惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
B
Blog
N
Netflix TechBlog - Medium
量子位
月光博客
月光博客
博客园_首页
博客园 - Franky
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
J
Java Code Geeks
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
GbyAI
GbyAI
IT之家
IT之家
Y
Y Combinator Blog
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | ...
பாரதி ஆனந்த் · 2026-01-24 · via hindutamil

Updated on: 

அன்புள்ள அருண்,

இந்த அத்தியாயம் உனக்கு சமர்ப்பணம். 24 வயதில் நீ வேலூரில் உனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த காலம் அது. அப்போதுதான் அது நடந்தது. தற்செயலா எனத் தெரியவில்லை. புற்றுநோய் தொடர்பான கதைகள் கொண்ட மூன்று படங்களை அடுத்தடுத்து நான் பார்க்க நேர்ந்தது. ஒருவேளை அப்போதெல்லாம் நான் அடிக்கடி உன் நோய் பற்றி இணையத்தில் தேடியதால் எனக்கு அந்தப் படங்கள் பரிந்துரைப் பட்டியலில் வந்ததா என்றுகூட தெரியவில்லை. மூன்றையும் பார்த்தேன்.

நான் முதலில் பார்த்தது ‘தில் பெச்சரா’ (Dil Bechara). சுஷாந்த் சிங் புற்றுநோயாளியாக நடித்த இந்திப் படம். சுஷாந்த் இறந்துபோகும் காட்சியில் உன்னுடைய மரணத்துக்காக முன்கூட்டியே அழுது தீர்த்தேன். என்னை யாரும் தேற்றக்கூட நான் அனுமதிக்கவில்லை.

அடுத்து நான் பார்த்தது அபிஷேக் பச்சன் நடித்த ‘ஐ வான்ட் டு டாக்’ (I want to Talk). இது ஓர் உண்மைக் கதையின் தழுவல். அந்தப் படத்தால் உனக்கு நம்பிக்கை வார்த்தை சொல்ல ஆசை வந்தது. ஆனால், எனக்குதான் மருத்துவர் சொன்ன உண்மை தெரியுமே. மேலும், நான் பேசுவதைக் கேட்கக் கூட நேரம் இல்லாமல் வலி உன்னை விழுங்கிக் கொண்டிருந்தது.

நான் கடைசியாக பார்த்த புற்றுநோயாளி பற்றிய கன்னட படம் தான் 2023-ல் வெளிவந்த ‘ஸ்வாதி முத்தின மலே ஹனியே’ (Swathi Mutthina Male Haniye). ஆனால், முந்தைய இரண்டு படங்கள் போல் அல்லாமல், ராஜ் பி ஷெட்டி இயக்கி நடித்த இந்தப் படம் என்னை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நோய் முற்றிய நிலையில் இருக்கும் உன்னை, உன்னைப் போன்ற பிறரை அணுக வைத்தது.

அருண்... நீ வேதனை நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில், என்னுடன்தான் உன் பாட்டி தங்கியிருந்தார். அவருடன் தான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் அந்தப் படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ‘அந்தப் பையனுக்கு என்னாச்சு?’ என்றார். ‘அருணுக்கு வந்த நோய்’ என்றேன். படத்துக்குள்ளேயே சென்றுவிட்டார். இடையிடையே நெகிழ்ச்சியான காட்சிகளில் விளக்கம் கேட்டறிவார்.

உன் வேதனைகளை சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் உன் பாட்டி, அந்தப் படத்தைப் பார்த்து, அதில் அவன் மரணத் தருவாயில் பரிசாக வந்தவளின் பேரன்பைப் பார்த்து ஆசுவாசம் அடைந்ததை உணர்ந்தேன்.

பிரேரனா... அவள் தான் நாம் இந்த அத்தியாயம் வாயிலாக தரிசிக்கப்போகும் பேரன்புக்காரி.

