惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
GRAHAM CLULEY
Cloudbric
Cloudbric
L
LINUX DO - 最新话题
W
WeLiveSecurity
人人都是产品经理
人人都是产品经理
S
Security Affairs
Google Online Security Blog
Google Online Security Blog
Attack and Defense Labs
Attack and Defense Labs
Google DeepMind News
Google DeepMind News
宝玉的分享
宝玉的分享
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
TaoSecurity Blog
TaoSecurity Blog
罗磊的独立博客
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
V2EX - 技术
V2EX - 技术
博客园 - 聂微东
Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
美团技术团队
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
The Cloudflare Blog
S
Secure Thoughts
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
小众软件
小众软件
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
雷峰网
雷峰网
S
Security @ Cisco Blogs
T
Troy Hunt's Blog
O
OpenAI News
博客园 - 司徒正美
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
T
Threat Research - Cisco Blogs
I
Intezer
T
Threatpost
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Hacker News: Front Page
T
Tailwind CSS Blog
V
V2EX
Spread Privacy
Spread Privacy
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
腾讯CDC
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 21
பாரதி ஆனந்த் · 2026-06-06 · via hindutamil

Updated on: 

பெரும் மகிழ்ச்சி, கொடுந்துயரம், அபார வெற்றி, படுதோல்வி, சகிக்க முடியாத துரோகம், பேருதவி, உறைய வைக்கும் பீதி என எந்தவொரு உணர்வும் அதன் மிகையில் சம்பவிக்கும்போது அங்கு முதல் மொழி மவுனம் தான். ஓசையும் வடிவமும் இல்லாதது எப்படி மொழியாகும் என்றால்... ஆகும் என்பதன் அரூப சாட்சியே மவுனம்.

மவுனம் காதலில் குளிர் தென்றலாய் வீசும், காமத்தில் சுக நெருப்பாய் வருடும், கோப உச்சத்தில் எதிராளிக்கு வலியை தரும், துரோக உச்சத்தில் ஒருவர் தன்னை வலிமையானவர் என்பதை நிரூபிக்கவும் உதவும். உணர்வுகளுக்கு ஏற்ப அது தன்னை தகவமைக்கும். அது இறை போன்றது.

அப்படியாக, மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு தாயின் ஆழ்மனது மவுனமும், அவளது மூத்த மகள் தன் சுயமரியாதைக்கு சவாலாகும் சுரண்டலை சுமக்க முடியாமல் வெளிப்படுத்தும் மவுனப் பரிதவிப்பும், தாயின் ‘கேர் கிவ்வர்’ ஆக தனது லட்சியக் கனவுகள், தனிப்பட்ட வாழ்க்கை கரைந்துபோவதை சகித்துக் கொள்ளும் இளைய மகளின் மவுனமும், அவர்களின் மவுனம் பேசும் வலியும், வலிமையும் தான் ‘திகி’ (Thigi) மராத்தி படத்தின் ஒன்லைன். திகி என்றால் மராட்டிய மொழில் ‘நாம் மூவர்’ என்று அர்த்தமாம்!

மார்ச் 2026-ல் வெளியான இந்தப் படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் காணலாம். ஓர் இதமான மெலோ டிராமா ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது முட்டையிலிருந்து லார்வா, பியூபா நிலைகளைக் கடந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியை காண்பது போன்ற ஒரு ரம்மியமான உணர்வை எனக்குக் கடத்தியது.

தாய் ஹேமலதா ரானடே, மூத்த மகள் ஸ்வாதி கர்னிக், இளைய மகள் சாரிகா ரானடே என மூன்ற பெண்களைச் சுற்றியதுதான் இந்தக் கதை. ரோஜாவையும், அல்லியையும், இன்னும் விதவிதமான அலங்கார மலர்களையும் ஒரே கூடைக்குள் அடக்கும்போது பூங்கொத்து உருவாவதுபோல்தான் உறவுகளும்.

கருத்து வேறுபாடுகளும், உள, உடல், நிதிப் போராட்டங்களுக்கு மத்தியிலும் அன்பு ஒன்றிருந்தால் போதும்... அது பூங்கொத்தாய் மிளிர!

