惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
C
Check Point Blog
D
Docker
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
MongoDB | Blog
MongoDB | Blog
博客园_首页
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
有赞技术团队
有赞技术团队
IT之家
IT之家
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
M
MIT News - Artificial intelligence
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
腾讯CDC
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
V2EX
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உ.பி.யில் 9 ஆண்டுகளில் 17,000 என்கவுன்ட்டர்கள்
2026-05-20 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ல் யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றது முதல் சட்​டம் ஒழுங்​கில், 'பூஜ்ஜிய சகிப்​புத் ​தன்​மை' கொள்​கையை கடைபிடித்து வரு​கிறார்.

இதனால், யோகி அரசு கடந்த 9 ஆண்​டு​களில் மாநிலத்​தி​லுள்ள குற்​றங்​கள் மற்​றும் குற்​ற​வாளி​கள் மீது அதிரடி நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது. இக்​கால​கட்​டத்​தில், 34,253 குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். முதல்​வ​ராக யோகி பதவி ஏற்​றது முதல் இன்று வரை உபி காவல்​துறை மொத்​தம் 17,043 என்கவுன்ட்டர்​களை நடத்​தி​யுள்​ளது. இதில் 289 பிரபல ரவுடிகள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளனர்.

மேலும் 11,834 குற்​ற​வாளி​கள் காயமடைந்​துள்​ளனர். இதன் மூலம், உ.பி​.யில் சராசரி​யாக தின​மும் ஐந்து என்​க​வுன்ட்​டர்​கள் நடத்தப்பட்​டுள்ளன. அதேசம​யம், என்​க​வுன்ட்​டர்​களின்போது காவல்​ துறை​யினரில் 18 பேர் வீரமரணம் அடைந்​துள்​ளதுடன், 1,852 பேர் காயமடைந்​துள்​ளனர். அதி​கபட்ச எண்​ணிக்​கையி​லான என்​க​வுன்ட்​டர்​கள் மீரட் மண்​டலத்​தில் பதி​வாகி​யுள்​ளன.

மீரட் மண்​டலக் காவல்​ துறை 4,813 என்​க​வுன்ட்​டர்​களை குற்றவாளி​களுக்கு எதி​ராக மேற்​கொண்​டுள்​ளது. இதில் 8,921 பேர் கைது செய்​யப்​பட்​டதுடன் 3,513 பேர் காயமடைந்​தனர். மேலும், தலைமறை​வாக இருந்த 97 பிரபல குற்​ற​வாளி​கள் சம்பவ இடத்​திலேயே சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். காவல் ​துறை​யினர் இருவர் வீரமரணம் அடைந்​தனர்.

இரண்​டாவது நிலை​யில், வாராணசி மண்​டலத்​தில் 1,292 என்கவுன்ட்​டர்​கள் பதி​வாகி​யுள்​ளன. இதில் 2,426 குற்​ற​வாளி​கள் கைதாகி, 29 குற்​ற​வாளி​கள் கொல்​லப்​பட்​டனர். ஆக்ரா மண்​டலம் என்​க​வுன்ட்​டர்​களின் எண்​ணிக்​கை​யில் மூன்​றாம் இடத்​தில் உள்ளது. இங்கு நடை​பெற்ற 2,494 என்​க​வுன்ட்​டர்​களில் 5,845 குற்றவாளி​கள் கைது செய்​யப்​பட்​டனர். 24 குற்​ற​வாளி​கள் கொல்லப்​பட்​டனர்.

பரேலி மண்​டலத்​தின் 2,222 என்​க​வுன்ட்​டர்​களில் 21 பிரபல குற்றவாளி​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். தலைநக​ரான லக்னோ மண்​டலத்​தின் 971 என்​க​வுன்ட்​டர்​களில் 20 குற்​ற​வாளி​கள் கொல்லப்​பட்​டுள்​ளனர். காஜி​யா​பாத் மண்​டலத்​தில் 789 என்கவுன்ட்​டர்​களில் 18 பேர் கொல்​லப்​பட்​டனர். கான்​பூர் மண்டலத்​தில் 791 என்​க​வுன்ட்​டர்​களில் 12 குற்​ற​வாளி​கள் கொல்லப்​பட்​டுள்​ளனர்.

இந்த என்​க​வுன்ட்​டர்​கள், உ.பி​.யில் குற்​ற​வாளி​கள் மத்​தி​யில் அச்சத்​தை​யும், பொது​ மக்​களிடையே பாது​காப்பு உணர்​வை​யும் ஏற்படுத்தி இருப்​ப​தாகக் கருதப்​படு​கிறது. இதனாலேயே மாநிலத்தின் சட்​டம் ஒழுங்கு நிலை தேசிய அளவிலும் பாராட்டப்பட்டு வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

2 தமிழ் ஐபிஎஸ் அதிகாரிகள்...

உ.பி.யின் புலந்த்​ஷெஹர் மாவட்டத்​தில் எஸ்​பி​யாக இருந்த தமிழ​ரான ஜி.​முனி​ராஜ், முதல் என்​க​வுன்ட்​டரைத் தொடங்கி வைத்​திருந்​தார். இதற்​காகவே ‘உ.பி சிங்​கம்’ என அழைக்​கப்​பட்​ட​வர் தற்​போது முரா​தா​பாத் மண்டல டிஐஜி​யாக உள்​ளார். பிறகு, காஜி​யா​பாத் எஸ்​எஸ்​பி​யாக பணியாற்​றியபோதும் முனி​ராஜ், பல என்​க​வுன்ட்​டர்​களை நடத்தி இருந்​தார்.

<div class="paragraphs"><p><em>ஜி.​முனி​ராஜ் |​ பி.​தினேஷ்கு​மார்</em></p></div>

ஜி.​முனி​ராஜ் |​ பி.​தினேஷ்கு​மார்

இவரைப் போலவே மற்​றொரு தமிழ​ரான பி.​தினேஷ்கு​மார் ஐபிஎஸ் அதி​காரி​யும் பல என்​க​வுன்ட்​டர்​களை நடத்தி இருந்​தார். இவர், கான்​பூர் எஸ்​எஸ்​பி​யாக இருந்தபோது விகாஸ் துபே எனும் பிரபலக் குற்​ற​வாளி தன்​னைக் கைது செய்ய வந்த போலீஸார் படை​யில் 8 பேரை சுட்​டுக் கொன்​றார். பின்​னர் விகாஸ் துபேவை தினேஷ் கு​மார் என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொன்​றார்.

இதற்கு முன்​பாக ஷாம்​லி​யின் எஸ்.​பி​யாக இருந்த தினேஷ்கு​மார், காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் மூவரை உயிருடன் கைது செய்திருந்தார். இது​போன்ற வீர தீர செயல்​களுக்​காக தமிழர்களான ஜி.​முனி​ராஜ் மற்​றும்​ பி.​தினேஷ்கு​மாருக்​கு குடியரசு தலை​வர்​ விருதுகளை வழங்​கி உ.பி அரசு கவுர​வித்​தது.