惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
罗磊的独立博客
M
MIT News - Artificial intelligence
G
Google Developers Blog
V
V2EX
D
Docker
博客园_首页
The Cloudflare Blog
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
博客园 - 司徒正美
J
Java Code Geeks
L
LangChain Blog
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
小众软件
小众软件
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் வினாத்தாள் மீண்டும் கசியாமல் இருக்க தேர்வு மையங்களில...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ஜூன் 21-ம் தேதி நீட் மறு​தேர்வை எந்​தப் புகாரும் இல்​லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) தயா​ராகி வருகிறது. வினாத்​தாள் கசிவதைத் தடுக்​க​வும், நீட் தேர்வு செயல்முறை​யின் மீது மீண்​டும் நம்​பிக்​கையை ஏற்​படுத்​த​வும் இது​வரை இல்​லாத அளவில் பாது​காப்பு ஏற்​பாடு​களை என்​டிஏ அறி​முகப்​படுத்தி உள்​ளது.

குறிப்​பாக டெலிகி​ராம் செயலிக்கு தடை மற்​றும் வினாத்​தாள்களைக் கொண்டு செல்ல இந்​திய விமானப் படை சேவையைப் பயன்​படுத்​தப்​படு​வது உள்​ளிட்ட முக்​கிய நடவடிக்​கை​களின் விவரம் வரு​மாறு: கடந்த நீட் தேர்​வின் போது ஒரு கும்பல் டெலிகி​ராம் செயலியைப் பயன்​படுத்தி வினாத்​தாள்களைக் கசி​ய​விட்​டது விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. மீண்​டும் அது​போல் ஒரு சம்​பவம் நிகழ்​வதைத் தடுக்க, ஜூன் 22ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு மத்​திய அரசு தற்​காலிக​மாகத் தடை விதித்​துள்​ளது.

நீட் வினாத்​தாள் தயாரிப்​பில் ஈடு​பட்ட அனைத்​துப் பணியாளர்களும் ஜூன் 21-ம் தேதி வரை தனிமைப்​ படுத்தப்பட்டுள்​ளனர். அவர்​களை யாரும் தொடர்பு கொள்ள முடியாத​படி ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிப்பில் உள்​ளனர். அவர்​கள் செல்​போன், லேப்​டாப் மற்றும் தனிப்​பட்ட தகவல் தொடர்பு சாதனங்​களைப் பயன்படுத்த அனு​மதி இல்​லை. இணைய வசதி மற்​றும் வெளி உலகத் தொடர்​பு​கள் கடும் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரப்பட்டுள்​ளன.

நீட் வினாத்​தாள்​களைப் பாது​காப்​பாகக் கொண்டு செல்​வதற்​காக, முதல் முறை​யாக இந்​திய விமானப் படை (ஐஏஎப்) ஈடு​படுத்​தப்பட உள்​ளது. மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் ஜூன் 7 தேதி​யிட்ட உத்​தர​வின்​படி, வினாத்​தாள்​கள் அதன் உற்​பத்தி மையங்​களில் இருந்து புறப்​பட்​டது முதல் பயணம் முழு​வதும் மாநில போலீஸாரின் பாது​காப்​புடன் கொண்டு செல்​லப்​படும்.

மேலும், ஹைத​ரா​பாத் மற்​றும் அகம​தா​பாத் ஆகிய முதன்மை மையங்​களில் இருந்து தேர்வு நடத்​தப்​படும் 551 நகரங்​களின் மையங்​கள் வரையி​லான ஒட்​டுமொத்த பயணத்​தி​லும் சிஐஎஸ்​எஃப் மற்​றும் சிஆர்​பிஎஃப் வீரர்​கள் தீவிர​மாகப் பாது​காப்​பார்​கள். இவ்​விரு படைகளும் தங்​களின் சிறப்​புப் பிரிவு வீரர்​களை இதற்காக வழங்​கி​யுள்​ளன.

தேர்வு செயல்​முறை முழு​வதும் தொடர்ச்​சி​யான கண்​காணிப்பை உறுதி செய்ய, என்​டிஏ பல அடுக்கு பாது​காப்பு உள்​கட்​டமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளது. தேர்வு மையங்​கள் முழு​வதும் 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பாது​காப்​புப் பணி​யாளர்​கள் பணி​யமர்த்​தப்​பட்டு வருகின்​றனர்.

தேர்வு மையங்​களில் பயோமெட்​ரிக் வரு​கைப் பதிவு முறை​கள், முக அங்​கீ​காரம் மற்​றும் பயோமெட்​ரிக் சரிபார்ப்பு போன்ற மேம்பட்ட தொழில்​நுட்​பங்​கள் பொருத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்தச் செயல்​ முறையோடு உடனுக்​குடன் நேரலை​யாகக் கண்காணிக்​கும் சிசிடிவி கண்​காணிப்பு வசதி​யும் ஒருங்கிணைக்கப்​படு​கிறது.

தேர்​வர்​களின் அடை​யாளச் சோதனை​கள், ஆவண சரி​பார்ப்பு மற்றும் சோதனை​யிடும் நடை​முறை​கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஹால் டிக்​கெட்​டு​கள் மற்​றும் அடையாள ஆவணங்​களை மிக உன்​னிப்​பாகச் சரி​பார்க்​கு​மாறு அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

வினாத்​தாள் கசிந்​து​விட்​ட​தாகக் கூறப்​படும் வதந்​தி​களை மாணவர்​கள் நம்ப வேண்​டாம் என்று என்​டிஏ மீண்​டும் மீண்​டும் எச்​சரித்​துள்​ளதுடன், தேர்​வுக்கு முன்​பாக யாரும் வினாத்தாளைப் பெற முடி​யாது என்​றும் திட்​ட​வட்​ட​மாகக் கூறி​யுள்​ளது. தவறான தகவல்​களைப் பரப்​புபவர்​கள் அல்​லது மோசடி செய்ய முயற்​சிப்​பவர்​கள் மீது சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது.