惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
P
Proofpoint News Feed
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
J
Java Code Geeks
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI
B
Blog
N
Netflix TechBlog - Medium
Recent Announcements
Recent Announcements
aimingoo的专栏
aimingoo的专栏
腾讯CDC
C
Check Point Blog
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - Franky
罗磊的独立博客
B
Blog RSS Feed
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 叶小钗
M
MIT News - Artificial intelligence
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரதமர் மோடிக்கு சுவீடன், நார்வேயின் உயரிய விருது
2026-05-19 · via hindutamil

Updated on

1 min read

ஸ்டாக்ஹோம்/ஓஸ்லோ: பிரதமர் நரேந்​திர மோடிக்கு சுவீடன், நார்வே நாடு​களின் உயரிய விருதுகள் வழங்​கப்​பட்டு உள்​ளன.

கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடி சுவீடன் நாட்​டுக்கு சென்​றார். அந்த நாட்​டின் கோதன்​பர்க் நகரில் நடை​பெற்ற விழா​வில் பட்டத்து இளவரசி விக்​டோரி​யாவை அவர் சந்​தித்​துப் பேசி​னார். அப்போது அவருக்கு சுவீடனின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'ராயல் ஆர்​டர் ஆப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்​டர் கிராண்ட் கிராஸ்' வழங்​கப்​பட்​டது. பட்​டத்து இளவரசி விக்டோரியா விருதை வழங்கி கவுர​வித்​தார்.

கடந்த 18-ம் நூற்​றாண்​டில் இந்த விருது தோற்​று​விக்​கப்​பட்​டது. வெளி​நாட்டு தலை​வர்​களின் சிறந்த பொதுச்​சேவைக்​காக​வும், சுவீடன் உடனான உறவை வலுப்​படுத்​து​வ​தில் அவர்​கள் ஆற்​றிய பங்​களிப்​பிற்​காக​வும் இவ்​விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விருதைப் பெற்ற முதல் ஆசி​யத் தலை​வர் என்ற பெரு​மையை பிரதமர் நரேந்​திர மோடி பெற்​றிருக்​கிறார். அவர் கூறும்​போது, ‘‘பட்​டத்து இளவரசி விக்​டோரி​யா​வுக்​கும் சுவீடன் மக்​களுக்​கும் நன்​றி. இந்த விருதை 140 கோடி இந்​திய மக்​களுக்​கும், இந்​தியா – சுவீடன் நாடு​களுக்கு இடையே​யான நீண்ட கால நட்​புக்​கும் அர்ப்பணிக்​கிறேன்.

இரு நாடு​களுக்கு இடையே உள்ள வரலாற்று மற்​றும் கலாச்​சா​ரப் பிணைப்பை விருது உறு​திப்​படுத்​துகிறது. இரு நாட்டு மக்களிடையே நீடிக்​கும் அன்​புக்​கும் சான்​றாக அமைந்​துள்​ளது’’ என்று தெரி​வித்​தார்.சுவீடன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்​றார். அங்கு அந்த நாட்டு மன்​னர் ஐந்​தாம் ஹரால்டை அவர் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது நார்வே நாட்​டின் மிக உயரிய ‘‘ராயல் நார்​வேஜியன் ஆர்​டர் ஆஃப் மெரிட்​டின் கிராண்ட் கிராஸ்’’ விருதை பிரதமர் மோடிக்கு மன்​னர் ஹரால்டு வழங்​கி​னார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளியிட்ட பதி​வில், “இந்த விருதைப் பெறு​வ​தில் மிகுந்த பெருமிதம் கொள்​கிறேன். இதை இந்​திய மக்​களுக்கு அர்ப்​பணிக்கிறேன். இந்​தி​யா, நார்வே இடையி​லான நட்​புறவுக்கு விருது சான்​றாக விளங்​கு​கிறது. உலக நாடு​களின் முன்னேற்றத்துக்​காக இரு நாடு​களும் ஒன்​றிணைந்து செயல்படுகின்​றன. இந்த அர்ப்​பணிப்பு உணர்​வை​யும் விருது பிரதிபலிக்​கிறது’’ என்றார்.

அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய நாடு​கள், வளை​குடா நாடு​கள் உட்பட உலகின் பல்​வேறு நாடு​கள் பிரதமர் நரேந்​திர மோடிக்கு உயரிய விருதுகளை வழங்கி உள்​ளன. நார்வே வழங்​கிய விருதையும் சேர்த்து அவர்​ இது​வரை 32 சர்​வ​தேச விருதுகளைப்​ பெற்​றுள்​ளார்​.