惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
The GitHub Blog
The GitHub Blog
小众软件
小众软件
美团技术团队
博客园 - 司徒正美
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
Docker
J
Java Code Geeks
Last Week in AI
Last Week in AI
V
Visual Studio Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
V
V2EX
C
Check Point Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காவல் உட்பட அனைத்து துறையினராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

சென்னை: காவல்​துறை​யில் மட்​டுமல்ல, அனைத்து துறையினராலும் மதிக்​கப்​பட்​ட​வர் சீமா அகர்​வால் என டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பாராட்டு தெரி​வித்​தார்.

தமிழ்​நாடு தீயணைப்பு மற்​றும் மீட்​புப்​பணி​கள் துறை இயக்​குந​ராக உள்ள ஐபிஎஸ் அதி​காரி சீமா அகர்​வாலின் பணிக்​காலம் வரும் 30-ம் தேதி முடிவடைகிறது. ராஜஸ்​தான் மாநிலத்தைச் சேர்ந்த சீமா அகர்​வால், காவல்​துறை​யில் பல்​வேறு பொறுப்​பு​களில் 36 ஆண்​டு​கள் சிறப்​பாக பணி​யாற்​றி​யுள்​ளார். இவரது பணிக்​காலத்தை சிறப்​பிக்​கும் வகை​யில் தமிழக காவல்​துறை சார்​பில் சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், ஐபிஎஸ் அதி​காரி​கள், ஓய்​வு​பெற்ற ஐபிஎஸ் அதி​காரி ஏ.கே.​விஸ்​வ​நாதன், காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் கலந்​து​கொண்​டனர். சீமா அகர்​வாலுக்கு அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பேசி​ய​தாவது: சீமா அகர்​வால் மூத்த அதி​காரி மட்​டுமல்ல, அவரின் மனி​தாபி​மானமிக்க அணுகு​முறை அவரை உயர்ந்த இடத்​தில் நிறுத்​தி​யுள்​ளது. எந்த பிரி​வில் பணி​யாற்​றி​னாலும் அதில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கு​வார். பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றப்​பிரி​வில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு விரை​வில் நீதி வழங்க நடவடிக்கை எடுத்​தார். ரயில்வே ஐஜி​யாக இருந்​த​போது விபத்​துகளை தடுக்க அதிக நடவடிக்​கைகள் மேற்​கொண்​டார். காவல்​துறை​யில் மட்​டுமல்ல, அனைத்து துறை​களை சேர்ந்​தவர்​களாலும் மதிக்​கப்​பட்​ட​வர் சீமா அகர்​வால். இவ்​வாறு டிஜிபி பேசி​னார்.

சீமா அகர்​வால் பேசும்​போது, “சட்​டம் ஒழுங்கு மற்​றும் புல​னாய்வு பிரிவு அல்​லாமல் சிறப்பு பிரிவு​களில் பணி​யாற்​றும்​போது எனக்கு தெளி​வான பார்வை கிடைத்​தது. தற்​போது பணி​யில் உள்ள அதி​காரி​களுக்கு ஒன்றை கூற விரும்​பு​கிறேன். பாதிக்​கப்​படும் விளிம்​புநிலை மக்​களுக்கு உறு​துணை​யாக இருக்க முடி​யு​மா, பொது​மக்​களிடம் கனி​வாக இருக்க முடி​யுமா என்​பது குறித்து நீங்​களே உங்​களை ஆய்​வுக்கு உட்​படுத்தி மக்​களுக்கு சிறப்​பான சேவை​யாற்ற வேண்​டும்’’ என்​றார்.