惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
H
Help Net Security
量子位
The Cloudflare Blog
博客园 - Franky
博客园 - 聂微东
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
有赞技术团队
有赞技术团队
罗磊的独立博客
GbyAI
GbyAI
雷峰网
雷峰网
T
The Blog of Author Tim Ferriss
Martin Fowler
Martin Fowler
S
SegmentFault 最新的问题
美团技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் ரூ.530 கோடி செலவில் மாநகர போக்குவரத்தை மேம்படு...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: ​மாநகர போக்​கு​வரத்தை மேம்​படுத்த ரூ.530 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும் சென்னை நுண்​ணறிவு போக்​கு​வரத்து அமைப்பு திட்​டத்தை ஆகஸ்ட் மாதத்​துக்​குள் செயல்​பாட்​டுக்கு கொண்​டு வர வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகர போக்​கு​வரத்தை மேம்​படுத்த மாநக​ராட்சி சார்​பில், ஜப்​பான் சர்​வ​தேச ஒத்​துழைப்பு முகமை (ஜைக்​கா) நிதி​யுத​வி​யுடன் சென்னை நுண்​ணறிவு போக்​கு​வரத்து அமைப்பு (Intelligent Transport System - ITS) திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

ரூ.530 கோடி மதிப்​பீட்​டில் செயல்​படுத்​தப்​படும் இத்​திட்​டம், மேம்​பட்ட நுண்​ணறிவு போக்​கு​வரத்து தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்தி போக்​கு​வ ரத்து மேலாண்​மையை வலுப்​படுத்​துதல், சாலைப் பாது​காப்பை மேம்​படுத்​துதல் மற்​றும் பொதுப்போக்​கு​வரத்து சேவை​களை நவீனமய​மாக்​குதல் ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

இத்​திட்​டம், மாநகர போக்​கு​வரத்து காவல் துறைக்​கான, போக்​கு​வரத்து தகவல் மற்​றும் மேலாண்மை அமைப்​பு, மாநகர் போக்​கு​வரத்​துக் கழகத்​துக்​கான நகரப் பேருந்து அமைப்பு ஆகிய 2 முக்​கிய கூறுகளை கொண்​டுள்​ளது.

இதன்​கீழ், 165 இடங்​களில் போக்​கு​வரத்து நிலை​மைக்கு ஏற்ப செயல்​படும் சிக்​னல்​கள், 50 இடங்​களில் சிவப்பு விளக்கு மீறல் கண்​டறிதல் அமைப்​பு, 10 இடங்​களில் வேக வரம்பு மீறல் கண்​டறிதல் அமைப்​பு, 58 இடங்​களில் போக்​கு​வரத்து விபத்து சம்​பவம் கண்​டறிதல் அமைப்​பு, 115 இடங்​களில் போக்​கு​வரத்து நெரிசலை அறிய உதவும் தானி​யங்கி வாகன எண்​ணிக்கை மற்​றும் வகைப்​பாடு கருவி நிறு​வும்பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இவை அனைத்​தும் சென்னை போக்​கு​வரத்து காவல் துறை​யின் ஒருங்​கிணைந்த கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையம் மூலம் இயக்​கப்​படும். மேலும் போக்​கு​வரத்து நில​வரம் குறித்த தகவல்​களை வழங்​கும் தகவல் பலகைகள் 13 இடங்​களில் அமைக்​கப்​படும். இவை சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழக கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையத்​திலிருந்து இயக்​கப்​படும்.

பேருந்​துகளின் இருப்​பிடத்​தைக் கண்​டறிய 3,500 பேருந்​துகளில் உபகரணங்​கள் பொருத்​தப்பட உள்​ளன. பேருந்​துகளின் வருகை நேரத்​தைக் காட்​டும் பயணி​கள் தகவல் பலகைகள் 616 பேருந்து நிறுத்​தங்​களில் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. 32 இடங்​களில் பேருந்து பணிமனை செயல்​பாடு​களை மேம்​படுத்​தும் பணிமனை மேலாண்மை அமைப்​பு​களும் நிறு​வப்​பட்டு வரு​கின்​றன.

இப்​பணி​களை நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி நேற்று நேரில் பார்​வை​யிட்​டார். அப்​போது இத்​திட்​டத்​தின் அனைத்து கூறுகளும் ஆகஸ்ட் மாதத்​துக்​குள் செயல்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும் என்று அறி​வுறுத்​தி​னார்.

திட்​டம் முழு​மை​யாக செயல்​பாட்​டுக்கு வந்த பின், பயண நேரம் மற்​றும் காத்​திருப்பு நேரம் குறை​யும், போக்​கு​வரத்து சீரடை​யும். தானி​யங்கி விதி​முறை அமலாக்​கம் மூலம் சாலைப் பாது​காப்பு மேம்​படும், பொதுப் போக்​கு​வரத்து சேவை​களின் நம்​பகத்​தன்மை அதி​கரிக்​கும்.

இந்த ஆய்​வின் போது, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன், இணை ஆணை​யர்​கள் வீ.ப.ஜெயசீலன் (சு​கா​தா​ரம்), செ.சர​வணன் (பணி​கள்), மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்​.ஆர்​.க​வுஷிக் ஆகியோர் உடனிருந்​தனர்.