惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
V
V2EX
The GitHub Blog
The GitHub Blog
T
Threatpost
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Security Latest
Security Latest
A
Arctic Wolf
Google DeepMind News
Google DeepMind News
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
V
Vulnerabilities – Threatpost
P
Proofpoint News Feed
W
WeLiveSecurity
Cloudbric
Cloudbric
C
Check Point Blog
Google Online Security Blog
Google Online Security Blog
MyScale Blog
MyScale Blog
T
The Exploit Database - CXSecurity.com
U
Unit 42
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
PCI Perspectives
PCI Perspectives
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
Spread Privacy
Spread Privacy
Hugging Face - Blog
Hugging Face - Blog
O
OpenAI News
N
News and Events Feed by Topic
The Last Watchdog
The Last Watchdog
P
Proofpoint News Feed
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
P
Privacy & Cybersecurity Law Blog
T
Threat Research - Cisco Blogs
博客园 - 聂微东
V
Visual Studio Blog
美团技术团队
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
G
GRAHAM CLULEY
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
C
CERT Recently Published Vulnerability Notes
Know Your Adversary
Know Your Adversary
小众软件
小众软件
Engineering at Meta
Engineering at Meta
NISL@THU
NISL@THU
K
KPMG report finds enterprise disconnect between AI and its ROI | CIO
人人都是产品经理
人人都是产品经理
Cisco Talos Blog
Cisco Talos Blog
Martin Fowler
Martin Fowler
T
Troy Hunt's Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
பேரவைத் தேர்தல் 2026: ஏன் வாக்களிக்க வேண்டும்?
2026-04-23 · via hindutamil

Updated on

3 min read

‘நான் ஏன் வாக்கு அளிக்க வேண்டும்?’ - தமிழகத்தில் இன்று நடைபெறுகிற தேர்தலில் ‘ஜென் இசட்’ தலைமுறையினரின் தெரிவு என்னவாக இருக்கப்போகிறது என்கிற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ள சூழலில், அவர்களிடையே மேற்கண்டதுபோல் கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

இளைஞர்களை வாக்காளர் வட்டத்துக்குள் கொண்டுவருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுதான், கடந்த சில மாதங்களாகவே இந்தியத் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டு வந்தது.

அசாமில் தேர்தல் ஆணையம் நடத்திய இத்தகைய நிகழ்ச்சிகளில் ‘சோட்டா பீம்’, ‘சுட்கி’ போன்ற குழந்தைகளுக்கான கார்ட்டூன் தொடர் கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. கேரளத்தில் அண்மைத் தேர்தலில் புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அல்வா அளித்தது.

புரியாத மௌனம்

வாக்குப்பதிவில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவது கவலைக்குரிய வெற்றிடம். சாலை விதிமீறல்கள், சாதிமோதல்கள், பாலியல் குற்றங்கள் போன்றவற்றில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபடும்போது, கல்வியின் பயன்தான் என்ன என்கிற கேள்வி எழுவது வாடிக்கை.

தேர்தலிலிருந்து அவர்கள் தங்களை விலக்கி வைத்துக்கொள்வதற்கும் அந்தக் கேள்வி பொருந்தும். பள்ளிப் பருவத்தில் தேர்தல் குறித்த அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தும்வகையிலான தகவல்கள் பாடங்களில் உண்டு.

ஆனால் பாடத்திட்டத்தில் அறிவியல், கணிதம் குறித்த பாடங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வரலாறு, சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

மாணவருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்ட கல்வியமைப்பு, அது அவர்களைப் பொறுப்புள்ள குடிமக்கள் ஆக்குவதையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைந்திருக்கவில்லை.

இந்த அமைப்பு தங்களிடம் எதை வலியுறுத்து​கிறது, எதை மேம்போக்காக எதிர்​பார்க்​கிறது என்கிற வித்தி​யாசத்தை மாணவர்கள் உணர்ந்தே இருக்​கின்​றனர். வாக்களிப்பது உள்ளிட்​ட​ வற்றுக்கு உரிமை அளிக்​கப்​படுகிற பதினெட்டு வயதை அவர்கள் அடையும்​போது, சமூகம் அவர்களிடம் பல வகையான பங்களிப்புகளை எதிர்​பார்க்​கிறது. ஆனால் அதற்கான உள்ளார்ந்த ஆயத்தங்கள் நடந்திருக்​காத​போது, புதிர் போன்ற மௌனம்தான் இளைஞர்​களிட​மிருந்து பதிலாகக் கிடைக்​கிறது.

