惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
J
Java Code Geeks
G
Google Developers Blog
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
月光博客
月光博客
B
Blog
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் வாக்களித்த ‘வெளிநாட்டு குடியுரிமை’ கொண்டவர்கள...
2026-05-15 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: “வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நபர்கள் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது” என திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சுமார் 25 நபர்கள் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.

தவறான அல்லது போலி ஆவணங்கள் மூலம் தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்று காட்டிக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது இவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்த்து, தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையும் நேரடியாகப் பாதிக்கிறது.

வாக்கெடுப்புக்கு முன்னும் பின்னும் நடைபெறும் Immigration மற்றும் Emigration குறித்த தகவல்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிவரவுப் பிரிவிடம் உள்ளதால், இந்த மிகப் பெரிய அளவிலான தேர்தல் மோசடி குறித்து சிபிஐ அமைப்பால் மட்டுமே விரிவான விசாரணையை மேற்கொள்ள முடியும்.

எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம், இது குறித்து சிபிஐ-யிடம் புகார் அளித்து, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய வேண்டுமெனவும், இந்தியத் தேர்தலில் வாக்களித்த அந்த வெளிநாட்டு குடிமக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம், வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவில் வாக்களிப்பதைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், அதற்கான வலுவான ஒழுங்குமுறைகளையும் உருவாக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

இந்​திய நாட்டு குடிமக்​கள் மட்​டுமே இந்​தி​யா​வில் நடைபெறும் தேர்தல்​களில் வாக்​களிக்க முடி​யும். வெளி​நாடு​களில் நிரந்​தரமாகத் தங்​கி​யிருப்​ப​தோடு, அந்த நாட்டு பிரஜை​யாக​வும் மாறி குடி​யுரிமை பெற்​று ​விட்​டால் அவர்​களுக்கு இந்​திய பாஸ்​போர்ட்​டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடு​களின் பாஸ்​போர்ட்​டு​கள் வழங்கப்​பட்​டு​விடும். அப்​படிப்​பட்ட வெளி​நாட்டு குடியுரிமை பெற்ற இந்​தி​யர்​கள், இந்​தியா​வுக்கு வழக்கம்போல் வந்து சென்று கொண்​டிருக்​கலாம். ஆனால், இந்​தி​யா​வில் நடக்​கும் தேர்​தல்​களில் வாக்​களிக்க முடியாது.

இந்​நிலை​யில்​தான் நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேரவைத் தேர்தலில் வாக்​களிக்க, வெளி​நாடு​களில் வசிக்கும் ஏராள​மான தமிழர்​கள், இங்கு வந்து சொந்​தத் தொகு​தி​யில் வாக்​களித்​த​தாக தகவல் வெளி​யானது. இதுகுறித்து இந்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு தகவல் சென்றது. அவர்​கள் அறி​வுறுத்​தலின்​பேரில் சென்​னை, திருச்​சி, கோவை, மதுரை உள்​ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடி​யுரிமை அதிகாரி​கள் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

வெளி​நாடு​களுக்​குச் செல்ல விமான நிலை​யம் வரும் பயணி​களின் கை விரல்​களைக் கண்​காணிக்க உத்தரவிடப்​பட்​டது. வாக்​களித்த அடை​யாள மை இருந்​து, அவர்​கள் வெளி​நாடு வாழ் இந்​திய குடியுரிமை பெற்ற பயணி​யாக இருந்​தால், அவர்​களை விமானங்களில் பயணம் செய்ய அனு​ம​திக்க வேண்​டாம்.

அவர்​களின் விமானப் பயணங்​களை ரத்​துசெய்​து, அவர்களை காவல் நிலை​யங்​களில் ஒப்​படைக்​கும்​படி​ அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்​படி வெளி​நாடு செல்ல சென்னை விமான நிலை​யம் வந்த சில வெளி​நாடு வாழ் இந்​தி​யர்​கள், தேர்​தல் ஆணைய விதி​முறைகளுக்குமாறாக, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களித்​துள்​ளது தெரிய​வந்​தது.

அவர்​கள் சென்னை உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள வாக்​குச்​சாவடிகளில் வாக்​களித்​துள்​ளனர். அதே​போல தமிழகத்​தில் உள்ள பல்​வேறு விமான நிலையங்களில் குடி​யுரிமை அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யிலும் பலர் சிக்​கி​யுள்​ளனர். இப்​படி சென்னை உட்பட தமிழகம் முழு​வதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்​திரேலி​யா, இலங்​கை, கனடா, ஐரோப்பா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் குடி​யுரிமை​கள் பெற்றவர்கள் என்​று தெரிய​வந்​துள்​ளது.

வெளி​நாடு​களில் நிரந்தர குடி​யுரிமை பெற்​றிருந்​தா​லும் நடந்து முடிந்த எஸ்​ஐஆர் பணி​களில் இவர்​கள் ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பித்து வாக்​காளர் அடை​யாள அட்டைகளைப் பெற்று வாக்​களித்​த​தாக தெரியவந்துள்ளது. இந்த விவ​காரம் குறித்து முழு விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.