படத்தின் ஆரம்பக் காட்சியில் பிரேரனா, “இங்கே இருப்பவர்கள் அனைவருமே மரணத்துக்காக காத்திருப்பவர்கள். அதை எதிர்கொள்ள அவர்களை நான் தயார்படுத்துபவள்” என்று தன் பணியை விளக்குவாள். படம் முடிந்தபோது பிரேரனா, அருணின் மரணத்தை எதிர்கொள்ள அவனது பாட்டியையும் தயார் படுத்தியிருந்தாள்.

பிரேரனா, அனிகேத், அம்மா, பிரபாகர் மற்றும் நந்தியாவட்டை செடி...

மழையும், பனியும் மாறி மாறி வரும் மலைப் பிரதேசப் பின்னணியில்தான் இந்தப் படம் நகரும். ஆங்கிலத்தில் ‘பிக்சரஸ்க் பியூட்டி’ என்பார்களே, அதை ஒளிப்பதிவாளர் கச்சிதமாக படம்பிடித்திருக்க, இசையமைப்பாளர் ஆன்மாவை வருடும் ராகங்களை மீட்டியிருப்பார்.

பிரேரனா என்றால் உத்வேகம் தருபவள் என்று அர்த்தமாம். நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஆசைகள், லட்சியங்கள் இருக்கும். பிரேரனாவின் பராமரிப்புக்குள் இருப்போருக்கு ‘பிழைத்துக் கிடக்க மாட்டோமா’ என்ற ஒற்றை ஆசை மட்டும்தான். அவர்களுக்கு உத்வேகப் பேச்சுக்களை உதிர்க்கும் பிரேரனாவின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் தான் படம்.

அது முதல் சந்திப்பு. பிரேரனா காட்டேஜ் எண் 5-ல் அனிகேத்தை சந்திக்கச் செல்வாள். அவள் கதவைத் திறக்கும் நேரம் ஜன்னலைப் பார்த்து கவிதை பேசிக் கொண்டிருந்தவன், அவள் சென்ட் வாசனையை முகர்ந்து, இதை அணிந்தவர் அழகானவர் என்று முகம் பார்க்காமல் சொல்வான். அந்த ஒரு நொடி பிரேரனாவின் லைஃப் ரொட்டீன் ஃப்ளாஷ் ஆகிச் செல்லும். ஒரு தட்டையான வாழ்வில் முதன்முதலில் ரசனை பாய்ந்த புத்துணர்வோடு உரையாடல் தொடங்கும். ஓர் உன்னத பிணைப்புக்கான விதை அது.

அடுத்தடுத்த நாட்களில் ஹாஸ்பைஸ் மையத்தில் அனிகேத்தின் பிடிவாதங்கள் தொடர, வேலை அழுத்தத்தால் முன்கூட்டியே வீட்டுக்குச் செல்லும் பிரேரனா, தன் கணவரின் திருமணத்தை மீறிய உறவை அறிந்து ஓர் ஏரிக்கரையில் காருடன் ஒதுங்கும்போது போதையில் அனிகேத் மயங்கிக் கிடப்பதைப் பார்ப்பாள். அவனை காரில் ஏற்றிக் கொண்டு ஹாஸ்பைஸ் மையம் செல்லும் வழியில் அவனை வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று சிபாரிசு செய்வாள்.

ஆனால், அவனிடம் இருந்து எடுத்து கசக்கி எறிந்த கவிதைக் காகித்தை வாசிப்பாள். அது அவள் ட்ரான்ஸ்ஃபர்மேஷனின் முதல் படி. ஒரு திருப்புமுனை. அந்தக் கடிதம் அனிகேத் மீது அவளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும். அதை ஒரு பரிசுப் பொருளாகக் கொடுக்கும் அவளுக்கே அதை பரிசாகத் தந்து அனுப்புவான் அனிகேத்.

