惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
腾讯CDC
Y
Y Combinator Blog
L
LangChain Blog
B
Blog
U
Unit 42
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
Vercel News
Vercel News
雷峰网
雷峰网
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆதி திராவிடர் நலத்துறை இணைச் செயலர் மீதான நில அபகரிப்பு வ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: ஆதி திரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் அரசு இணைச் செயல​ரான எஸ்​தர் ராணி மீதான நில அபகரிப்பு வழக்​கில், 6 மாதங்​களில் விசா​ரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய போலீ​ஸாருக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது, இது தொடர்​பாக, சென்​னை, ராயபுரத்​தைச் சேர்ந்த வி.​முத்​துகுரு​சாமி என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ``சென்​னை, தண்​டை​யார்​பேட்​டை, கும்​மாளம்​மன் கோயில் தெரு​வில் நானும், எனது நண்​ப​ரான செல்​வ​ராஜூம் இணைந்து ஒரு கிர​வுண்டு நிலத்தை விலைக்கு வாங்​கினோம். செல்​வ​ராஜ் திடீரென இறந்து விட்ட நிலை​யில், அவரது மனைவி கிறிஸ்​டி​னா​வும், நானும் அந்த நிலத்தை பிரித்​துக் கொள்ள ஒப்​பந்​தம் செய்​தோம்.

ஆனால் கிறிஸ்​டி​னா, அவரது மகன் ஹெப்​பின் பால், ராயபுரத்​தைச் சேர்ந்த சாந்தி ஆகியோர் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் இணைச் செயல​ராக பதவி வகிக்​கும் அதி​காரி எஸ்​தர் ராணி​யின் துணை​யுடன், சென்னை மாநக​ராட்சி பொறி​யாளரை மிரட்டி போலி​யான ஆவணங்​கள் மூலம், எனக்கு சேர வேண்​டிய நிலத்​தை​யும் அபகரிக்க முயன்​றனர்.

இது தொடர்​பாக, நான் அளித்த புகாரின்​பேரில் கிறிஸ்​டி​னா, அதி​காரி எஸ்​தர் ​ராணி உள்​ளிட்​டோர் மீது காசிமேடு போலீ​ஸார் கடந்த 2024-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​தும் மேற்​கொண்டு எந்த விசா​ரணை​யும் நடத்​த​வில்​லை.

எனவே, இந்த வழக்​கில் விரை​வாக விசா​ரணை நடத்தி இறுதி அறிக்​கையை தாக்​கல் செய்ய போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும்'' எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்​கு, நீதிபதி எம். நிர்​மல்​கு​மார் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம். பூப​தி, தமிழக அரசின் உயர​தி​காரி​யான எஸ்​தர்​ராணி தனது அதி​காரத்தை தவறாக பயன்​படுத்தி அழுத்​தம் கொடுத்து வரு​வ​தால் மனு​தா​ரர் மன ரீதி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளார். தற்​போது, வழக்கை வாபஸ் பெறக்​கோரி மிரட்​டல்​களும் வரு​வ​தாக வாதிட்​டார்.

அப்​போது, தமிழக அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் லியோ​னார்டு அருள் ஜோசப் செல்​வம், ``இந்த வழக்​கில் விசா​ரணை முடிவடை​யும் தரு​வா​யில் உள்​ளது. 6 மாதங்​களுக்​குள் இறுதி விசா​ரணை அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும்'' என்​றார்.

இந்த விவாதங்களை கேட்ட நீதிப​தி, ``இந்த வழக்​கில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீதான விசா​ரணையை விரை​வாக முடித்​து, 6 மாத காலத்​துக்​குள் இறுதி வி​சா​ரணை அறிக்​கையை சம்​பந்​தப்​பட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​'' என உத்​தர​விட்​டு வழக்​கை முடித்து வைத்தார்.