惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
罗磊的独立博客
爱范儿
爱范儿
J
Java Code Geeks
博客园 - 司徒正美
N
Netflix TechBlog - Medium
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
小众软件
小众软件
Google DeepMind News
Google DeepMind News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
博客园 - 聂微东
云风的 BLOG
云风的 BLOG
WordPress大学
WordPress大学
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
博客园 - 叶小钗
人人都是产品经理
人人都是产品经理
Martin Fowler
Martin Fowler
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைய வாய்...
சி.எஸ். ஆறுமுகம் · 2026-06-26 · via hindutamil

Updated on: 

கும்பகோணம்: “காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்று வேளாண் அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், அலுவலகத்தை தூய்மைப் பணியாளுடன் இணைந்து வேளாண் துறை அமைச்சர் வினோத் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். மேலும், அலுவலகத்துக்குள் இருந்த முதல்வர் விஜய்யின் உருவப் படத்தை வணங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத் கூறியது: ”எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த கும்பகோணம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன். அதற்காக நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களின் தேவையை அனைத்தையும் பூர்த்தி செய்வேன் என சத்தியமாக உறுதி அளிக்கிறேன்.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு முதல்வரிடம் தெரிவித்து விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். திருவிடைமருதூர் தொகுதியில் வேளாண் கல்லூரி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், எந்தவொரு அரசும் ஆட்சிக்கு வந்த 40 நாட்களுக்குள் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பயிர்க் கடன் தள்ளுபடி செய்தது இல்லை. ஆனால், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களிலேயே பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்துள்ளோம்.

விரைவில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் ஆய்வு செய்து, அறிவிப்பை வெளியிடுவார். காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

வாழை சாகுபடிக்கு காப்பீடு செய்வது தொடர்பாக இந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். அனைத்து துறையில் இருந்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பொறுத்திருந்து பாருங்கள்.

தமிழகத்தில் விவசாயத்தை முன்னோடியாக கொண்டுவர வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வளர்ச்சிப் பாதை கொண்டு செல்ல வேண்டும் என அவர் முயற்சித்து வருகிறார்.

காவிரி நீர் கண்டிப்பாக வரும். எல் நினோவால் டெல்டா மாவட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் எந்த வகையான பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றோம். இதேபோல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அது சார்ந்த திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும்” என்று அமைச்சர் வினோத் கூறினார்.

தொடர்ந்து, போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் தூய்மை பணியாளர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.