惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
博客园 - Franky
MyScale Blog
MyScale Blog
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
Stack Overflow Blog
Stack Overflow Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
量子位
A
About on SuperTechFans
C
Check Point Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Last Week in AI
Last Week in AI
小众软件
小众软件
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
V
Visual Studio Blog
Vercel News
Vercel News
B
Blog
爱范儿
爱范儿
aimingoo的专栏
aimingoo的专栏
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாங்குநேரி அருகே இரட்டை கொலை நடந்த பெரும்பத்து, வேங்கைவய...
2026-04-24 · via hindutamil

பெரும்பத்து கிராம மக்கள் வாக்குப் பதிவை புறக்கணித்ததால் வாக்குச் சாவடி வெறிச்சோடியது. | | படம்: மு. லெட்சுமி அருண் |

Updated on

1 min read

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி மாவட்​டம் நாங்குநேரி அருகே பெரும்​பத்து கிராம மக்​கள் வாக்​குப்​ப​திவை புறக்​கணித்​த​தால் வாக்​குச்​சாவடி வெறிச்​சோடியது.

இக்​கி​ராமத்​தில் கடந்த சில மாதங்களுக்​கு​ முன் 6 பேர் அரி​வாளால் சரமாரியாக வெட்​டப்​பட்​ட​தில் 2 பேர் உயி​ரிழந்​தனர். மற்ற 4 பேர் பலத்த காயமடைந்​தனர். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிந்து 9 பேரை கைது செய்​திருந்​தனர்.

இந்த விவ​காரத்​தில் அரசுத்​தரப்​பும், காவல்​துறை​யும் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்லை என்​றும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்​க​வில்லை என்​றும் தெரி​வித்​து, பெரும்​பத்து இந்​திரா காலனி கிராம மக்​கள் தேர்​தலை புறக்​கணிப்​ப​தாக ஏற்​கெனவே தெரி​வித்​திருந்​தனர்.

அவர்​களு​டன் அதி​காரி​கள் பேச்​சு​ நடத்​தியும் உடன்​பாடு எட்​ட​ப்படவில்​லை. இங்​குள்ள டிடிடிஏ தொடக்​கப் பள்​ளி​யில் வாக்​குச்​சாவடி அமைக்​கப்​பட்​டிருந்​தது.

பெரும்​பத்து கிராமத்​தில் 471 ஆண்​கள், 498 பெண்​கள் என்று மொத்​தம் 969 வாக்​காளர்​கள் உள்​ளனர். அவர்​களில் 3 பேர் மட்​டுமே நேற்று பிற்​பகல் வரை​யில் வாக்​களித்​திருந்​தனர்.

இதே​போல் புதுக்​கோட்டை மாவட்​டம் வேங்​கைவயல் கிராம மக்​களும் தேர்​தலை புறக்​கணித்​தனர். புதுக்​கோட்டை மாவட்​டம் வேங்​கைவயல் மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்​டி​யில் 2022-ம் ஆண்​டில் மனிதக் கழிவு கலந்​தது தெரிய​வந்​தது.

இந்த செயலை இறையூர் மக்​கள் செய்​த​தாக வேங்​கைவயல் மக்​களும், வேங்​கைவயல் மக்​கள் செய்​தாக இறையூர் மக்​களும் பரஸ்பரம் குற்​றம்​சாட்டி வந்​தனர். இதன்​பேரில் இருதரப்​பினருக்கு இடையே அடிக்​கடி பிரச்​சினை ஏற்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், இச்​சம்​பவத்​தில் குற்​ற​வாளி​களை கைது செய்ய வேண்​டும். வழக்கு பதிந்​ததை ரத்து செய்ய வேண்​டும் என வலி​யுறுத்தி இரண்டு ஊர் மக்​களும் தேர்​தல் புறக்​கணிப்பு செய்​வ​தாக அறி​வித்து இருந்​தனர். இருதரப்​பிலும் சில அரசி​யல் கட்​சி​யினர் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இதையடுத்து இறையூர் மக்​கள் தங்​கள் முடிவை மாற்​றிக்​கொண்டு நேற்று வாக்​களித்​தனர். வேங்​கைவயல் மக்​கள் வாக்​களிக்​காமல் புறக்​கணித்​தனர்.

மேலும், எதிர்ப்பை தெரிவிக்​கும் வகை​யில் வேங்​கைவயலில் கருப்​புக் கொடி கட்டி வைக்​கப்​பட்​டிருந்​தது. இதனிடையே கடைசி நேரத்தில் வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர் வாக்களித்தனர்.

மேலும் இரு கிராமங்கள்

இது​போல், தூத்​துக்​குடி மாவட்​டம் எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாய்​பட்டி கிராமத்​தில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமை இடமாற்​றம் செய்​யக்கோரி​ இக்​கி​ராமத்​தினர் தேர்​தல் புறக்​கணிப்​பில் ஈடு​பட்​டனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஓட்​டப்​பி​டாரம் தொகுதி பொட்​டலூரணி கிராமத்​தில் இயங்​கும் மீன் கழிவு ஆலை​யைக் கண்டித்து கிராம மக்​கள் தேர்தலை புறக்​கணித்​தனர்.