‘திகி’யிலும் தாயும், மகள்களும் பூங்கொத்தாக உருவாகி ஆச்சர்யப்படுத்துவார்கள்.

மூத்த மகள் ஸ்வாதி கர்னிக்கிடம் இருந்துதான் படம் தொடங்குகிறது. பெரிய பீடிகையெல்லாம் இல்லை. ரயிலில் ஏறி அவள் ஆஃபிஸ் வந்த அடுத்த விநாடியே அவளுடைய அலுவலக பாஸ் ஒரு செக்ஸுவல் பிரிடேட்டர் என்பது தெரிகிறது.

கல்வியும் வேலைவாய்ப்பும் மிடில் கிளாஸ் மக்களை அதே வர்க்கத்தில் பிழைத்திருக்கச் செய்கிறது. அதன் ஊடே அடுத்த நகர்வு என்று அவர்கள் யோசித்தாலே கடனில்தான் விழ நேரிடுகிறது.

கணவர் மல்ஹார் கர்னிக் தொழிலுக்காக தனது பாஸிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கியிருக்கிறாள் ஸ்வாதி. ஏதோ திட்டமிட்டே அந்த உதவியைச் செய்திருந்த முதலாளி, அவளை பாலியல் ரீதியாக சீண்டிக் கொண்டே இருக்கிறான். அமெரிக்காவுக்கு பிசினஸ் மீட்-டுக்காக செல்வோம் பாஸ்போர்ட் கொடு என்று அவன் கேட்கும் போதுதான் அவளது தாயைப் பற்றிய செய்தி வருகிறது.

கதை அவளது பிறந்த வீட்டுக்கு நகர்கிறது. 4-வது ஸ்டேஜ் கருப்பை புற்றுநோயில் உடலளவில் துவண்டு கிடக்கிறாள் தாய். மருத்துவமனை முதல் காட்சியிலேயே சகோதரிகள் கீரியும் பாம்பும் போல சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

மிடில் கிளாஸ் குடும்பச் சண்டைகள் பல ஒருவர் மீதான இன்னொருவரின் காழ்ப்புணர்வு என்பதைத் தாண்டி, தனிப்பட்ட வாழ்வில் தத்தம் அழுத்தங்களை வெளிப்படுத்த வடிகால் இல்லாது தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீது அள்ளித் தெளிக்கும் விரக்திகளாகவே இருக்கின்றன. அந்த நேரத்தில் அந்த விரக்தியைக் கையாளப் பழகிக் கொண்டாலே வாழ்தல் சுகமாகும்.

படத்தின் நங்கூரம் தாய் ஹேமலதா தான். தனது புற்றுநோயின் யதார்த்தத்தை அணுகுவதிலும்கூட அவர் காட்டும் ‘கர்வம்’ சிங்கிள் மதர்களுக்கே உரித்தானது. வாழ்க்கை காட்டிய கொடிய முகத்துக்கு புறமுதுக்கிட்டு ஓடாமல் அவர்கள் காட்டும் கெத்து முகம் உத்வேகத்தின் ஊற்று.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் காட்சி அதனை விளக்கும். “எனது சாவு எனது அறையில்தான் நிகழ வேண்டும் என்னை மாடிக்கு கூட்டிச் செல்லுங்கள்..” என்று வீல்-சேரில் பிடிவாதமாக அமர்ந்து கொண்டு வரும் மகள்களை ஏலேலோ - ஐலசா பாடவைத்து ஹேமலதா, அறை வாசலுக்கு வந்ததும் எழுந்து செல்லும் குறும்பு ரசிக்க வைக்கும்.

வயோதிகம் குழந்தையின் குறும்பை மீண்டும் செய்துபார்க்கத் தூண்டும்.

இந்தியச் சமூகத்தில் வயோதிகர்கள் எல்லாம் ‘பேபி சிட்டர்’களாக மாறிவருகின்றனர். அதற்கு லாயக்கில்லாவிட்டால் முதியோர் இல்ல உறுப்பினர்களாகிறார்கள். ஊதியமும், கவுரமும் இல்லாத உரிமைக் குரலும் இல்லாத வர்க்கம் அது!

