惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
博客园 - Franky
GbyAI
GbyAI
B
Blog
WordPress大学
WordPress大学
D
Docker
小众软件
小众软件
月光博客
月光博客
博客园 - 【当耐特】
T
The Blog of Author Tim Ferriss
IT之家
IT之家
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
Vercel News
Vercel News
H
Help Net Security
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
S
SegmentFault 最新的问题
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜேஜிஎஃப்: ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் உருவானது எப்படி? - எக...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

ஆந்​தி​ரா​வின் கர்​னூல் மாவட்​டம், துக்​காலி மண்​டலம், ஜொன்னகிரி பகு​தி​யில் புதிய தங்​கச் சுரங்​கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது இந்​தி​யா​வின் முதல் தனி​யார் தங்​கச் சுரங்​கம் ஆகும். இதை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு திறந்​து ​வைத்திருக்கிறார். அப்போது அவர் பகிர்ந்த தகவல்களை முதலில் பார்ப்போம்.

ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​வது இந்த ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பெல்லாம் சுவர்​ணகிரி என்று அழைத்​தனர். அசோக சக்​கர​வர்த்​தி​யின் 4-வது தலை நகரம் இது​வாகும். பல நூறு வருடங்​களுக்கு முன்பே இங்கு சாலைகளில் ரத்​தின கற்கள், தங்​கம் போன்​றவற்றை கொட்டி விற்பனை செய்வார்​கள். அசோகர் காலத்து சாசனங்​கள் இதை நமக்கு தெரிவிக்​கின்​றன.

ஒரு காலத்​தில் கேஜிஎஃப் தங்​கச் சுரங்​கம் குறித்து நாடு முழு​வதும் பரவலாக பேசப்​பட்​டது. ஆனால் இப்​பொழுது ஜொன்​னகிரி குறித்து நாடு முழு​வதும் பேசப்​படு​கிறது. இங்கு ஆண்​டுக்கு ஒரு டன் தங்​கம் வெட்டி சுத்​தம் செய்யப்படும். ஆரம்​பத்​தில் 400 கிலோவில் தொடங்கி போகப்​போக 1,000 கிலோவுக்கு வரும்.

தற்போது இங்கு 800 ஊழியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் மேலும் 1,500 ஊழியர்​கள் நியமனம் செய்யப்படுவர். வருங்காலத்தில் இங்கு 5,000 ஊழியர்​கள் பணி செய்​வார்​கள். ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் ஒரு ‘பிராண்ட்’ ஆக மாறும். நகைக்கடைகள் இங்கு அமைக்கப்படும் என்றார் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு.

இந்தியாவில் ‘கேஜிஎஃப்’ எனச் சொல்லப்படும் கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின் உதயமாகி இருக்கிறது இந்த ஜேஜிஎஃப். ஜொன்னகிரி கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அப்பகுதியில் 1500 ஏக்கர் நிலத்தை தோண்ட உள்ளனர். கூடுதலாகவும் நிலங்களையும் கொள்முதல் செய்ய உள்ளனர். இந்த தங்கச் சுரஙத்தின் மதிப்பு 7,500 கோடி முதல் 9,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் 400 கோடி முதலீட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து ஆண்டுதோறும் 1,000 கிலோ தூய தங்கம் ஆண்டுதோறும் உற்பத்தி செய்ய இயலும் எனச் சொல்லப்படுகிறது. இந்த சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீசஸ் பிரைவேட் லிமிட் மற்றும் திரிவேணி எர்த்மூவர்ஸ், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறார்கள். இந்த சுரங்கப் பணிகள் தாக்கமாக குர்னூல் மாவட்டம் அமைந்திருக்கும் ராயலசீமா பகுதி பெரும் வளர்ச்சி அடையும் என்று அரசு நம்புகிறது.

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் 2000-ம் ஆண்டில் மூடப்பட்டபின் நாட்டில் ஹட்டி தங்கச் சுரங்கம் மட்டும் ஆண்டுக்கு ஒன்றரை டன் தங்கம் உற்பத்தி செய்து வருகிறது. இப்போது ஜொன்னகிரியில் தங்கம் கிடைக்கும் பட்சத்தில் தங்கம் உற்பத்தி அதிகரிக்கும், நாட்டின் அந்நியச் செலாவணி சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சுரங்கம் தோண்டுவதற்கு உலகிலேயே அதிநவீன எந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த இருக்கிறோம். கோலாருக்கு அடுத்து ஜொன்னகிரி மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய நிலவியல் துறையினர் முதலில் ஆய்வு செய்து அளித்த மதிப்பீட்டை விட தங்கம் வளம் இங்கு அதிகமாக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

15 முதல் 20 ஆண்டுகள் வரை இங்கு தங்கம் வெட்டி எடுக்க முடியும், நிலத்தை துளையிடுதல், தோண்டுதல், பாறைகளை அரைத்தல் போன்றவை கார்பன் இன் லீச் தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்டு தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும்” என்று திரிவேணி எர்த்மூவர்ஸ் மேலாண் இயக்குநர் பி.கார்த்திகேயன்.