惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
博客园 - 聂微东
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
云风的 BLOG
云风的 BLOG
D
DataBreaches.Net
B
Blog
L
LangChain Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
H
Help Net Security
The Cloudflare Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உறவினர்கள் மீது பாலியல் புகார் அளிக்க சிறுமிகளை அதிகாரிகள...
2026-05-16 · via hindutamil

Updated on

2 min read

மதுரை: குடும்ப பிரச்சினையை தீர்க்க அவசர அழைப்பில் தொடர்பு கொள்ளும் சிறுமிகளை தந்தை மற்றும் உறவினர்கள் மீது பாலியல் புகார் அளிக்க அதிகாரிகள் வற்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

விருதுநகரை சேர்ந்த ஒருவர், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், மனுதாரரின் மகள் செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை மனுதாரர் கண்டித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்த பின்னணியில் சிறுமி ‘1098’ என்ற எண்ணில் பேசியுள்ளார். அவரிடம் பேசிய அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சிறுமியின் வாக்குமூலத்தில், தாய், தந்தையின் சண்டையை முடிவுக்கு கொண்டு வர ‘1098’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டதாகவும், அந்த அழைப்பை ஏற்ற அதிகாரி, அவரது தந்தை அவரை ‘மோசமாகத் தொட்டது’ போல ஒரு புகாரை அளிக்க வற்புறுத்தியதாகவும், அவர் தூண்டுதலின் பேரில் தான் மனுதாரருக்கு எதிராக அந்த குற்றச்சாட்டை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மிரட்டல்

மேலும் அந்த சிறுமி, 5 நாட்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டபோது குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் மிரட்டி, தனது தந்தைக்கு எதிராக புகார் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவிக்க சிறுமிக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதேபோல், சில வழக்குகளில் தந்தைக்கு எதிராக பாலியல் புகார் அளிக்க சிறுமிகளை குழந்தைகள் நலக் குழு, காப்பகங்கள் அல்லது காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் வற்புறுத்துவது தெரிய வந்துள்ளது.

இந்த கவலைக்குரிய போக்கு நீதிமன்றத்துக்கு வேதனை அளிக்கிறது. பெற்றோருக்கு இடையேயான குடும்பச் சண்டையின் பாதிப்பை வெளிப்படுத்த சிறுமி, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளை அணுகியுள்ளார். இது இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமமாகும்.

‘1098’ மூலம் பெறப்படும் புகார்களுக்கு பதிலளிக்கும் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள், காப்பகம், காவல்துறை பணியாளர்களுக்கு பொருத்த மான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

மனுதாரர் மீது பாலியல் புகார் அளிக்க அவரது மகளை குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது தொடர்பாக தென் மண்டல ஐஜி விசாரித்து 2.7.2026-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான மனுதாரருக்கும், சிறுமிக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.