ஆனால், பொருளாதார சுதந்திரத்தைப் பெற்ற நம் ஹேமலதாவுக்கு, நானும் நீங்களும் தனித்தனி அடல்ட்கள். உங்களது வாழ்வில், முடிவுகளில் நானும், என் வாழ்வில், முடிவுகளில் நீங்களும் தலையிடக் கூடாது என்ற வரையறையை வகுத்தவர். அதனால், தன் வாழ்வை வயோதிகக் குறும்புகளுக்கு தகுதியானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

பராமரிப்புகள், சண்டைகள் என நகரும் நாட்களில், புதுவரவாக ஒரு கருப்பு நாய்க்குட்டி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் கருப்பு கோழி இனத்தின் பெயரான கடக்நாத் என்பதை அதற்கு சூட்டுகிறார் ஹேமா. பிராணிகள் மீது நாட்டமில்லாதவர் தன் படுக்கையில் அதற்கு தூங்க இடம் கொடுக்கிறார். அவர் மனதின் ஒரே சஞ்சலம், அவர் காக்கும் ரகசிய மவுனம்.

இது ஒருபுறமிருக்க, ஸ்வாதியை தேடி அந்த முதலாளி புனேவுக்கும் வருகிறான். ‘உணவகத்துக்கு வா, ஒயின் அருந்து’ என்று நிர்பந்திக்கிறான். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் தேதியாவது அவனிடம் சொல்வோம். அது அவனுக்கு நான் உன் விருப்பத்துக்கு தயாராக இல்லை. கடனை திருப்பிச் செலுத்தவே தயாராக இருக்கிறேன் என்ற செய்தியைக் கடத்துமே என்று கணவரிடம் தேதி சொல் என்று கதறுகிறாள்.

மறுபுறம், எப்போதோ கைவிட்டுப் போன யுஎஸ் வேலை கைகூடி வருகிறது. என்றாலும், அம்மாவை விட்டு எப்படிப் போவது. நண்பரோடு சேர்ந்து உருவாக்கிவரும் ஸ்டார்ட் அப்பை விட்டு கைவிடுவது என்று தவிக்கிறாள் சாரிகா.

இதற்கிடையில் தான், தங்கள் தந்தை பற்றிய தாய் இதுநாள் கூறியதில் இருக்கும் பொய்யை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதா அல்லது கடந்து போவதா என்று காரசார விவாதமும் செய்வார்கள் ஸ்வாதியும் சாரிகாவும்.

“நான் பள்ளிக்கூட ஓவியப் போட்டியில் என் இரு பக்கமும் அம்மா நிற்பதுபோலவும் நடுவில் நாம் நிற்பது போலவும் ஓவியம் வரைந்தேன். எல்லோரும் என்னை கேலி செய்தார்கள். அம்மா மட்டுமே என்னைப் பாராட்டினார்” என்று சாரிகா கண்ணீர் மல்கச் சொல்வாள்.

தந்தை விட்டுச் சென்ற வெற்றிடத்தை தாயைக் கொண்டு பல குழந்தைகள் நிரப்பி சுயமாகத் தேறுகிறார்கள். அவர்களையும், தாயுமானவர்களைக் கொண்டாடுவதுபோல் தந்தையும் ஆன பெண்களையும் இந்தச் சமூகம் கொண்டாடுவதில்லை. மாறாக, எந்தச் சாக்கில் எப்படி விமர்சிக்கலாம் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறது.

மூவரும் மூன்றுவிதமாக தவிக்க, அந்த வீட்டுக்குள் தென்றல் போல வீசிச் செல்வபராக இருக்கிறார் சாரிகாவின் நண்பரும், ஸ்டார்ட் அப் பார்ட்னருமான கந்தர்வா.

ஒரு பொறுப்பான தந்தை. அவர் மகளுக்கு பிறந்தநாள் பரிசாகத்தான் கடக்நாத் கைமாறவிருக்கிறது. ஹேமாவுக்கு கந்தர்வா மீது மிகுந்த மரியாதை. கடக்நாத்தை கொடுப்பதற்கு முன்னால், “எப்பவும் ஒரு பொறுப்பான தந்தையாக இரு. உன் மகளை என்றைக்கும் கண்ணீர்சிந்த வைத்து விடாதே” என்பார்.

