惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
罗磊的独立博客
博客园_首页
量子位
雷峰网
雷峰网
GbyAI
GbyAI
小众软件
小众软件
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
DataBreaches.Net
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The Cloudflare Blog
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
P
Proofpoint News Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உ.பி.யின் ‘மோக்லி சிறுமி’ 18 வயதில் உடல்நல பாதிப்பால் கால...
ஆர்.ஷபிமுன்னா · 2026-06-19 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் வனப்பகுதியில் தனியாக வாழ்ந்த ‘மோக்லி சிறுமி’யாக கருதப்படுபவர் எஹ்சாஸ். வன வாழ்க்கையிலிருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு சிகிச்சை பெற்று வந்தவர் தனது 18 வயதில் உடல்நல பாதிப்பால் ஜூன் 15-ல் காலமானார். இந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இவர், இந்தியாவின் ‘மோக்லி சிறுமி’ என்று அழைக்கப்பட்டவர். ஏனெனில், உ.பி.யின் பைரைச் மாவட்டத்தின் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் காடுகளில் சிறுமியான இவர் தனியாகவே வாழ்ந்து வந்தவர்.

வனவிலங்குகளுடன் வாழ்ந்தவருக்கு அவற்றின் மீதான அச்சம் இல்லாமல் இருந்துள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் மோதிப்பூர் பகுதியின் சாலையில் அவர் அலைந்து திரிந்துள்ளார்.

அப்போது, வனவிலங்கு காவலர்களால் 2017 ஜனவரியில் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிய வந்தார். அந்த சமயத்தில், அச்சிறுமிக்கு பொது மனித சமூகத்துடன் மிகக் மிகக் குறைந்த தொடர்பே இருந்துள்ளது.

சாதாரண மனிதர்கள் போல் அன்றி அவர் விலங்குகளைப் போல், நான்கு கால்களிலும் நடந்துள்ளார். பொதுமக்கள் கண்களில் படுவதை அவர் அதிகம் தவிர்த்து வந்துள்ளார். ஆடை அணியவும் மறுத்தவர், அலறல்கள் மற்றும் சைகைகளை தம் மொழியாகக் கொண்டிருந்தார். 

அச்சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, அவர் ருட்யார்ட் கிப்ளிங்கின் கற்பனை காட்டுக் குழந்தையான ‘மோக்லி’யுடன் ஒப்பிடப்பட்டார். கிப்ளிங்கின் பிரபல 'தி ஜங்கிள் புக்' கதையில் வரும் 'மோக்லி' என்ற கற்பனைப் பாத்திரம் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான கார்ட்டூன் சித்திரங்கள் மற்றும் திரைப்படங்களாக பிரபலானது.

எனவே, அச்சிறுமியை உ.பி. வாசிகள் ‘மோக்லி சிறுமி’ என்று அழைத்தனர். ஜனவரி 2017-ல் உ.பி. அரசின் வனவிலங்கு காவலர்களால் மீட்கப்பட்ட அச்சிறுமி, பஹ்ரைச்சில் உள்ள குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அச்சிறுமிக்கு பூஜா எனப் பெயரிடப்பட்டிருந்தது.

பின்னர், பைரச்சியிலிருந்து பூஜா, லக்னோவில் உள்ள நிர்வாண் ராஜ்கிய பால் கிருஹ் விசேஷிக்ரித்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பூஜா எனும் பெயர் மாற்றி ’எஹ்சாஸ்’ என்று மறுபெயரிடப்பட்டது.

இந்நிலையில், எஹ்சாஸுக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருந்துள்ளது. மருத்துவப் பரிசோதனைகளில், அவரது மூளை முழுமையாக வளர்ச்சியடையவில்லை எனத் தெரிந்தது.

இத்துடன், அவர் அறிவுசார் குறைபாடு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக, லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இத்தகைய சவால்களுடன் எஹ்சாஸுக்கு, பல ஆண்டு காலமாக பராமரிப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதில், எஹ்சாஸுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்ததை அடுத்து கடந்த ஜூன் 11 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், ஜூன் 15 அன்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால், மீண்டும் மருத்துவமனைக்கு எஹ்சாஸ் உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே எஹ்சாஸ், பரிதாபமாக உயிரிழந்தார். இவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை எஹசாஸ் லக்னோவின் இல்லத்தில்தான் கழித்தார்.

அங்கு பல வருட மருத்துவ சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவை கிடைத்து வந்தன. இதன் பலனாக எஹ்சாஸ், மக்கள் மத்தியில் வாழப் படிப்படியாகப் பழகிக்கொண்டார். 

காலப்போக்கில், அவர் தன் ஆடையை தானே அணியவும், பராமரிப்பாளர்களை அடையாளம் காணவும், பாசத்திற்குப் பதிலளிக்கவும் கற்றுக்கொண்டார். தனது நேரடிப் பராமரிப்பாளரான ராணி என்பவருடன் எஹ்சாஸுக்கு நெருக்கமான நட்பு இருந்தது.

தன்னை பாசத்துடன் 'அம்மா' என்று அழைத்து வந்த எஹ்சாஸின் இறப்பு குறித்து ராணி கூறும்போது, ‘அவள் என்னை அம்மா என்றுதான் அழைப்பாள். அவள் குணமடைந்து விடுவாள் என்று நான் அதிகம் நம்பினேன். இப்போது, அவளுடைய நினைவுகள் மட்டுமே எங்களிடம் உள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.