惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
H
Help Net Security
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
V
V2EX
M
MIT News - Artificial intelligence
Vercel News
Vercel News
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog RSS Feed
D
Docker
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
美团技术团队
S
SegmentFault 最新的问题
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசு சார்பில் ஆகாஷின் உடல் 100 நாட்களுக்கு பின்னர் தகனம்:...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

மதுரை: மா​னாமதுரை​யில் போலீ​ஸார் விசா​ரணை​யில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் உடல், 100 நாட்​களுக்​குப் பின்​னர் மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் இருந்து எடுத்​துச் செல்​லப்​பட்டு அரசு சார்​பில் மின் மயானத்​தில் தகனம் செய்​யப்​பட்​டது. இதில், போலீ​ஸாருக்​கும் ஆகாஷின் உறவினர்​களுக்​கும் இடையே ஏற்பட்ட தள்​ளு​முள்​ளு​வால் 50 பேரை போலீ​ஸார் கைது செய்தனர்.

மானாமதுரையைச் சேர்ந்த ராஜேஸ் கண்​ணன் மகன் ஆகாஷ் டெலிசன் (24). அப்​பகு​தியைச் சேர்ந்த 2 பேரை வெட்​டிய வழக்​கில், போலீ​ஸார் அவரைக் கைது செய்​தனர். பின்​னர், அவரை போலீ​ஸார் தாக்​கிய​தில், அவரது கால் எலும்பு முறிந்​த​தாகக் கூறி மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், அவர் கடந்த மார்ச் 8-ம் தேதி உயி​ரிழந்​தார். அவரது உடல் உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தர​வின்​படி உடற்கூ​ராய்வு செய்​யப்​பட்​டது.

இந்தச் சம்​பவத்​தில் கொலை வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்ட நிலையில், இதில் தொடர்​புடைய போலீ​ஸாரை கைதுசெய்ய வேண்​டும், உரிய இழப்​பீட்​டுத் தொகை வழங்க வேண்​டும், அப்​போது​தான் ஆகாஷ் உடலை பெற்​றுக் கொள்​வோம் என அவரது உறவினர்​கள் பல கட்​டப் போராட்​டம் நடத்​தினர். இதனால், 100 நாட்​களாக ஆகாஷ் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை பிணவறை​யில் வைக்​கப்​பட்​டிருந்​தது.

ஆகாஷ் குடும்​பத்​தினரின் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்பட்ட பின்​னரும், அவரது உடலை பெறாமல் இருப்​பது ஏற்​புடையதல்ல. எனவே, ஜூன் 15-ம் தேதிக்​குள் அவரின் குடும்​பத்​தினர் உடலை பெற்​றுக் கொள்​ளா​விட்​டால், அரசு சார்​பில் அடக்​கம் அல்​லது தகனம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தர​விட்​டது.

அதன்​படி, ஆகாஷ் உடலை ஆர்​டிஓ கருணாகரனிடம், மதுரை அரசு மருத்​து​வ​மனை நிலைய மருத்​துவ அலு​வலர் சரவணன் ஒப்​படைத்​தார். இதனைத் தொடர்ந்​து, பலத்த பாது​காப்​புடன் ஆகாஷின் உடல் தகனம் செய்​வதற்​காக அரசு மருத்​து​வ​மனை​யில் இருந்து வெளியே கொண்டு வரப்​பட்​டது. அப்​போது அங்​கிருந்த உறவினர்​கள், உடலை வெளியே கொண்​டுவர எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இதனால், அவர்​களுக்​கும் காவல்​ துறை​யினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதையடுத்​து, எதிர்ப்பு தெரி​வித்த சுமார் 50 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர், ஆகாஷின் உறவினர்​கள் முன்​னிலை​யில், மதுரை தத்​தனேரி மின் மயானத்​தில் ஆகாஷின் உடல் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டது.