இன்னொரு நாள் பிரேரனாவின் காட்டன் புடவையை தொட்டுப் பார்க்க ஆசைப்படுவான். பெரிதும் நெருங்கிவிடாத அனிகேத்தின் அந்த ஆசைக்கு இணங்குவாள், கூடவே அதுபோல் ஒரு சேலையை யாருக்கேனும் பரிசளிக்கக் கேட்கிறானோ என்று உறுதி செய்து கொள்வாள். அன்பின் அடுத்த நிலையாக அவன் மீது ஓர் உரிமை கொண்டாடலுக்கு அவளை அறியாமலேயே தயாராகி இருப்பாள் பிரேரனா.

அந்த ஹாஸ்பைஸ் மையத்தில் ஒவ்வொரு நபர் வருகையின்போதும் ஒரு மரமோ, செடியோ நடுவது வழக்கம். அனிகேத் அவனுக்காக தேர்வு செய்தது ஒரு நந்தியாவட்டை செடி. அது பற்றிய உரையாடலில், அனிகேத் அளிக்கும் விளக்கம் ரூமியின் கவிதை போல் இருக்கும்.

“நந்தியாவட்டை செடி அன்றாடம் பூக்கும். அதை பூஜைக்கு பெரிதாக பயன்படுத்துவதில்லை. அதை யாரும் கவிதை பாடிக் கொண்டாடுவதில்லை. அதனால் அதை யாரும் பெரிதும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அது தனக்காகப் பூக்கிறது. அதுபோலவே நான்.”

அனிகேத்தின் இந்த விவரிப்பு, பிரேரனாவை தன் சுயத்தை மதிக்கக் கற்றுக் கொடுக்கும்.

இங்கே நம்மில் பலரும் நம்மை யாருக்காவது ப்ரூவ் பண்ணவே நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அதன்பிறகு மலர்ந்து உதிர்ந்த நந்தியாவட்டை அவளுக்கு குப்பையாகத் தெரியாது.

அடுத்தடுத்து வரும் நாட்களில் அனிகேத்தும் பிரேரனாவும் தங்களுக்கு இடையே இருக்கும் அன்பு ஒருவித தியான நிலை என்பதை உணர்வர். பிரேரனாவின் வாழ்க்கை அனிகேத்தின் அன்பாலும், அனிகேத்தின் வாழ்க்கை ‘மரணப் பரிசாக’ வந்த பிரேரனாவின் பேரன்பாலும் அழகாகிக் கொண்டிருக்கும்.

அப்போது, பிரேரனாவின் அம்மாவின் வருகை, அவளுக்குள் நிகழும் மாற்றங்களுக்கு ஓர் அங்கீகாரத்தைத் தரும்.

மகள் வீட்டுக்கு வந்த மாத்திரத்திலேயே அவளின் இல்லற வாழ்வு சோபிக்கவில்லை என்பதை தாய் புரிந்து கொள்வார். தாய் மனம் கோணக்கூடாது என்று தன்னுடன் அழைத்துச் செல்லும் பிரேரனா வழியிலேயே அனிகேத்தை பற்றி சொல்லி நேரே அவனிடம் அழைத்துச் செல்வாள்.

தனது கணவன் தாயை நடத்திய விதமும், அனிகேத் தன் தாயை, அத்தனை வேதனைகளுக்கு இடையேயும் எங்கேஜ் செய்யும் பாங்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக அவளுக்குத் தெரியும். அந்த அழகான தருணத்தை தன் மொபைலில் படமாக அடைத்துக் கொள்வாள்.

அன்றைய இரவு உணவுக்குப் பின்னர் அம்மா - மகள் உரையாடல் படத்தின் உயிர்நாடி. நந்தியாவட்டை மலர்களை ரசித்தபடி அமர்ந்திருக்கும் அம்மாவிடம், “எனக்கு அனிகேத்தை பிடித்திருக்கிறது. அது தவறா?” எனக் கேட்பாள்.

“ஒரு திருமணமான பெண் தன் அம்மாவிடம் இப்படிக் கேட்டாள் அது தவறென்பேன். ஆனால் ஒரு பெண்ணாக, அன்புக்காக ஏங்கும் சக பெண்ணாக ஒரு திருமணமான பெண் இப்படி இன்னொருவனைப் பிடித்திருக்கிறது என்று சொன்னால், அதை தவறென்று சொல்ல மாட்டேன்.”

