惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 叶小钗
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
宝玉的分享
宝玉的分享
博客园 - 司徒正美
WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
罗磊的独立博客
Vercel News
Vercel News
T
The Blog of Author Tim Ferriss
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
L
LangChain Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
Visual Studio Blog
S
SegmentFault 最新的问题
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்ததால் மருத்துவப் படிப்புக்...
2026-05-13 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: வி​னாத்​தாள் கசிந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால், மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழு​வதும் நடை​பெற்​றது. மொத்​தம் 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள் இந்த தேர்வை எழு​தினர். இந்​தச் சூழலில் நீட் தேர்​வுக்கு முன்​பாக ராஜஸ்​தானில் வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​தது. இதுகுறித்து மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் ராஜஸ்​தான் போலீ​ஸார் இணைந்து நடத்​திய விசா​ரணை​யில் பல்​வேறு மாநிலங்​களில் வினாத்​தாள் கசிந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​படு​வ​தாக தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது.

இதுதொடர்​பாக என்​டிஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவி​லான தேர்​வு​களை நேர்​மை​யாக​வும், நம்​பகத்​தன்​மை​யுட​னும் நடத்த என்​டிஏ உறுதி பூண்​டிருக்​கிறது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பான புகார்​களை விசா​ரிக்க மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களைக் கேட்​டுக் கொண்​டோம். அந்த அமைப்​பு​கள் விசா​ரணை நடத்தி என்​டிஏ​விடம் விரி​வான அறிக்​கையை சமர்ப்​பித்​தன. அதன் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மறு​தேர்வு தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும்.

நீட் மறு​தேர்​வுக்​குப் புதி​தாக ஆன்​லைனில் விண்​ணப்​பங்​களைச் சமர்ப்​பிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. தேர்​வுக் கட்​ட​ண​மும் செலுத்த வேண்​டாம். ஏற்​கெனவே செலுத்​திய தேர்​வுக் கட்​ட​ணம் திரும்ப வழங்​கப்​படும். என்​டிஏ-​வின் சொந்த நிதி​யில் மறு​தேர்வு நடத்​தப்​படும். மாணவ, மாணவி​கள் ஏற்கெனவே எழு​திய தேர்வு மையங்களில் மறு​தேர்வு நடத்​தப்​படும். மறு​தேர்​வுக்​கான தேதி, ஹால் டிக்​கெட் குறித்து என்​டிஏ சார்பில் அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​படும்.

மேலும் விவரங்​களுக்கு neet-ug@nta.ac.in இ-மெ​யில் முகவரி மற்​றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

தேசிய தேர்வு முகமை தலை​வர் சுபோத் குமார் சிங் கூறும்​போது, “மாணவ, மாணவி​களின் எதிர்​காலத்​தைப் பாழாக்க ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம். முறை​கேடு​களில் ஈடு​படு​பவர்​கள் அகற்​றப்​படு​வார்​கள். வலு​வான பாது​காப்பு நடை​முறை​களோடு நீட் மறு​தேர்வு நடத்​தப்​படும். இதுதொடர்​பாக விரை​வில் விரி​வான வழி​காட்டு நெறிகள் வெளி​யிடப்​படும். இதன்​மூலம் எதிர்​காலத்​தில் தவறுகள் நடை​பெறு​வது தடுக்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார்.

நீட் மறு​தேர்வு குறித்து என்​டிஏ வட்​டாரங்​கள் கூறும்​போது, “வி​னாத்​தாள் கசிவு காரண​மாகவே நீட் மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது. பாடத்​திட்​டம், வி​னாத்​தாள், தேர்வு நேரத்​தில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது. மே மாத இறுதி அல்​லது ஜூன்​ மாதத்​தில்​ மறு​தேர்​வு நடத்​தப்​படக்​ கூடும்​" என்​று தெரிவித்​தன.

ரூ.100 கோடி வரை… நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக சிபிஐ நேற்று வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணையை தொடங்கி உள்​ளது. இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

நீட் தேர்​வுக்​கான வினாத்​தாளை அச்​சடித்த அச்​சகம் அல்​லது வாக​னங்​களில் வினாத்​தாள் கொண்டு செல்​லப்​பட்ட போது வினாத்​தாள் கசிந்​திருக்​கக் கூடும் என்று சந்​தேகிக்​கிறோம். முதல் வினாத்​தாளை வழங்​கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்​கப்​பட்டு இருக்​கலாம் என்று தெரி​கிறது.

வினாத்​தாள் சில இடங்​களில் ரூ.28 லட்​சம் வரை விற்​பனை செய்​யப்பட்டு உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்​யப்​பட்டு இருப்​ப​தாகத் தெரி​கிறது.

இந்த வழக்​கில் இது​வரை கைதானவர்​களில் பெரும்​பாலானோர் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள். கேரளா​வில் மருத்​து​வக் கல்​லூரி மாணவர் பிடிபட்டு உள்​ளார். இதே வழக்​கில் மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக்​கில் சுபம் காரி​னார் என்​பவர் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர் போபாலில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​யில் பயின்று வரு​கிறார். ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, கேரளா, உத்தராகண்ட் உள்​ளிட்ட பல மாநிலங்​களின் போலீ​ஸாரிடம் இருந்து ஆதா​ரங்​களைப் பெற்று முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்​படும். தவறு செய்​தவர்​கள் நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள். இவ்வாறு சிபிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்​வேறு மாணவர் சங்​கங்​கள் சார்​பில் டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

டெல்லி மட்​டுமன்றி பாட்​னா, கோட்​டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்​வேறு நகரங்​களி​லும்​ நேற்​று போ​ராட்​டங்​கள்​ நடத்தப்பட்டன.