惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
A
About on SuperTechFans
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
F
Fortinet All Blogs
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
MyScale Blog
MyScale Blog
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
月光博客
月光博客
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
T
Tailwind CSS Blog
Jina AI
Jina AI
有赞技术团队
有赞技术团队
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“நான் இப்போது முதல்வர்... அனைவருக்கும் பொதுவானவன்!” - சுவ...
2026-05-09 · via hindutamil

Updated on

2 min read

கொல்கத்தா: “நான் இப்போது முதல்வராக இருக்கிறேன்; நான் அனைவருக்கும் பொதுவானவன்” என்று மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “இந்த நாள் நாட்டுக்கும் மேற்கு வங்கத்துக்கும் மிகவும் முக்கியமான நாள். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான இன்று, புதிய அரசு பதவியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். அதன் காரணமாக, பிரதமர் மோடியின் தலைமையில் ரவீந்திரநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பதவியேற்பு விழா நடத்தப்பட்டது.

ஜோராசங்காவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் பிறந்த இல்லத்துக்குச் சென்று வணங்கிய பிறகே நான் எனது முதல்வர் பணிகளை தொடங்க உள்ளேன்” என தெரிவித்தார்.

தேர்தலின்போது பல்வேறு மோதல்கள் நிகழ்ந்த நிலையில், முதல்வராக உங்களது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சுவேந்து அதிகாரி, “டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிக்கு (பாஜக) வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை. நான் இப்போது முதல்வராக இருக்கிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவன். தேர்தல் முடிவுகளைப் பற்றியே இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும்.

மேற்கு வங்கம் பெருமளவில் சீர்குலைந்துள்ளது. கல்வி சீர்குலைந்துள்ளது, கலாச்சாரம் சீர்குலைந்துள்ளது. நாங்கள் மேற்கு வங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம். எங்கள் தோள்களில் மிகப் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும். நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக - திரிணமூல் காங்கிரஸ் இடையேயும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையேயும் மோதல்கள் நிகழ்ந்த நிலையில், சுவேந்து அதிகாரியின் எதிர்கால செயல்பாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தான் அனைவருக்கும் போதுவான நபர் என அவர் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப் பொரும்பான்மையுடன் கூடிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மம்தா பானர்ஜி போட்டியிட்ட பபானிபூர் தொகுதியிலும், நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றவர் சுவேந்து அதிகாரி.

பாஜகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சவேந்து அதிகாரி, இன்று மாநில முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சுவேந்து அதிகாரியுடன் திலிப் கோஷ், அக்னிமித்ரா பால், நிஷித் ப்ரமாணிக், அஷோக் கீர்த்தன்யா, குதிராம் டூடு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, தர்மேந்திர பிரதான், முதல்வர்கள் மாணிக் சர்க்கார், ஹிமந்த பிஸ்வா சர்மா, ரேகா குப்தா, புஷ்கர் சிங் தாமி, யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று இந்திய தேசிய கீதத்தை இயற்றிய வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் என்பதால், பதவியேற்பு விழா மேடையில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிரதமர் மோடி, சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.