கற்பிக்கும் பெரியோர்

உள்ளுணர்வு மூலமாக மட்டுமல்லாமல், பெற்றோர் உள்ளிட்ட பெரியவர்களைக் கவனித்தும்தான் குழந்தைகள் தங்களைத் தகவமைத்துக்கொள்கின்றனர். தேர்தலுக்கும் இளம் தலைமுறையினருக்குமான தொடர்பும் பெரியவர்களின் தாக்கத்துக்கு உட்பட்டதுதான்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் ‘இந்த நிகழ்வால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது?’ என்கிற கேள்வியைக் குடும்பத்திலோ, பொதுவெளியிலோ முன்வைக்கும் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த அணுகுமுறையை நிர்ணயிப்பதில் அவர்களின் வாழ்க்கைத்தரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கை அற்ற இவர்கள் கிராமப்புறங்களிலும் இருக்கலாம்; நகர்ப்புறங்களிலும் இருக்கலாம். ஆனால், இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.

அகற்றப்படத்தக்க அறியாமை

பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் மகனையோ, மகளையோ தடுத்துத் தங்களின் வீட்டு வேலை அல்லது தோட்ட வேலைக்கு அனுப்பிய தந்தைகள் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் இருந்தனர்.

படிப்பிலிருந்து விடுபட்ட, ஆனால் குழந்தைகளை விடுபட வைக்க இயலாத பெற்றோராக அவர்கள் இருந்தனர். அடுத்த தலைமுறையானது படிப்பின் பலனை முழுமையாக அனுபவிக்கும் காலத்தில் அடியெடுத்து வைக்காததால், ‘படிப்பு சோறு போடாது’ என்கிற கருத்தை இவர்கள் பற்றிக்கொண்டு இருந்தனர்.

இந்தப் பிரிவினரில் எஞ்சிய சிலர் தேர்தலையும், இதேபோல அணுகுவதைச் சிற்றூர்களில் காண முடியும். பரப்புரை நடவடிக்கைகளால் இந்த அறியாமையை அகற்றிவிட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

பின்புலத்தில் இயங்கும் பிடிவாதம்

வாக்களிப்பிலிருந்து எளிதில் விடுபடும் தரப்பினராகத் தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ள நகர்ப்புற வாக்காளர்களின் நிலை இதிலிருந்து வேறுபட்டது. குறிப்பாக, அனைத்து வசதிகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் மேல்தட்டுப் பிரிவினர், தேர்தல் குறித்து வெளிப்படுத்தும் அவநம்பிக்கை பரவலாக அறியப்பட்ட ஒன்று.

குடிமக்கள் தங்களை அரசிடம் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரே வழி தேர்தல் என்பதை இவர்கள் புரிந்துகொண்டிருப்பினும், வாக்களிப்பதை இவர்கள் தவிர்க்கின்றனர். பிடிவாதமான மனநிலை இதன் பின்புலத்தில் உள்ளது எனலாம்.

சுய விருப்பத்தின் அடிப்படையில் இவர்கள் செய்துகொள்ளும் வெளியேற்றம் பிரச்சினைக்குத் தீர்வாக அமைவதில்லை. குறைகள் இருப்பினும், குடியாட்சி முறையில் ஒரு சமூகம் தன்னைத் தானே நிர்வகித்துக்கொள்ள, தேர்தல் தவிர்க்கப்படவே முடியாதது.

பங்கேற்பாளர்கள் குறையக் குறைய ஓர் இடமோ, துறையோ பெரும்பான்மைச் சமூகத்துக்குப் பயனற்ற ஒன்றாகவே மாறும் என்பதே உலக நடைமுறை. மைதானத்துக்கு உள்ளிருக்கும் ஒருவருக்குத்தான் ஆட்டத்தை விமர்சிக்கும் தகுதி உள்ளது. இதை இவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பரப்புரைகள் அமைய வேண்டும்.

