惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
DataBreaches.Net
C
Check Point Blog
雷峰网
雷峰网
小众软件
小众软件
GbyAI
GbyAI
美团技术团队
P
Proofpoint News Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
爱范儿
爱范儿
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வீடுகள் ஒதுக்கீட்டில் குளறுபடி என புகார்: கோட்டூர்புரத்தி...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

Updated on: 

கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டூர்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பக்கிங்காம் கால்வாய் கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த நூற்றுக்கணக்கான எளிய மக்களின் வீடுகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டன. அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த திமுக அரசு சார்பில் ரூ.307 கோடி மதிப்பீட்டில் சுமார் 1,800 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு. வீடுகள் ஒதுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த குடியிருப்பில் 195 வீடுகள் காலியாக உள்ளன.

இந்த வீடுகளைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இடிந்து விழும் நிலையில் உள்ள தங்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு, காலியாக உள்ள புதிய குடியிருப்புகளில் தங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, "முந்தைய அரசில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் தற்போது அதிகாரிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட வில்லை என கூறுகின்றனர்.

இப்போதுள்ள அமைச்சரிடம் கேட்டாலும் முறையான பதில் இல்லை. பல குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றன. தற்போது, நாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் மிகவும் சிதிலமடைந்து, சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, இப்பகுதியில் பாதாளச் சாக்கடை வசதி மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படைத் தேவைகளும் முற்றிலும் சீர்குலைந்துள்ளன" எனக் கூறினர்.

சாலை மறியல் குறித்த தகவல் அறிந்ததும், போலீஸார் மற்றும் நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எங்களுக்கு எழுத்துப்பூர்வமான ஒதுக்கீட்டு ஆணை கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பிடிவாதமாக மக்கள் சாலை யில் அமர்ந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றபோது, போலீஸாருக்கும் மக் களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக 5 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வேண் டிய அமைச்சரும், எம்எல்ஏவும் வராமல் காவல் துறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரப் போக்காகும்" என்றார்.