惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
A
About on SuperTechFans
Microsoft Security Blog
Microsoft Security Blog
Y
Y Combinator Blog
罗磊的独立博客
J
Java Code Geeks
人人都是产品经理
人人都是产品经理
MongoDB | Blog
MongoDB | Blog
The GitHub Blog
The GitHub Blog
G
Google Developers Blog
U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky
Jina AI
Jina AI
F
Fortinet All Blogs
H
Help Net Security
B
Blog RSS Feed
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
C
Check Point Blog
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை முதல் ப...
2026-05-20 · via hindutamil

திருப்பராய்த்துறை பகுதியில் நேற்று ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் அருண் பிரசாத்.

Updated on

1 min read

திருச்சி: திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடும் பகுதிகளில், விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்னெடுத்துள்ளது.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இந்தச் சாலையின் ஒரு பக்கம் காவிரி ஆறும், மறுபக்கம் ரயில் பாதையும் அமைந்துள்ளதால் சாலையை போதிய அளவுக்கு அகலப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுவது குறித்து சாலைப் பயனீட்டாளர் நலக் குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன், சமூக ஆர்வலர் தங்கராசு உள்ளிட்டோர் அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் அருண் பிரசாத்தை சந்தித்து முறையிட்டனர்.

அதன்பின், திட்ட இயக்குநர் அருண் பிரசாத் சமீபத்தில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சில பகுதிகளில் சாலை அமைக்காமல் விடுபட்டிருப்பதை கண்டறிந்தார்.

தொடர்ந்து, வருவாய்த் துறை ஆவணங்களின்படி அந்தநல்லூர் முதல் பேட்டை வாய்த்தலை வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை முறையாக அளவீடு செய்து, சாலையின் இருபுறமும் எல்லைக் கற்கள் நட்டு, சாலையை அகலப்படுத்தவும், சாலையில் போதிய அகலம் உள்ள இடங்களில் வாகன நிறுத்துமிடம், சிறிய பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், இந்தச் சாலையில் மிகவும் ஆபத்தான பகுதியாகக் கருதப்படும் திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில், பள்ளி மாணவர்கள், பக்தர்கள் நலன் கருதி சிறிய நடை சுரங்கப் பாதை அமைக்கவும், சிறுகமணியில் பொதுமக்கள் சாலையை பாதுகாப்பாக கடக்க வசதியாக நடை மேம்பாலம் அமைக்கவும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் முக்கொம்பு பகுதியில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையுடன் இதர சாலைகள் இணையும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்ந்து, திருப்பராய்த்துறை சுங்கச் சாவடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல ஏதுவாக, சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்காமல் வாய்க்காலில் சென்று கலக்கும் வகையில் வடிகால் அமைக்குமாறு இந்தச் சாலையை பராமரிக்கும் சுங்க வசூல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான பகுதியில் சாலை விபத்துகள் நேரிடுவது கணிசமாக குறையும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.