உங்கள் தந்தை மரணித்துவிட்டார் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலும் அதுவரை மகள்களுக்குச் சொல்லிராத ஹேமா, முதன்முறையாக தந்தையின் பொறுப்பு பற்றிப் பேசுவாள்.

அதுநாள் வரை தந்தையை பற்றிய தாயின் மவுனத்தை மட்டுமே கேட்டுப் பழகிய மகள்களும் அந்த ஓசை ஆச்சரியத்தைத் தரும்.

அதுபோல், ”இனிமேல் எனக்கு சிகிச்சை வேண்டாம். நான் ஹாஸ்பைஸ் மையம் செல்கிறேன். எனது இறுதி நாட்கள் வேதனையை நீங்கள் பார்க்கக் கூடாது. நான் ஒரு சுதந்திரமான பெண்ணாக, பலமானவளாகவே இருந்திருக்கிறேன். எனது அந்த முகத்தை மட்டுமே நீங்கள் நினைவில் வைத்திருந்தால் போதும். என்னை சுமப்பது உங்கள் வாழ்க்கை அல்ல” என்று யதார்த்தங்களைப் பேசுவது ஒரு சிங்கிள் மதரின் உச்சபட்ச அன்பு.

மகள்களும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ஒரு உறுதியான பெண் அவளை நகலெடுத்ததுபோல் உறுதியான வாரிசுகளைத் தான் உருவாக்குவாள் என்பதற்குச் சான்று. பரஸ்பரம் இருவரும் சிக்கலில் இருப்பதை வெளிப்படையாகப் பேசிக் கொள்வார்கள். நாம் சேர்ந்து சமாளிக்கலாம் என்று பரஸ்பரம் ஆறுதல் மொழி பேசுவார்கள்.

இதற்கிடையில், சாரிகாவின் கணவனின் வருகை அன்பின் இன்னொரு பரிமானம். மனைவியைப் பார்க்க வந்துவிட்டு அவளிடம் பணமும் கேட்டுப் பெறுவான். அப்போது, “இந்தப் பணத்துக்காக நான் வரவில்லை. உனக்காக வந்தேன். உன்னை சர்ப்ரைஸ் செய்ய வந்தேன். உன்னுடன் ஒரு காபி குடிக்க, உன்னை ஆரத்தழுவிக் கொள்ள வந்தேன். நாம் இந்த நிலையை நிச்சயம் கடந்து செல்வோம்” என்பான்.

பணம் இல்லாதவர்களின் அன்புக்கும், வாக்குறுதிக்கும் மதிப்பு கொடுக்காத இந்த உலகத்தில், “நாம் சரியாகிவிடுவோம்” என்று கணவனுக்கு அடிக்கடி உத்வேக உரைகள் நிகழ்த்திய ஸ்வாதிக்கு சரியான நேரத்தில் அதைத் திருப்பிச் சொல்லி, ஆரத் தழுவிக் கொள்ளும் காட்சி சொல்லும் பாடம் இதுதான்...

மனிதனை பணத்தால் மதிப்பிடாதீர்கள்!

மரணத்துக்கு முன்னால் கடக்நாத்தை ஏந்திக் கொண்டு ஹேமா பேசும் காட்சி வாழ்க்கைத் தத்துவம்.

“இங்கே நம்மைத் தவிர எல்லோரும் அவசரமாக எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். ஆனால் நமக்காக எது தீர்மானிக்கப்பட்டதோ அதைத்தான் நாம் அடைகிறோம்.

எனக்கு பிராணிகள் மீது பெரிதாக விருப்பமில்லை. நீ வரும் வரை. ஏனெனில் அவை பேசுவதில்லை. ஆனால், உன்னுடைய மவுனம் எனக்கு ஒன்றை புரிய வைத்தது. நீ எதையும் யாரையும் எடைபோடுவதில்லை. நீ இன்று என் வீட்டு பால்கனியில் என் கைகளில் தவழ்கிறாய். நாளை கந்தர்வா வீட்டில் இன்னொருவர் கையில் இருப்பாய். அது தவறில்லை. மரங்களை விட்டு உதிரும்போது இலைகள் என்ன சொல்லிவிட்டாச் செல்கின்றன” என்று பேசும் காட்சி வாழ்க்கைத் தத்துவம்.

