题
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
B
Blog
H
Help Net Security
D
Docker
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
罗磊的独立博客
月光博客
月光博客
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52% பணிகள் நிறைவு: சென...
மு.வேல்சங்கர் · 2026-06-01 · via hindutamil

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் வடபழனி - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. (கோப்புப் படம்)

Updated on: 

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக, ஏப்​ரல் வரை 52.55 சதவீதம் மெட்ரோ பாதை அமைக்​கும் பணி​கள் நிறைவடைந்​துள்​ள​தாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்​தடத்​தி​லும், மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்​தடத்​தி​லும் பணி​கள் நடை​பெறுகின்​றன. மொத்​தம், 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிட்​டு, பணி​கள் நடை​பெறுகின்​றன.

இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்​கப் பாதை​யில் 43 சுரங்க ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. மெட்ரோ ரயில் கட்​டு​மானப் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்​பரில் தொடங்​கியது. சுரங்​கப் பாதை பணியை பொருத்​தவரை, மாதவரத்​தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபரில் தொடங்​கியது.

இதைத் தொடர்ந்​து, பசுமை வழிச்​சாலை, கலங்​கரை விளக்​கம், சேத்​துப்​பட்​டு, பனகல் பூங்கா உட்பட பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி​கள் தொடங்​கின. பசுமைவழிச் சாலை - அடை​யாறு, சேத்​துப்​பட்டு - ஸ்டெர்​லிங் சாலை, அயனாவரம் - பெரம்​பூர், பனகல் பூங்கா - கோடம்​பாக்​கம் சுரங்​கப் பாதை பணி​கள் அடுத்​தடுத்து நிறைவடைந்​தன.

கலங்​கரை விளக்​கம் - மயி​லாப்​பூர், ராயப்​பேட்டை - ஆர்​.கே.​சாலை, பசுமைவழிச் சாலை - மந்​தைவெளி ஆகிய சுரங்​கப்​பாதை பணி​களும் நிறைவடைந்​துள்​ளன. இதுத​விர, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இது​போல, உயர்​மட்​டப் பாதை பணி பொருத்​தவரை, 4-வது வழித்​தடத்​தில் பூந்​தமல்லி - போரூர்- வடபழனி தடத்​தில் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. அதே நேரத்​தில், போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயில் நிலைய கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறுகின்​றன.

வடபழனி - கோடம்​பாக்​கம் பவர்​ஹவுஸ் பாதை​யில் தற்​போது தண்​ட​வாளம் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. பல இடங்​களி​லும் உயர்​மட்​டப் பாதை பணி​களும் மும்​முர​மாக நடை​பெறுகின்​றன.

இந்​நிலை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக, 52.55 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் முதல் மெட்ரோ ரயில் சேவை, 4-வது வழித்​தடத்​தில் பூந்​தமல்லி - போரூர்- வடபழனி தடத்​தில் விரை​வில் தொடங்​கும் என எதிர்​பார்க்​கிறோம்.

இதையடுத்​து, சென்னை வர்த்தக மையம் - போரூர் பணி​களை முடிக்க உள்​ளோம். போரூர்- கோயம்​பேடு ஆகிய உயர்​மட்​டப்​பாதை பணி​களும் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் உயர்​மட்ட பாதை, சுரங்​கப் பாதை சேர்த்து நடப்​பாண்​டில் ஏப்​ரல் மாதம் வரை ஒட்​டுமொத்​த​மாக 52.55 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன.

குறிப்​பாக, 3-வது வழித் தடத்​தில் உயர்​மட்ட பாதைப் பணி​கள் 42.71 சதவீத​மும், சுரங்​கப் பாதை பணி​கள் 45.46 சதவீத​மும் நிறைவடைந்​துள்​ளன. 4-வது வழித் தடத்​தில் 60 சதவீதத்​துக்கு மேலாக​வும், 5-வது வழித்​தடங்​களில் 50 சதவீதத்​துக்கு மேலாக​வும் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. பல இடங்​களில் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

சட்​டப்​பேரவை தேர்​தல் காரண​மாக, மேற்​கு​வங்​கம், அஸ்​ஸாம் உள்​ளிட்ட வட மாநில தொழிலா​ளர்​கள் 2 மாதங்​களாக சொந்த ஊருக்கு சென்று இருந்​தனர். தற்​போது, பெரும்​பாலான தொழிலா​ளர்​கள் திரும்பி வந்​துள்​ளனர்.

மீண்​டும் பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், வரும் 2027-ல் அனைத்து உயர்​மட்​டப்​பாதை பணிகளும்​, 2028-ம்​ ஆண்​டுக்​குள்​ அனைத்​து சுரங்​கப்​பாதை பணிகளும்​ முடிக்​க இலக்​கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.