惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
Blog — PlanetScale
Blog — PlanetScale
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
小众软件
小众软件
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
I
InfoQ
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Martin Fowler
Martin Fowler
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மீனாட்சியம்மன் கோய...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக தமிழில் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது உயர் நீதி​மன்​றத்​தின் முதலா​வது தமிழ் உத்​தர​வாகும்.

கரூர் வழக்​கறிஞர் தமிழ் ராஜேந்​திரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் கோயில் குட​முழுக்​கு​களில் சம்​ஸ்​கிருத மந்​திரங்​களுக்கு இணை​யாக தமிழ் மந்​திரங்​களும் ஓத வேண்​டும் என நிபுணர் குழு அறிக்கை அளித்​துள்​ளது. இந்த அறிக்​கை​யைப் பின்​பற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் பல்​வேறு வழக்​கு​களில் உத்​தர​விட்​டுள்​ளது.

அதன்​படி மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் செப்​.17-ல் நடை​பெறும் குட​முழுக்கு உட்பட அனைத்​துக் கோயில்​களில் நடை​பெற​விருக்​கும் குட​முழுக்​கு​களில் யாக​சாலை, கரு​வறை மற்​றும் கோபுர விமானங்​களில் சம்​ஸ்​கிருத மந்​திரங்​களு​டன் தமிழ் மந்​திரங்​களும் ஓத வேண்​டும் என உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனு​வில் நீதிபதி பரத சக்​கர​வர்த்தி நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: வரும் செப்​டம்​பர் மாதம் நடை​பெறும் மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு விழா​வில் சம்​ஸ்​கிருத மந்​திரங்​களு​டன் தமிழ் மந்​திரங்​களும் ஓதப்பட வேண்​டும் என மனு​தா​ரர் தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த கோரிக்கை தொடர்​பாக ஏற்​கெனவே ஒரு குழு அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், பல வழக்​கு​களில் உயர் நீதி​மன்​ற​மும் உத்​தரவு பிறப்​பித்​திருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அரசுத் தரப்​பில், மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு தேதி இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. தமிழ் மந்​திரங்​கள் ஓது​வது குறித்து எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் தாக்​கல் செய்​யப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் அமைந்​திருக்​கும் பொற்​றாமரைக் குளம், பண்​டைய நாட்​களில் சங்​கப் பலகை​யாகத் திகழ்ந்​துள்​ளது. இப்​பல​கை​யில் தமிழ் இலக்​கி​யங்​களும், காவி​யங்​களும் அரங்​கேற்​றப்​பட்​ட​தாக நம்​பப்​படு​கிறது.

இந்த வழக்​கின் முக்​கி​யத்​து​வம் கருதி அறநிலை​யத் துறை இணை ஆணை​யர், மீனாட்​சி​யம்​மன் கோயில் இணை ஆணை​யர் - செயல் அலு​வலர் ஆகியோரை நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து எதிர்​மனு​தா​ரர்​களாக சேர்க்​கிறது.

இரு​வரும் மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்​கில் தமிழில் மந்​திரங்​களை ஓது​வது தொடர்​பாக எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஜூன் 2-ல் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

உயர் நீதி​மன்​றங்​களில் வழக்​கு​கள் ஆங்​கிலத்​தில் தாக்​கல் செய்​யப்​படும். விசா​ரணை​யின்​போது பெரும்​பாலான வழக்​கறிஞர்​கள் ஆங்​கிலத்​தில் வாதிடு​வார்​கள். சிலர் தமிழில் வாதிடு​வர்.

இருப்​பினும் வழக்​கின் உத்​தர​வானது ஆங்​கிலத்​தில் தான் வெளி​யாகும். இந்த வழக்​கத்​துக்கு மாறாக மீனாட்​சி​யம்​மன் கோயில் வழக்​கின் உத்​தரவு ஆங்​கிலம் மற்​றும் தமிழில் இரணடிலும் வெளி​யாகி​யுள்​ளது. இது உயர் நீதி​மன்​றத்​தின் முதலா​வது தமிழ் உத்​தரவு ஆகும்.