惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学
博客园 - Franky
小众软件
小众软件
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
IT之家
IT之家
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
S
SegmentFault 最新的问题
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
有赞技术团队
有赞技术团队
B
Blog RSS Feed
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
博客园 - 司徒正美
The Cloudflare Blog
博客园_首页
博客园 - 聂微东
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதுரை விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று மலைக்கு புறப்படுகி...
2026-05-04 · via hindutamil

சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று பிற்பகல் ஆழ்வார்புரத்தில் உள்ள அறநிலையத் துறை மண்டகப்படியில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். படங்கள்: நா.தங்கரத்தினம்

Updated on

2 min read

மதுரை: மதுரை தல்​லாகுளம் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டகப்​படி​யில் பூப்​பல்​லக்​கில் எழுந்​தருளிய கள்​ளழகரை பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் நேற்​றிரவு முதல் இன்று காலை வரைவிடிய விடிய தரிசனம் செய்தனர்.

மே 6-ல் திரு​விழா நிறைவு​பெறு​வதை முன்​னிட்டு இன்று மலைக்​குப் புறப்​படு​கிறார். மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா ஏப்​.27-ம் தேதி தொடங்​கியது.

மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்க சுந்​தர​ராஜப் பெரு​மாள் கள்​ளழகர் கோலத்​தில் ஏப்​.29-ல் அழகர்​மலை​யி​லிருந்து மதுரைக்​குப் புறப்​பட்​டார்.

ஏப். 30-ல் மூன்​று​ மாவடி​யில் எதிர்​சேவை நடந்​தது. மே 1-ம் தேதி அதி​காலை 5.48 மணிக்கு பச்​சைப் பட்டு உடுத்தி கள்​ளழகர் தங்​கக் குதிரை​யில் வைகை ஆற்​றில் இறங்​கி​னார்.

ராம​ராயர் மண்​டபத்​தில் பக்​தர்​கள் தண்​ணீர் பீய்ச்சி அடித்து தீர்த்​த​வாரி செய்து குளிர்​வித்​தனர். அன்​றிரவு வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கி​னார்.

இதையடுத்து 6-ம் நாளான மே 2-ம் தேதி மதுரை வண்​டியூரிலுள்ள பெரு​மாள் கோயி​லிலிருந்து கருட வாக​னத்​தில் புறப்​பா​டாகி தேனூர் மண்​டபத்​தில் சுந்​தர​ராஜ பெரு​மாள் எழுந்​தருளி​னார்.

அங்கு திரு​மஞ்​சன​மாகி மண்​டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்​தார். அதைத் தொடர்ந்து ராம​ராயர் மண்​டபத்​தில் இரவு 11 மணி​யள​வில் எழுந்​தருளி​னார்.

அங்கு திரு​மஞ்​சன​மாகி இரவு தொடங்கி விடிய விடிய தசாவ​தார நிகழ்ச்சி நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்​தனர்.

மேலும் 7-ம் நாளான (மே 3) நேற்று காலை 7 மணி​யள​வில் மோகினி அவதா​ரத்​தில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். பின்​னர் அனந்​த​ராயர் பல்​லக்​கில் ராஜாங்க திருக்​கோலத்​தில் பிற்​பகல் 3.30 மணி​யள​வில் புறப்​பா​டாகி வழிநெடு​கிலும் உள்ள மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி​னார்.

அப்​போது அழகரின் சடாரி அக்​கரை​யிலுள்ள மண்​டகப்​படிக்​குக் கொண்டு செல்​லப்​பட்டு பூஜை நடை​பெற்​றது. இதி​லும் ஏராள​மானோர் கலந்து கொண்​டனர்.

பின்​னர், தல்​லாகுளத்​தி​லுள்ள ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபத்​தில் இரவு 11 மணிக்கு கள்​ளழகர் எழுந்​தருளி​னார். அங்கு கள்​ளழகர் கோலத்​தில் இன்று (மே 4) அதி​காலை 2 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் எழுந்​தருளி​னார்.

அங்​கும் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் விடிய விடிய தரிசனம் செய்​தனர். பின்​னர் கருப்​பண​சாமி கோயில் வையாளி சேவை முடிந்து தல்​லாகுளம் பெரு​மாள் கோயி​லில் எழுந்​தருளி மதுரை விஜ​யத்தை முடித்து மலைக்​குப் புறப்​பட்​டார்.

தொடர்ந்து ரிசர்வ் லைன், புதூர், சர்​வேயர் காலனி வழி​யாக பல்​வேறு மண்​டகப்​படிகளில் எழுந்​தருளுகிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணி​யள​வில் அழகர்​கோ​வில் இருப்​பிடம் சேர்​கிறார்.

மே 6-ல் உற்சவ சாந்​தி​யுடன் திரு​விழா நிறைவு​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.