惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
D
Docker
Google DeepMind News
Google DeepMind News
Y
Y Combinator Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Blog — PlanetScale
Blog — PlanetScale
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
U
Unit 42
博客园 - 【当耐特】
N
Netflix TechBlog - Medium
V
Visual Studio Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园_首页
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
T
Tailwind CSS Blog
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog
A
About on SuperTechFans
M
MIT News - Artificial intelligence
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ஆம் ஆத்மியில் டாக்ஸிக் சூழல்...” - பாஜகவில் இணைந்த ராகவ்...
2026-04-27 · via hindutamil

Updated on

2 min read

புது டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் நிலவுவதாகவும், சமீப ஆண்டுகளில் அக்கட்சியின் செயல்பாடுகள் பெரிய அளவில் சீர்குலைந்து விட்டதாகவும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ள மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சத்தா குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பின்னர் ராகவ் சத்தா வெளியிட்ட முதல் காணொலியில், “ ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்பிக்கைக்குரிய பணிவாய்ப்பைத் துறந்து அரசியலுக்கு வந்தேன். நான் ஒரு தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. நான் ஒரு அரசியல் கட்சி நிறுவப்படும்போதே அதன் உறுப்பினராக இணைந்தேன். எனது இளமைக் காலத்தின் பொன்னான பதினைந்து ஆண்டுகளை இந்தக் கட்சிக்காகவே அர்ப்பணித்தேன்.

ஆனால் இன்று, இந்தக் கட்சி முன்பு இருந்த அதே கட்சியாக இல்லை. இன்று, இந்தக் கட்சியில் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசுவதும் தடுக்கப்பட்டது. எங்களைச் செயல்படவே விடவில்லை. மேலும், பொதுமக்களுக்கு சேவையாற்றுவதை விடத் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகவே செயல்படும் சில ஊழல்வாதிகள், சமரசவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் அக்கட்சி சென்றுவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, “நான் சரியான மனிதனாக இருந்தாலும், ஒரு தவறான கட்சியில் இருக்கிறேனோ” என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.

கட்சியை விட்டு விலகுவது என முடிவெடுப்பதற்கு முன், அரசியலை விட்டு விலகுவது, கட்சிக்குள் இருந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பது அல்லது வேறொரு அரசியல் கட்சியில் இணைவது என மூன்று மாற்று வழிகளைப் பற்றி நான் தீவிரமாகச் சிந்தித்தேன்.

மொத்தம் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலக முடிவெடுத்துள்ளனர். இது அக்கட்சிக்குள் பரவலான அதிருப்தி நிலவுவதையே உணர்த்துகிறது. ஒருவர் தவறு செய்யலாம், இருவர் தவறு செய்யலாம்; ஆனால் 7 பேர் ஒரே நேரத்தில் தவறு செய்ய முடியாது. பொதுமக்களின் பிரச்சினைகளை இன்னும் அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னெடுத்துப் பேசுவேன்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஏழு ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ஒப்புதல் அளித்தார். இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 3ஆக குறைந்துள்ளது.