அரசியல்வாதிகளின் பொறுப்பு

தேர்தலை மறைமுகமாகப் புறக்கணிப்பவர்கள் தேர்தல் கட்டமைப்புக்குள் வருவதில், அரசியல் தலைவர்களின் ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. வாக்களிக்கப் பணம் தரப்படும் கலாச்சாரம், தேர்தல் கருத்தியலின் அடித்தளத்தையே சிதைப்பதோடு, பலரைத் தேர்தலிலிருந்து விலகி இருக்க வைக்கிறது.

பேச்சு, நேர்மை, பிரச்சினைகளை அணுகும் விதம், வெளிப்படைத்தன்மை, சமத்துவம், மொழி, பண்பாடு குறித்த புரிதல், கடந்த காலச் செயல்பாடுகள் எனப் பல கூறுகள் ஓர் அரசியல் ஆளுமைக்கு உருக்கொடுக்கின்றன.

இளைஞர்களும் அதிருப்தியில் உள்ள பெரியவர்களும் ஆர்வத்தோடு தங்களை இணைத்துப் பார்த்துக் கொள்ளும் வகையிலான அரசியல் தலைவர்களின் செயல்பாடு, வாக்குப்பதிவை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பெண் வாக்கு

வாக்கு சதவீதத்தை உயர்த்துவதில் பெண்களின் பங்கேற்பையும் அதிகரிக்கச் செய்ய, தேர்தல் ஆணையம் முயல்கிறது. பெண்களின் வாக்குகளைக் குறிவைத்துக் கட்சிகள் பல இலவசத் திட்டங்களை முன்வைக்கும் அளவுக்குப் பெண்களின் தேர்தல் பங்கேற்பு வலுவானதாக இருப்பினும், அவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் வாக்களிக்கத் தவறும் நிலையே கள நிலவரமாக உள்ளது.

ஆனால் இது பெண்கள் விரும்பி எடுக்கும் முடிவல்ல. குடும்பம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள், நடைமுறைச் சிக்கல்கள் போன்றவை அவர்களின் வாக்குரிமையையும் பாதிக்கின்றன. அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் பெரும்பங்கு அதிகாரத்தை வசப்படுத்தியுள்ள ஆண்கள், இந்த விஷயத்தில் தங்கள் பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

பெண்கள் வாக்களிப்பது, குடும்பத்தின் கடமையாக ஆண்களால் கருதப்பட வேண்டும். குடும்பத்தை நிர்வகிப்பதில் பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை ஒப்புக்கொள்ள முடிகிற ஆண்களால்தான் இத்தகைய ஒத்துழைப்பும் சாத்தியமாகும்.

உணவு, உடை, உறைவிடம் உள்ளிட்ட அனைத்திலும் உலக அரசியலிலிருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் பின்னிப்பிணைந்துள்ளன. அதில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளை சில வரம்புகளுக்கு உட்பட்டாவது தேர்தல் அளிக்கிறது.

யாரையும் தேர்ந்தெடுக்க விரும்பாதவர்களுக்கு ‘நோட்டா’ என்கிற தெரிவும் அளிக்கப்பட்டுள்ளது. நூறு சதவீத வாக்களிப்பு, தேர்தல் ஆணையத்தின் லட்சியமாக உள்ளது.

வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சில நாடுகளின் நடைமுறையும் விமர்சனத்துக்கு உரியது. குடியாட்சித் திருவிழாவாக அணுகப்படும் தேர்தல், பெரும்பாலான மக்களின் பங்களிப்பால்தான் உயிரோட்டம் கொண்டதாகவும் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் அமையும் என்பது மட்டும் உறுதி. வாக்காளர்கள், வேட்பாளர்கள் ஆகிய இரு தரப்பின் கூட்டுப் பொறுப்பால்தான் அது சாத்தியப்படும்.

- தொடர்புக்கு: anandchelliah.hindutamil.co.in