惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
腾讯CDC
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
H
Help Net Security
J
Java Code Geeks
C
Check Point Blog
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெங்களூருவில் பெற்றோரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற மகள் பு...
இரா.வினோத் · 2026-06-25 · via hindutamil

கொல்லப்பட்ட சோமசுந்தரம், முத்துலட்சுமி, சுப்ரியா

Updated on: 

பெங்களூரு: பெங்களூருவில் காதல் மற்றும் கடன் விவகாரத்தில் தாய், தந்தை, தங்கையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இளம் பெண் புதுசேரியில் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகவுள்ள காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது மனைவி முத்து லட்சுமி (48), மகள்கள் சுவேதா (24), சுப்ரியா (20) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் சுவேதா தன்னுடன் கல்லூரியில் படித்த கென்னத் (26) என்பவரை காதலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம், வீட்டில் இருந்து வெளியேறிய அவர், கென்னத் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துள்ளார். மேலும் தனது வேலையில் இருந்து விலகி, பெற்றோரின் பெயரில் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கடன் கொடுத்த தனியார் வங்கி சோமசுந்தரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் கோபமடைந்த சோமசுந்தரம், கடன் விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தனது மனைவி முத்துலட்சுமி, இளைய மகள் சுப்ரியா ஆகியோருடன் கடந்த 22-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மூத்த மகள் சுவேதாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் சோமசுந்தரம் அங்கிருந்து வெளியேறிய‌ நிலையில், சுவேதா தனது தாய் முத்துலட்சுமி, தங்கை சுப்ரியா ஆகிய இருவரையும் கூர்மையான கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கென்னத்தின் உதவியால் இருவரின் உடலையும் அங்கிருந்த வேறு அறைக்கு மாற்றியுள்ளார். பின்னர் மனைவி மற்றும் இளய மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த தந்தை சோமசுந்தரத்தை சுவேதாவும், கென்னத்தும் இணைந்து கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த சோமசுந்தரம் அங்கிருந்து வெளியேறி, தப்பிக்க முயற்சிக்கும் போது படிக்கட்டில் சரிந்து விழுந்துள்ளார். மூவ‌ரும் அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அங்கேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சுவேதா பேருந்து மூலமாகவும் காதலன் கென்னத் இருசக்கர வாகனம் மூலமாகவும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலர், 3 பேரின் உடல்களையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். அங்கு அவர்கள் மூவரும் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக மூவரின் உடல்களும் பவுரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த கே.ஆர்.புரம் போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய‌ சுவேதா, அவரின் காதலன் கென்னத் ஆகிய 2 பேரையும் பிடிக்க 6 தனிப்படைகளை அமைக்கப்பட்டன.

புதுச்சேரியில் கைது: இதனிடையே, குடும்பத்தினரை கொன்றுவிட்டு பெங்களூருவில் இருந்து தப்பிச் சென்ற சுவேதாவின் செல்போன் செயல்பாடுகளை ஆராய்ந்ததில், அவர் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக புதுச்சேரிக்கு தொடர்புகொண்ட பெங்களூரு போலீஸார் புதுவை ரயில் நிலையத்தில் இருந்த சுவேதாவை கைது செய்தனர்.

விசாரணையில், ”எனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். என் தனிப்பட்ட விருப்பங்களை செய்ய விடாமல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினர். என் ஆண் நண்பருடன் ஒன்றாக இருக்கக்கூடாது என கண்டித்தனர். அதன் காரணமாகவே மூவரையும் கொலை செய்தேன்” என சுவேதா ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாகவுள்ள காதலன் கென்னத்தை தனிப்படை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் இரு சக்கர வாகனம் மூலம் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், கேரளாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.