惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
T
The Exploit Database - CXSecurity.com
IT之家
IT之家
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
Tailwind CSS Blog
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 聂微东
博客园 - Franky
美团技术团队
WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
DataBreaches.Net
腾讯CDC
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
F
Fortinet All Blogs
T
Tor Project blog
G
GRAHAM CLULEY
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
I
InfoQ
Cyberwarzone
Cyberwarzone
V
V2EX
T
Tenable Blog
NISL@THU
NISL@THU
Scott Helme
Scott Helme
K
Kaspersky official blog
Latest news
Latest news
S
Schneier on Security
Martin Fowler
Martin Fowler
博客园 - 三生石上(FineUI控件)
Know Your Adversary
Know Your Adversary
Microsoft Security Blog
Microsoft Security Blog
S
Securelist
M
MIT News - Artificial intelligence
V
Vulnerabilities – Threatpost
P
Proofpoint News Feed
L
LangChain Blog
T
Threat Research - Cisco Blogs
Spread Privacy
Spread Privacy
T
Threatpost
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
“மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டை விடாதீர்கள்” - பேரவையில் உதயநிதி அறிவுரை
வெற்றி மயிலோன் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. சிறுகுறு தொழில்கள் மின் வெட்டால் முடங்கியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. முன்பெல்லாம் புயல் மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில்தான் மின்சாரம் இல்லை என்று விடுமுறை விடுகிறார்கள்.

மின்வெட்டுப் பிரச்சினையை தீர்க்க அரசின் நடவடிக்கை என்ன என்று முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.” என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.

ஆளுநர் மகிழ்ச்சிதான் முக்கியமா?

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறை பாடப்பட்டது. ஆனால், தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. இதுவரை கடைபிடிக்கப்பட்ட மரபை மீறி தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறை மற்றும் தேசிய கீதம் ஒருமுறை பாடுவது தான் வழக்கம். ஆனால், தேசிய கீதம் மட்டும் ஏன் 2 முறை பாடப்பட்டது. இதே கோரிக்கையை இதற்கு முன்பு இருந்த ஆளுநர் எங்கள் ஆட்சிகாலத்திலும் வைத்தார். ஆனால், எங்கள் முதல்வர் உறுதியாக இருந்து இந்த அவையின் இறையாண்மையை காத்தார்.

பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. அதனால் அங்கே வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை நமது ஆளுகைக்குள் உள்ளது. நமது ஆளுகையில் உள்ள சட்டப்பேரவையை ஏன் ஆளுநர் வசம் ஒப்படைத்தீர்கள். என்ன சமரசம் நடந்தது. ஏன் தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. அப்படியானால் தமிழ்த்தாய் வாழ்த்தையும் இருமுறை பாடச் சொல்லி நீங்கள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கலாம்.

தவெக உறுப்பினர்கள் பேசும்போது, “ஆளுநர் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டோம்; ஆளுநர் மகிழ்ச்சியாக இருந்தார்” என மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள். தவெகவினருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை விட ஆளுநர் மகிழ்ச்சியாக இருந்தது தான் முக்கியம் போல தோன்றுகிறது. உங்களுக்கு ஆளுநர் முக்கியமா? தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?” என்றார்.

உதயநிதியின் உரையை இடைமறித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும் என்ற நமது அனைவரின் நோக்கத்தின்படியே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டிருக்கிறது. அதேபோல, தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டத்தில் என்ன தவறு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

‘தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள்’

தொடர்ந்து பேசிய உதயநிதி, “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள். மின் துறை அமைச்சர் இரண்டு நாட்கள் பொறுமையாக இருங்கள் என்கிறார். அப்படியானால் அடுத்த இரு நாட்கள் மின்சாரம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. முன்பெல்லாம் புயல் மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில்தான் மின்சாரம் இல்லை என்று விடுமுறை விடுகிறார்கள்.

விசிக தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் சென்றபோது மின்சாரம் இல்லாததால், ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமலே திருமாவளவனுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பவர் ஷேரிங் கொடுத்த கட்சிக்கு, இப்போது தமிழகத்துக்கு பவர் கொடுக்க முடியவில்லை.

இரு நாட்கள் முன்பும் ஆளும் கட்சி தவெக அலுவலகத்திலேயே மின் வெட்டு ஏற்பட்டிருக்கிறது. “ஆளுங்கட்சியா இருந்தும் பனையூரிலேயே பவர் இல்லையே?” என அங்கு வந்தவர்கள் புலம்பிவிட்டுப் போனதாக தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு இப்போது இருளில் மூழ்கியுள்ளது. சிறுகுறு தொழில்கள் மின் வெட்டால் முடங்கியுள்ளது.

மின்வெட்டால் மோட்டார் பம்பு செட்டுகள் இயக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது மின்வெட்டுக்கும் திமுகதான் காரணம் என்கிறார்கள். எங்கள் ஆட்சியில் ஏற்படாத மின்வெட்டு, இப்போது ஏற்படக் காரணம் நிர்வாக திறமையின்மையா? அல்லது தொழில்நுட்ப பிரச்சினை உள்ளதா. அதனை தீர்க்க அரசின் நடவடிக்கை என்ன என்று முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.” என்றார்.

‘விவசாயிகளுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை’

மேலும் உதயநிதி பேசுகையில், “டெல்டாவில் 6 லட்சம் ஹெக்டர் குறுவை சாகுபடி நடக்கும். இந்த முறை ஜூன் 12-ல் மேட்டூரில் தண்ணீர் திறக்காததால் குறுவை தொகுப்பு ரூ.136 கோடிக்கு அறிவித்துள்ளார்.

இது போதவில்லை என விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடுகின்றனர். தேர்தலுக்கு முன்பு 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்கள். விவசாயிகளை ஏமாற்றாமல் முழுமையாக பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தியுள்ளீர்கள்.

மேட்டூர் அணை திறக்காதது, பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம், மேகேதாட்டு விவகாரம் என விவசாயிகள் இந்த ஒரு மாதத்தில் மட்டும் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார்கள்.” என்றார்.

‘ஓரே மாதத்தில் இத்தனை சாதனைகளா?!’

“நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என முதல்வர் விஜய் பேசியுள்ளார். தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம் குறித்து முதல்வர் விஜய் பேசியிருக்கிறார்.

திரைப்படத்தில்தான் ஐந்து நிமிடத்தில் ஏழையாக இருப்பவன் பணக்காரன் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் ஒரே மாதத்தில் இந்த சாதனைகளை எல்லாம் செய்ய முடியாது. எனவே முதல்வர் சொன்ன சாதனை எல்லாம் யாருடைய ஆட்சியில் வந்தது என்று மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளார்கள். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தவெக தான் கொண்டு வந்துள்ளது என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.” என விமர்சித்துப் பேசினார்.

‘ஆளும் கட்சி வரிசையிலும் உள்ளோம்’

“ஆளுநர் உரைக்கும் கள யதார்த்தத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால், ஆளுநர் உரை ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கு உதவியாக இருக்கிறதே தவிர; உண்மையான பிரச்சினைகளுக்கு கைகொடுப்பதாக தெரியவில்லை. ஆளுங்கட்சியின் நிறை குறைகளை விமர்சிப்பதுதான், எதிர்க்கட்சிகளின் கடமை. எனினும், எங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சிகளை விட அதிக பொறுப்பு இருக்கிறது.

ஏனெனில், திமுகவின் வாக்குகளை வாங்கிய எங்களுடைய கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் மட்டும் இல்லை, ஆளும் கட்சி வரிசையிலும் உள்ளோம்.” என்று உதயநிதி கூறினார்.

தமிழக அரசுக்கு நன்றி

“மகளிர் உரிமைத் தொகையை தொடர்ந்ததற்கும், எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீடித்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றி.” என்று உதயநிதி தெரிவித்தார்.

அதேவேளையில், “நாங்கள் தொடங்கிய ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு முடக்க முயற்சிக்கிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 41 லட்சம் மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் பயனடைந்துள்ளனர்.

பாஜகவின் பிரதிபலிப்பா?

தொடர்ந்து பேசிய உதயநிதி “இந்து சமய அறநிலையத் துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய் அதன் பணிகளுக்கே பயன்படுத்தப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். இது, அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என சொல்லும் பாஜகவின் குரலையே தவெகவும் பிரதிபலிக்கிறதா?.” என்று பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுங்கட்சிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவனம் ஈர்த்தார்.