























அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்பரப்பில் கண்ணிவெடிகளை புதைக்கும் ஈரான் கடற்படை படகுகளை (அவர்களின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் அதாவது 159 கப்பல்களும் கடலுக்கு அடியில் உள்ளன. எனவே, வெளியே பணியில் ஈடுபடுவது படகுகளே) சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது. மேலும், நமது கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தற்போது அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தப் பணிகளை மூன்று மடங்கு அதிகமாக தொடர இதன்மூலம் நான் உத்தரவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. இருந்தபோதிலும், ஈரானுக்கான கால அவகாசம் குறைவாகவே உள்ளது. உலகில் உள்ள அத்தனை நேரமும் எனக்கு இருக்கிறது. ஆனால் ஈரானுக்கு அப்படி அல்ல. அவர்களின் கடிகாரம் கெடுவுக்கு நெருக்கமாக ஓடிக்கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்கும் என்பதையே உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。