



























மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், அப்போலோ, மெட்பிளஸ், துளசி பார்மசி, முத்து பார்மசி போன்ற சங்கிலி தொடர் மருந்தகங்கள், முதல்வர் மருந்தகம், தமிழ்நாடு கூட்டுறவு சங்க மருந்தகங்கள், பிரதம மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா போன்ற அரசு ஆதரவு சில்லறை விற்பனை நிலையங்கள் என சுமார் 5 ஆயிரம் மருந்தகங்கள் கடையடைப்பில் பங்கேற்கவில்லை.
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையால் மாவட்ட வாரியாக உதவி எண்கள், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கமும் மாவட்ட வாரியாக உதவி எண்களை அறிவித்திருந்தன.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை கேட்டு பெற்றனர். ஆனாலும், வழக்கமாக பயன்படுத்தும் நிறுவனங்களின் மாத்திரை, மருந்துகள் கிடைக்காததால் பலர் அவதிக்குள்ளாகினர்
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。