惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Blog — PlanetScale
Blog — PlanetScale
Jina AI
Jina AI
C
Check Point Blog
V
V2EX
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
P
Proofpoint News Feed
A
About on SuperTechFans
D
DataBreaches.Net
腾讯CDC
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
人人都是产品经理
人人都是产品经理
T
The Blog of Author Tim Ferriss
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
云风的 BLOG
云风的 BLOG
MongoDB | Blog
MongoDB | Blog
J
Java Code Geeks
博客园_首页
T
Tailwind CSS Blog
M
MIT News - Artificial intelligence
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“வருமான வரித் துறை சோதனை... இது தேர்தல் நேர வன்கொடுமை!” -...
2026-04-24 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: “எத்தனை எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர் என்பதற்கான வெள்ளை அறிக்கையை வருமான வரித் துறையினர் வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஜனநாயகக் கடமையை ஆற்றிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி. மத்தியில் பாஜக அரசு கொண்டு வர முயன்றது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா அல்ல. அது ஓர் ஏமாற்றும் மசோதா. உண்மையான மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பஞ்சாயத்து ராஜ் மூலம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த்.

கடந்த வாரம் ராகுல் காந்தி பிரச்சாரத்துக்கு வந்தபோது, வெளிமாநில அதிகாரிகள் சிலர் எங்கள் இடங்களில் முற்றுகையிட்டனர். குறிப்பாக, எனது தேர்தல் பொறுப்பாளர் மனோகரன் என்பவரது இடத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

நான் தேர்தல் பரப்புரைக்கு வெளியில் சென்ற நேரத்தில் அலுவலகம் சென்ற அதிகாரிகள் எங்கள் அலுவலக சிசிடிவி-யை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளனர். எதற்காக சிசிடிவி-யை ஆஃப் செய்ய சொன்னீர்கள்? ஒரு ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மையுடன் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்.

மேலும், சோதனையில் பணம் கிடைக்கவில்லை என்றதும், பின்னர் சிசிடிவியை ஆன் செய்து பதிவுகளைக் கேட்டு ஆய்வு செய்துவிட்டு, அதிலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்றதும் சோதனைக்கு வந்த அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். அப்போது நடந்தவை காட்சிகளாக சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ஆனால், எனக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் எங்கும் சோதனை நடத்தவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நான் பிரச்சாரத்தில் இருந்த சமயம் எனது ஸ்ரீபெரும்புதூரில் தொகுதியில் ஏப்ரல் 19, 20 தேதிகளில் நடைபெற்ற சோதனையில் எனது அலுவலகத்தில் இருந்த என்ன பொருட்களை எடுத்து சென்றார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

மேலும், எனது ஆதரவாளர்கள் இடங்களிலும் பல கட்ட சோதனை நடைபெற்றது. இருப்பினும் சோதனையில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் இது போல் ஒரு நடவடிக்கை என்பது வன்கொடுமை. இது குறித்து கேள்வி எழுப்பினால், எங்கள் மீதே வருமான வரித் துறையினர் புகார் கொடுத்துள்ளனர்” என்றார்.

வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதாக கூறி சிசிடிவி வீடியோ ஒன்றை வெளிட்டு தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, “இந்த ஆதாரத்தை நேற்றைய தினமே வெளியிட்டால், தேர்தல் ஸ்டன்ட் அடிப்பதாக விமர்சனம் செய்வார்கள். அதனால், வாக்குப் பதிவு நிறைவு பெற்ற பின்னர் இன்று சிசிடிவி பதிவு வெளியிடுகிறோம்.

அதிகாரிகள் மீது நாங்கள் குற்றச்சாட்டு வைக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் ஆட்சியாளர்கள் மூலம் ஏவி விடப்படுகிறார்கள். உன்மையாக இருந்தால் பத்திரிகையில் வெளிப்படையாக கூறி இருக்கலாம். ஏன் கூறவில்லை?

நான் வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கிறேன். வருமான வரித் துறையினர் எத்தனை மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது, எத்தனை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வீட்டுகளில் சோதனை நடைபெற்றது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அதன் மூலமாகவே, தமிழக வேட்பாளர்கள் மீது டெல்லி தலைமை காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

மல்லிகர்ஜுனா கார்கே, வருமான வரித் துறையை சோதனையை கண்டித்து ”ஜனநாயக நாட்டில் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதும் ஒருவித தீவிரவாதம் தான்” என்று கூறியதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

சோதனை என்ற பெயரில் மக்களை அதிகாரிகள் அச்சுறுத்துவது என்பது மிகவும் மோசமானது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறுகின்றனர், கண்டிப்பாக 5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயு, நிதிஷ் குமார் ஆகியோர் தயாராக இருக்கின்றனர். ஒரு நிமிடத்தில் மத்தியில் ஆட்சி அமைக்கப்படும்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.