அம்மாவின் இந்த அங்கீகார வார்த்தைகளே காதல், திருமணம், அன்பு எல்லாவற்றின் மீதும் பிரேரனாவுக்கு புதிய பார்வையைக் கொடுக்கும்.

அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அனிகேத் - பிரேனனா உறவை சுற்றத்தாரை அறியச் செய்யும். அதனை பிரேனனா எதிர்கொள்ளும் சம்பவங்களும், அனிகேத்தை இந்த உலகை விட்டு வழியனுப்பி வைக்கும் விதமும்தான் படம்.

கணவனின் குதர்க்க கேள்விகளுக்கு பிரேனனா கடத்தும் மவுனப் பார்வையே அவனை குற்ற உணர்வில் நெளியும் சூழலுக்குத் தள்ளும். இந்தக் காட்சியே பிரேரனா தன்னை உணர்ந்து, செதுக்கி, வளர்த்துக் கொண்டிருந்ததன் சாட்சி.

ஹாஸ்பைஸ் மையத்தின் வாட்ச்மேன் பிரபாகரன் பணி நிமித்தமான கேள்விக்கு மட்டுமே பதில் சொல்வாரே தவிர மற்றபடி மவுனி. அவரிடம் அனிகேத் பேச முயற்சிக்கும்போது, ‘நாளைக்கு சாகப்போறவரிடம் என்ன பேச்சு’ என்று ஈட்டி பாய்ச்சுவதும், ‘நாளை இருக்காமல் போகலாம் என்பதால்தான் இன்று பேசு என்கிறேன்’ என்று அவன் மவுனத்தை அனிகேத் உடைப்பதும் உணர்வுபூர்வ காட்சியமைப்பின் உச்சம்.

அனிகேத்துக்காக மீன் வாங்கிக் கொண்டுவந்து சமைக்கும் காட்சியில்தான் பிரபாகரன் தன் கதையை சொல்வான். அதுநாள் வரை ஹாஸ்பைஸ் மையத்தில் ‘யூ ஆர் பிரேவ்’, ‘யூ ஆர் ஸ்ட்ராங்க்’, ‘யூ கேன் ஹேண்டில் திஸ்’ எனச் சொல்லி எல்லோருடைய துக்கத்துக்காகவும் பாத்ரூமில் அழுது தீர்க்கும் பிரேரனா, பிரபாகரை தேற்றும்போதுதான் உண்மையான கவுன்சலராக மாறியிருப்பார்.

‘இன்றொரு இரவு என்னுடன் தங்குவாயா..?’ என்று கேட்கும் அனிகேத்துடன், பிரேரனா செலவழிக்கும் அந்த ஓர் இரவு, அவர்கள் காதலின் தீபம் ஒளிரும் நாள்.

மரணம் பற்றிய அனிகேத்தின் புரிதலும், மனிதர்கள் மீது அவனுக்கு இருக்கும் அன்பும் பிரேரனாவுக்கு பெரும் பாடம். நமக்கும்தான்.

அதன் பின்னர் கதையில் நிகழ்பவை எல்லாமே வாழ்க்கையின் தத்துவம். இயக்குநர் ராஜ் பி ஷெட்டி கதையை கவிதையாய் எழுதி, அதன் கடைசி வரிகளை க்ளைமாக்ஸில் வாசித்திருப்பார்.

‘அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்பது அன்புக்கு வேலிகள் இல்லை என்பதையும் சேர்த்தே உணர்த்துகிறது.

இதுதான், இப்படித்தான், இவ்வளவுதான், இவருக்குத்தான்... இந்த எல்லா வரம்புகளையும் கடந்து ஒருவர் மீது இன்னொருவர் செலுத்தும் நிபந்தனையற்ற அன்பே பேரன்பு. அது மழைத்துளி சிப்பியில் சேர்ந்து முத்தாகும் நிகழ்வைப் போன்றது, பிரேரனா - அனிகேத் அன்பைப் போன்றது.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |