



























இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், “தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி. உங்களுடைய அரசாங்கம் இன்று எடுத்துள்ள முடிவு ஒரு மிகப் பெரிய சாதனை. கல்வி நிறுவனங்கள், ஆலயங்களுக்கு பக்கத்தில் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரத்தில் மூட உத்தரவிட்டுள்ளீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால், மதுபானக் கடைகளை தாண்டி தான் நிறைய பெண் குழந்தைகள் போக வேண்டியதுள்ளது. இதனை யாராவது மாற்றிவிட மாட்டார்களா என்று நிறைய முறை யோசித்துள்ளேன். இப்போது அது நடைமுறைக்கு வந்ததற்கு சல்யூட்.
இதுதான் ஒரு சாதாரண மக்களுக்கு தேவை. இதைத்தான் எதிர்பார்க்கிறோம். அரசாங்கத்துக்கு மதுபானக் கடைகள் மூலமாக ரூ.20,000 கோடிக்கு மேலாக வருமானம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அந்த 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது நிறைய மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். பொதுமக்களுக்கு, பெண்களுக்கு, முதியோர்களுக்கு அனைவருக்கும் பெரிய வரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது எக்ஸ் தள பதவில் விஷால், “பள்ளிகளுக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளை மூடுவதாக அறிவித்ததற்கு மிக்க நன்றி. இதுவொரு சிறப்பான நடவடிக்கை.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。