惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
MyScale Blog
MyScale Blog
M
MIT News - Artificial intelligence
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
L
LangChain Blog
C
Check Point Blog
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
T
Tailwind CSS Blog
Vercel News
Vercel News
腾讯CDC
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
博客园 - 三生石上(FineUI控件)
D
DataBreaches.Net
Microsoft Security Blog
Microsoft Security Blog
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தர்மஸ்தலா கோயில் மீது அவதூறு கிளப்ப ரூ.200 கோடி ஒதுக்கீடு...
இரா.வினோத் · 2026-06-14 · via hindutamil

Updated on: 

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள தர்​மஸ்​தலா மஞ்​சு​நாதேஸ்​வரா கோ​யில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. இதன் நிர்வாகிகள் 50-க்​கும் மேற்​பட்ட பெண்​களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்​த​தாக​வும், அந்த சடலங்களை நேத்​ராவதி ஆற்​றங்​கரை​யில் புதைத்​த‌​தாக​வும் கோயி​லின் முன்​னாள் தூய்மை பணி​யாளர் சின்​னையா கடந்த ஆண்டு போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீ​ஸார் நடத்​திய ஆய்​வில் 3 எலும்​புக்​கூடு​கள் சிக்​கின. ஆனால் அதன் மண்டை ஓடு​கள் கிடைக்​க​வில்​லை.

இதையடுத்து போலீ​ஸார், புகார்​தா​ர‌​ரான சின்​னையா பொய்​யான தகவல்​களை அளித்​த​தாகக் கூறி அவரை கைது செய்​தனர். இதை தொடர்ந்து தர்​மஸ்​தலா கோயில் நிர்​வாகி வீரேந்​திர ஹெக்​டே, ‘‘தர்​மஸ்​தலா கோயி​லின் மாண்பை கெடுக்​கும் வகை​யில் சின்​னையா பொய்ப் புகார் அளித்​துள்​ளார். இதன் பின்​னணி​யில் பலர் இருக்​கின்​றனர்'' என குற்​றம்​சாட்​டி​னார்.

கர்​நாடக முன்​னாள் அமைச்​சர் ஜனார்த்தன ரெட்​டி, ‘‘இதன் பின்​னணி​யில் தமிழக‌ காங்​கிரஸ் எம்பி சசி​காந்த் செந்​தி​லும், வேறு சில இந்து மத விரோ​தி​களும் இருக்​கின்​றனர்'' என குற்​றம்​சாட்​டி​னார்.

இந்​நிலை​யில் சின்​னையா கர்​நாடக உயர் ​நீ​தி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனுவில், ‘‘தர்​மஸ்​தலா கோயில் மீதும் அதன் நிர்​வாகி வீரேந்​திர ஹெக்டே மீதும் அவதூறு கிளப்​புவதற்கு 20-க்​கும் மேற்​பட்​டோர் அடங்​கிய குழு மும்​முர​மாக வேலை பார்த்​தது. அக்குழுவை சேர்ந்த சிலர் என்னை தொடர்​பு​கொண்டு பணம் கொடுத்​தனர். அவருக்கு எதி​ராக புகார் அளித்​தால் ரூ.50 லட்​சம் தரு​வ​தாக​வும் கூறினர். அதன்​ பேரிலேயே போலீ​ஸில் புகார் அளித்​தேன். கோயில் மீது அவதூறு பரப்​புவதற்​காக ரூ.200 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது''என குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி சுராஜ் கோவிந்​த​ராஜ், ‘‘இந்த குற்​றச்​சாட்​டு​கள் குறித்து சிறப்​புப் புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் விசா​ரிக்க வேண்​டும். இந்த மனுவுக்கு 2 வாரங்​களுக்​குள் பதிலளிக்க வேண்​டும்​''என உத்​தர​விட்​டார்.

பிரகாஷ் ராஜின் பெயர்?

சின்​னை​யா​வின் புகார் மனு​வில் நடிகர் பிர​காஷ்ராஜின் பெயர் இடம்​பெற்​றுள்​ள​தாக கன்னட ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதனை மறுத்​துள்ள பிர​காஷ்ராஜ், ‘‘தவறான, பொய்​யான, அடிப்​படை ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு. இன்​னும் ஓரிரு தினங்​களில் ஊடகங்​களை சந்​தித்து விளக்​கம் அளிக்​கிறேன்​''என பதிலளித்​துள்​ளார்.

கர்​நாடக உள்​துறை அமைச்​சர் பிரி​யங்க் கார்கே கூறுகை​யில், ‘‘ஒரு​வரின் பெயர் இடம்​பெற்​றுள்​ள​தாலேயே அவர் குற்​ற​வாளி​யாகி​விட மாட்​டார். இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரணை நடத்​திய பிறகே உண்மை தெரியும்​'' என்​றார்.