惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
T
The Blog of Author Tim Ferriss
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog
L
LangChain Blog
博客园_首页
Vercel News
Vercel News
月光博客
月光博客
B
Blog RSS Feed
S
SegmentFault 最新的问题
博客园 - Franky
C
Check Point Blog
A
About on SuperTechFans
Stack Overflow Blog
Stack Overflow Blog
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
罗磊的独立博客
D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
云风的 BLOG
云风的 BLOG
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு: ...
2026-05-11 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) நிலத்தை மாற்றித் தர தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, "வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு நிலத்தை மாற்றித் தர மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிகள் இன்றிலிருந்து தொடங்குகின்றன; 45 நாட்களுக்குள் நிறைவுபெறும். இது எனது அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

மத்திய அரசின் முதன்மைத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' சுகாதாரத் திட்டம் மற்றும் மத்திய அரசின் வேறு பல திட்டங்களையும் மாநிலத்தில் அமல்படுத்தவுள்ளோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி, பள்ளி வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய மற்றும் மாநிலப் பணிப்பிரிவுகளின் கீழ் வரும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பயிற்சிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளருக்கு அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளது.

முந்தைய அரசு அரசியலமைப்பை மீறி 'பாரதிய நியாய சம்ஹிதா' சட்டத்தை அமல்படுத்தவில்லை. தற்போது அச்சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 2025-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கையை முந்தைய அரசு புறக்கணித்திருந்தது. தற்போது மேற்கு வங்க அமைச்சரவை, அச்சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது" என்று அவர் கூறினார்.