惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
B
Blog RSS Feed
博客园_首页
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
L
LangChain Blog
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
美团技术团队
腾讯CDC
V
Visual Studio Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் ...
டெக்ஸ்டர் · 2026-06-27 · via hindutamil

Updated on: 

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். 

ஈரானின் இந்த நடவடிக்கை இருதரப்பு அமைதி ஒப்பந்தத்தை முட்டாள்தனமாக மீறும் செயல் என்றும் அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.  

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற கப்பல்களைக் குறிவைத்து, ஈரான் குடியரசு குறைந்தது நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒரு ட்ரோன், மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஒரு சரக்குக் கப்பலின் மேல் தளத்தைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அது தனது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

எஞ்சிய மூன்று ட்ரோன்களை எங்கள் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. இது நிச்சயமாக எங்களின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முட்டாள்தனமாக மீறியுள்ளதைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.  

ட்ரம்ப் குறிப்பிட்ட கப்பலின் பெயரைத் தனது பதிவில் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், தைவானைச் சேர்ந்த பிரபல கப்பல் போக்குவரத்து நிறுவனமான எவர்க்ரீன் மெரைன் இதுகுறித்து அதிகாரபூர்வ விளக்கமளித்துள்ளது. தங்களுக்குச் சொந்தமான, சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த எவர் லவ்லி என்ற கன்டெய்னர் கப்பல், ஓமன் கடற்பரப்புக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சென்றபோது அடையாளம் தெரியாத பொருள் ஒன்றால் தாக்கப்பட்டது உண்மைதான் என்று அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இத்தாக்குதலில் கப்பலின் மேல் தளத்தின் சில ஜன்னல்கள் சேதமடைந்த போதிலும், கப்பலில் இருந்த 21 ஊழியர்களுக்கும், உள்ளே இருந்த சரக்குகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கப்பல் பாதுகாப்பாகத் தனது பயணத்தைத் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் தான் 60 நாட்களுக்கான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வணிகக் கப்பல் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இது என்பதால்,ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐநா சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு தனது மீட்புப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.  

மறுபுறம், ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி, ஈரானின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலின் பாதுகாப்பிற்கும் தங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று எக்ஸ் பக்கத்தில் எச்சரித்துள்ளார். 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ “ஈரான் தொடர்ந்து கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தினால், அது மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ள சூழலில், இந்த ட்ரோன் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி அமைதிப் பேச்சுவார்த்தையைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.