惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
M
MIT News - Artificial intelligence
MyScale Blog
MyScale Blog
博客园_首页
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
美团技术团队
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
Vercel News
Vercel News
小众软件
小众软件
博客园 - 司徒正美
雷峰网
雷峰网
T
Tailwind CSS Blog
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
F
Fortinet All Blogs
罗磊的独立博客
量子位
P
Proofpoint News Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
A
About on SuperTechFans
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு: திருமல...
2026-04-28 · via hindutamil

ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று பெட்ரோல், டீசலுக்காக காத்திருக்கும் வாகனங்கள்.

Updated on

2 min read

திருமலை: ஆந்​திர மாநிலத்​தில் திடீரென பெட்​ரோல், டீசலுக்கு ஏற்​பட்​டுள்ள தட்​டுப்​பாட்​டால் பொது​மக்​கள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். அதி​லும் குறிப்​பாக பல்​வேறு வெளி​மாநிலங்​களில் இருந்து திரு​மலைக்கு வந்த பக்​தர்​கள் தங்​களின் கார், வேன்​களுக்கு போதிய டீசல், பெட்​ரோல் கிடைக்​காமல் பெரும் அவதிப்​படு​கின்​றனர். இதையடுத்​து, டீலர்​களுக்கு முதல்வர் சந்​திர​பாபு நாயுடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ஆந்​திர மாநிலம் முழு​வதும் திடீரென பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு பல காரணங்​கள் கூறப்​படு​கின்​றன. கடப்​பா, விஜய​வாடா ஆகிய இடங்​களில் உள்ள ஆயில் நிறு​வனங்​களில் ஏற்​பட்​டுள்ள தட்​டுப்​பா​ட்டால், மாநிலம் முழு​வதும் பெட்​ரோல், டீசல் கிடைக்க வில்லை என கூறப்​படு​கிறது. ‘இதெல்​லாம் உண்மை இல்லை. பெட்​ரோல், டீசல் பதுக்​கப்​படு​கிறது. இதன் மூலம் கள்ள சந்​தை​யில் அதிக விலைக்கு விற்​கலாமென டீலர்​கள் முடி​வெடுத்து வேண்​டுமென்றே மாநிலம் முழு​வதும் பற்​றாக்​குறையை ஏற்​படுத்தி உள்​ளனர்’ என்ற தகவலும் வெளி​யாகி உள்​ளது.

ஆந்​திர மாநிலம் முழு​வதும் சுமார் 4,150 பெட்​ரோல் பங்​க்கு​கள் உள்​ளன. இதில் தற்​போது 70 சதவீதத்​துக்​கும் மேலான பங்​க்கு​களில் ‘நோ ஸ்டாக்’ அறி​விப்பு பலகைகள்தான் காணப்​படு​கின்​றன. அண்டை மாநிலங்​களான தெலங்​கா​னா, தமிழகம், கர்​நாடகா உள்​ளிட்ட மாநிலங்​களில் இந்த பிரச்​சினை இல்​லை. ஆனால் திடீரென ஆந்​தி​ரா​வில் மட்​டும் இப்​பிரச்​சினை தலை​தூக்க காரணம் என்ன என்​பது குறித்து மாவட்ட ஆட்​சி​யர்​கள், டீலர்​களு​டன் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்​தி​னார்.

பொது​மக்​கள், வியா​பாரி​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள், அரசு மற்​றும் தனி​யார் ஊழியர்​கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்​கப்​படு​வர் என்​பதுடன் சுற்​றுலா துறை​யும் பாதிப்​படை​யும் என்​ப​தால் 24 மணி நேரத்​துக்​குள் பெட்​ரோல், டீசல் பிரச்​சினை தீர்க்​கப்பட வேண்​டும் என ஆட்​சி​யர்​களுக்கு அவர் உத்​தர​விட்​டுள்​ளார்.

ஒவ்​வொரு 3 மணி நேரத்​துக்கு ஒரு​முறை இதுதொடர்​பாக மாநிலம் தழு​விய அறிக்​கையை கொடுக்க வேண்​டும் என்​றும் அறிவுறுத்தியுள்​ளார். நேற்று மாலை வரை​யிலும்கூட திருப்​ப​தி, சித்​தூர், நெல்​லூர், குண்​டூர், கடப்​பா, விஜய​வா​டா, விசாகப்​பட்​டினம், கோதாவரி மாவட்​டங்​கள் என ஆந்​திரா முழு​வதும் எரிபொருள் பிரச்​சினை தீர்ந்​த​பாடில்​லை.

பெட்​ரோல், டீசல் வந்​ததும் குறிப்​பிட்ட பெட்​ரோல் பங்​க்கு​கள் முன்பு வாக​னங்​களுடன் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருக்க தொடங்கி விடு​கின்​றனர். இதனால் சில மணி நேரங்​களி​லேயே பெட்​ரோல், டீசல் விற்றுத் தீர்ந்து விடு​கிறது. திரு​மலை​யிலும் இதே நிலைமை உள்​ள​தால், வெளியூர்​களில் இருந்து கார், வேன்​களில் வரும் பக்​தர்​கள் மிக​வும் அவதிக்கு ஆளாகி உள்​ளனர்.

திரு​மலை​யில் உள்ள 2 பெட்​ரோல் பங்​க்கு​களி​லும் நேற்று மதி​யம் முதல் பெட்​ரோல், டீசல் இல்லை எனும் அறி​விப்பு பலகைகள் வைக்​கப்​பட்​ட​தால் வெகு தூரம் செல்​லும் வாகன ஓட்​டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. ​திரு​மலை​யில் தொடர்ந்து தங்​கு​வதற்கு அறை​களும் கிடைக்​காமல், பெட்​ரோல், டீசலுக்​கும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால் கீழே இறங்கி செல்​ல​வும் முடி​யாமல் வாகன ஓட்​டிகள் தவித்து வரு​கின்​றனர். எனவே, உடனடி​யாக இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண வேண்​டும் என பக்​தர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடிய​தால், உலகின் பல்​வேறு நாடு​களி​லும் பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு உள்​ளிட்​ட​வற்​றுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. எனினும், பின்​னர் படிப்​படி​யாக நிலைமை சீரடைந்து வரு​கிறது.

பெட்​ரோல், டீசல் மற்​றும் எல்​பிஜி ஆகிய​வற்​றின் இருப்பை உறுதி செய்ய மத்​திய அரசு அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்டு வரு​வ​தாக மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் விளக்​கம் அளித்​துள்​ளது. அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் சட்​டம், 1955 மற்​றும் எல்​பிஜி கட்​டுப்​பாட்டு ஆணை, 2000 ஆகிய​வற்​றின் கீழ், விநி​யோகத்​தைக் கண்​காணிக்​க​வும், பதுக்​கல் மற்​றும் கள்​ளச் சந்​தைக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​க​வும் மாநில அரசுகளுக்கு அதி​காரம் அளிக்​கப்​பட்​டுள்​ளது என்​றும் பெட்​ரோலிய அமைச்​சகம் தெரி​வித்​திருப்​ப​து குறிப்​பிடத்​தக்​கது.