惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
Docker
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 聂微东
MyScale Blog
MyScale Blog
H
Help Net Security
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
M
MIT News - Artificial intelligence
大猫的无限游戏
大猫的无限游戏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
P
Proofpoint News Feed
博客园 - 叶小钗
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler
Microsoft Security Blog
Microsoft Security Blog
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பஞ்சப்பூரில் இருந்து இரவு வேளையில் போதிய பேருந்து சேவை இல...
2026-05-20 · via hindutamil

Updated on

2 min read

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து இரவு வேளையில் நகரப் பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் இருந்து தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, திருவனந்தபுரம், திருப்பதி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்து சேவை மிகக் குறைவாக உள்ளதுடன், சில பகுதிகளுக்கு பேருந்து சேவையே இல்லை என்றும், இரவு வேளையில் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பியுள்ள உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஜி.பெல்சன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பஞ்சப்பூர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், பஞ்சப்பூரில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்து சேவை இல்லாமல் படாத பாடு பட வேண்டியுள்ளது.

பஞ்சப்பூரில் இருந்து கே.கே.நகர், தில்லை நகர், உறையூர், ரங்கம், காட்டூர், திருவெறும்பூர், துவாக்குடி என பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல மன்னார்புரம், காந்தி மார்க்கெட், சத்திரம் பேருந்து நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து பேருந்து மாறிச் செல்ல வேண்டியுள்ளது.

இரவு வேளையில் சத்திரம் பேருந்து நிலையத்துக்கு 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ரங்கத்துக்கோ, சமயபுரத்துக்கோ செல்ல வேண்டுமெனில் பேருந்து நிலையத்திலேயே விடிய விடிய காத்திருக்க வேண்டியுள்ளது.

அல்லது ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் குறைந்தபட்சம் ரூ.500 வரை கொடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஏற்கெனவே இருந்ததுபோல மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பாதி பேருந்துகளை இயக்க வேண்டும் என முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பி உள்ளேன் என்றார்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கூறியது: பஞ்சப்பூரில் இருந்து இரவு வேளையில் 3 மாநகர பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. மேலும், வெவ்வேறு இடங்களில் இருந்து பஞ்சப்பூர் வழியாக 4 கனெக்டிங் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பஞ்சப்பூரில் இருந்து இரவு வேளையில் பெரம்பலூர், கோயம்புத்தூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து புறநகரப் பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம் வழியாகத்தான் இயக்கப்படுகின்றன.

இரவு நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் இதுவரை வரவில்லை என்றனர்.

இந்நிலையில், போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தைப் பிரித்து, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட போக்குவரத்துக் கழக கோட்டம் அமைத்தால்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.