மகள்கள் மனப் போராட்டத்தில் இருப்பதை உணர்ந்த தாய், ஸ்வாதியின் முதலாளி வீடுவரைக்கும் வந்து சென்ற பின்னர், அவர்களை அழைத்து சில உண்மைகளை உடைத்துப் பேசுவாள்.

அது அவளின் ‘ரகசிய’ வலி பற்றியது. அந்த வலியை அவள் விவரிப்பதும். கணவர் மஞ்சுநாத்தை ஏன் பிரிந்தேன் என்று சொல்வதும் பேரதிர்ச்சியைத் தாண்டி, கண்களின் கண்ணீரை கொண்டுவராமல் இருக்காது.

ஸ்வாதியிடம் ‘உன் வேலையைவிடு’ என்பாள். சாரிகாவிடம் ‘உனக்கான முடிவை எடு’ என்பாள். “நீங்கள் சாய்ந்து கொண்டிருக்கும் இந்தச் சுவர் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இனி உங்கள் முதுகெலும்பை வலுப்படுத்துங்கள்” என்பாள். மூவரும் ஒரு பூங்கொத்து பொட்டலமாக கட்டியணைத்து அன்பைப் பரிமாறுவார்கள்.

மரணத்தை எதிர்கொள்ள நாம் தயாராகலாம். ஆனால் மரணம் நம்மை எப்பொது தழுவும் என்பதை அதுவே தீர்மானிக்கும்.

நீ பட்ட வேதனைகள் போதும் என்று அவளை மரணம் ஸ்வீகரிக்கும். மகள்களும் பாதைகளை கிட்டத்தட்ட தீர்மானித்திருப்பார்கள்.

ஸ்வாதிக்கு ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் கிரெடிட்’ என மெசேஜ் வரும்; சாரிகா யுஎஸ் நிறுவனத்துக்கு ‘என் முடிவை மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்’ என்று மெசேஜ் அனுப்புவாள்.

வாழ்க்கை இப்படித்தான் நம் செல்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்து சேரும் கால அளவில் மாறிவிடும். அதற்கான முடிவை நாம் எடுக்கும் துணிச்சலும், அதை செயல்படுத்த வெளியில் இருந்து சிறிய துடுப்பும் கிடைக்கும்போது நீந்திவிடலாம். நம்புங்கள்.

ஸ்வாதி, சாரிகா எதிர்கொண்ட மவுனம் தந்த வலியை தாய் ஹேமாவின் மவுனத்தின் பின்னால் இருந்த ஆழ்மன ரகசிய வலியும், அதிலிருந்து அவள் வீறுகொண்டு எழுந்த வலிமையும் துடைத்தெறியும்.

ஒரு வகை பாலியல் குற்றத்தின் வேரையும், அதன் மீதான உளவியல் அணுகுமுறையையும் பெரும் தாக்கம் தரும் திரைமொழியில் இந்தப் படத்தை இயக்குநர் ஜீஜிவிஷா, ஒரு கவிதையைப் போல்தான் படைத்திருப்பார்.

படத்தின் ஆரம்பக் காட்சி ஃப்ரேம்தான் இறுதிக் காட்சி ஃப்ரேமும். அந்தக் காட்சியில் கடற்கரையில் கையில் தாயின் அஸ்தியை ஏந்தியவாறு ஸ்வாதியும், அருகே சாரிகாவும் நிற்க தூரத்தில் ஒரு முதியவர் நிற்பார். அவர் ரோஜா, அல்லியோடு இன்னொரு கொய்மலராக சேர்ந்து பூங்கொத்து ஆவாரா? இன்னும் சில மவுனங்கள் கலையுமா என்பதெல்லாம் நமது கற்பனைக்கானது.

அந்தக் காட்சி லாங் ஷாட்டில் விரிந்தபோது. முட்டையிலிருந்து லார்வா, பியூபா நிலைகளைக் கடந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியை காண்பது போன்ற ஒரு ரம்மியமான உணர்வு எனக்குக் கிட்டியது. அதுவும் ஜீஜிவிஷாவின் முதல் படம் இதுவென்றறிந்தபோது அந்த வண்ணத்துப்பூச்சி இன்னும் அழகாகத் தெரிகிறது.

| தேவதைகள் வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in