惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
Recent Announcements
Recent Announcements
B
Blog
D
Docker
V
V2EX
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - Franky
U
Unit 42
T
The Blog of Author Tim Ferriss
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
博客园_首页
D
DataBreaches.Net
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரட...
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்​தில் பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’யை உரு​வாக்கி அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தமிழக முதல்​வ​ராக நேற்று முன்​தினம் பொறுப்​பேற்​றுக் கொண்ட விஜய், 3 முக்​கிய அரசாணை​களில் கையெழுத்​திட்​டார். அதில், ஒன்று பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகையி​லான ‘சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை’ என்​னும் திட்​டம்.

இந்த திட்​டத்​துக்​கான அரசாணையில் கூறி​யிருப்​ப​தாவது: பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், தடுப்பு மற்​றும் பாது​காப்பு உத்​தி​களை முதன்மை மற்​றும் ஒற்றை இலக்​காகக் கொண்டு செயல்​படக்​கூடிய ‘சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை’ உரு​வாக்​கப்​படும்.

ஆபத்​தில் உள்ள பெண்​களுக்கு உதவிடும் வகை​யில், இப்​படை​யினரின் இருப்பை வெளிப்​படுத்​தும் வகையி​லான நடவடிக்​கைகள் மூலம் பெண்​களிடையே நம்​பிக்​கையை ஏற்​படுத்​தி, இந்த சிறப்​பு அதிரடிப்​படை போது​மான போலீ​ஸாருடன் அதிநவீன வசதி​களு​டன் மாநிலம் முழு​வதும் உரு​வாக்​கப்படும்.

குற்றச் சம்​பவங்​கள் நிகழ வாய்ப்​புள்ள இடங்​களைக் கண்​டறிந்து கண்​காணித்​தல், பொது இடங்​களில் கண்​காணிப்பு மற்றும் தங்​கள் இருப்பை மேம்​படுத்தி சுற்​றுக்​காவல் பணி​கள் மேற்​கொண்டு குற்​றச்​சம்​பவங்​கள் நடை​பெறாமல் தடுத்​து, பெண்​களுக்கு பாது​காப்​பான சூழ்​நிலை உரு​வாக்​கப்படும்.

பேருந்து நிறுத்​தங்​கள், ரயில் நிலை​யங்​கள், கல்வி நிலை​யங்​கள் மற்​றும் தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் அமைந்​துள்ள இடங்​கள் உள்​ளிட்ட பொது​மக்​கள் அதிக அளவில் செல்லக்​ கூடிய மற்​றும் நெருக்​கடி மிகுந்த பகு​தி​களில் தங்​கள் இருப்பை அதிக அளவில் வெளிப்​படுத்​தி, சட்​ட​விரோத செயல்​கள் தடுக்கப்படும்.

புகார்​கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்​கப்​பட்ட நபர்​களை மீட்​டு, அவர்​களது பாது​காப்பு மற்​றும் நலனை உறுதி செய்​வதுடன் இதர ஆதர​வு​கள் கிடைத்​திட வகை செய்​வது உள்​ளிட்ட உதவி​கள் உரிய நேரத்​தில் செய்​யப்படும்.

சமூக நலத்​துறை, கல்​வித் துறை, அரசு​சாரா தொண்டு நிறு​வனங்​கள் சம்​பந்​தப்​பட்ட முகமை​களு​டன் ஒருங்​கிணைந்து விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வதுடன் சமூகத்​தில் பலதரப்​பட்ட மக்​களை ஒருங்​கிணைத்து பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் பணி​களில் ஈடு​படும்.

‘சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் ​படை’​யின் தலைமை அலு​வல​கம் டிஜிபி அலு​வல​கத்​தில் இயங்​கும். ஐஜி அந்​தஸ்​தில் ஒரு உயர் அதி​காரி தலை​மையேற்​பார்.

அவருக்​குக் கீழ் ஒரு எஸ்​பி, 2 டிஎஸ்​பி-க்​கள், 4 ஆய்​வாளர்​கள், 8 உதவி ஆய்வாளர்​கள் மற்​றும் 20 பேர் என மொத்​தம் 36 போலீ​ஸாருடன் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை, முதல்​வரின் நேரடி கண்​காணிப்​பில் இயங்​கும். இவ்​வாறு அதில்​ கூற​ப்​பட்​டுள்​ளது.