惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
J
Java Code Geeks
I
InfoQ
腾讯CDC
Vercel News
Vercel News
IT之家
IT之家
V
Visual Studio Blog
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
量子位
L
LangChain Blog
B
Blog
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சமூக ஊடகங்களில் ஆதரவளிக்கும் அகிலேஷ்: மம்தா பானர்ஜிக்காக ...
2026-04-29 · via hindutamil

அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்

Updated on

1 min read

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரான அகிலேஷ், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இவர் கடைசியாக, கடந்த ஜனவரியில் முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்தார். ஆனால், அங்கு தேர்தல் நெருங்கியதும் சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து விலகியே இருந்தார். மம்தா பானர்ஜிக்கு அகிலேஷின் ஆதரவு சமூக ஊடகப் பதிவுகளுடன் மட்டும் நின்றுபோனது.

அதேசமயம், அகிலேஷுடன் இண்டியா கூட்டணியில் இடம்பெற் றுள்ள பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவும், ஜார்க்கண்டின் முதல்வரான ஹேமந்த் சோரனும் திரிணமூல் காங்கிரஸ்(டிஎம்சி) வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். டெல்லியின் முன்னாள் முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால் கூட டிஎம்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து திரும்பினார்.

இந்த 3 தலைவர்களை விடவும் சமாஜ்வாதியின் அகிலேஷ், முதல்வர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டார்.இந்நிலையில் அவரது செயல், வெறும் தற்செயல் நிகழ்வா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் கணக்கு உள்ளதா? என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.

தேசிய அளவிலான இண்டியா கூட்டணிக் கட்சிகளாக இருந்தும் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் டிஎம்சி கட்சிகள் தனித்தனியாகவே தேர்தலைச் சந்தித்தன. ஆனால், இந்தமுறை 6 பொதுக் கூட்டங்களை மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி நடத்தினார். இந்தக் கூட்டங்களில், மம்தா பானர்ஜி மற்றும் டிஎம்சி மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மாநிலத்தில் ஜனநாயகம் நிலவுவதற்குப் பதிலாக, டிஎம்சியின் ஆட்சியே நடைபெற்று வருவதாகக் கூட அவர் குற்றம் சாட்டினார். அகிலேஷ் யாதவ் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்க எடுத்த முடிவுக்கு, ராகுலின் நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டது. இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி.யின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைக்கும் ஊகங்கள் நிலவுகின்றன. டிஎம்சி மீது ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவ், மம்தாவுக்கு ஆதரவான பிரச்சாரம், உபியில் ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கிவிடும் என அஞ்சிய வாய்ப்புகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன.