惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
aimingoo的专栏
aimingoo的专栏
C
Check Point Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
Docker
N
Netflix TechBlog - Medium
罗磊的独立博客
F
Full Disclosure
I
InfoQ
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
Tailwind CSS Blog
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
The Register - Security
The Register - Security
The GitHub Blog
The GitHub Blog
U
Unit 42
Microsoft Security Blog
Microsoft Security Blog
Webroot Blog
Webroot Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
Threatpost
博客园 - 【当耐特】
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
P
Privacy International News Feed
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
T
Threat Research - Cisco Blogs
Y
Y Combinator Blog
P
Proofpoint News Feed
B
Blog RSS Feed
G
GRAHAM CLULEY
Last Week in AI
Last Week in AI
Martin Fowler
Martin Fowler
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Cisco Talos Blog
Cisco Talos Blog
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
P
Palo Alto Networks Blog
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
P
Privacy & Cybersecurity Law Blog
Know Your Adversary
Know Your Adversary
I
Intezer
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 聂微东
L
LangChain Blog
B
Blog
雷峰网
雷峰网
K
Kaspersky official blog
S
Secure Thoughts
Security Latest
Security Latest
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
S
Security @ Cisco Blogs
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
Single Salma: தன்னை அறியும் சல்மா உடைத்த ‘சமூகச் சடங்கு’ | திரை தேவதைகள் 01
பாரதி ஆனந்த் · 2026-01-19 · via hindutamil

Updated on: 

பட்ட மேற்படிப்பு பயிலும் எனது மகளுடனான ஒரு தேநீர் கோப்பை உரையாடலில், “இந்தக் காலத்திலும் இச்சமூகம் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்பந்திப்பதால் தான் நிறைய பெண்கள் திருமண பந்தத்துக்குள் நுழைகின்றனர்.

திருமணம் என்பது ஒரு பெண் அந்த வயதை எட்டிவிட்டார் என்பதாலோ, குடும்பப் பெருமையை கடத்துவதற்காகவோ இல்லை... ‘நாங்கள் முற்போக்கானவர்கள்தான். பாருங்கள், எங்கள் பெண் பிள்ளையை படிக்க வைத்தோம், அவள் இப்போது பொருளாதார சுதந்திரத்தை எட்டிவிட்டார். அதனால் அவள் வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக திருமணம் செய்து பெற்றோர் கடமையை நிறைவேற்றுகிறோம்’ என்ற போர்வைகளில் எல்லாம் நடக்கக் கூடாது.

திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு செய்துவைக்கப்படும் ‘சடங்காக’ இல்லாமல், அவள் நினைக்கும்போது செய்து கொள்ளக் கூடிய ‘சாய்ஸ்’ ஆக இந்தச் சமூகத்தில் இருக்க வேண்டும்” என்றார்.

எனக்கு ஒரு ஜெர்க் கொடுத்த உரையாடல் அது. சில, பல மாதங்கள் கடந்திருக்கும் என நினைக்கிறேன், இந்த உரையாடல் நிகழ்ந்து. அதனால், நினைவுப் பெட்டகத்தில் எங்கோ புதைந்து போயிருந்தது.

ஓர் ஓய்வுநாளில் ஓடிடி பக்கம் உலாவி நெட்ஃப்ளிக்ஸில் கரைஒதுங்கியபோது இந்தியில் ஹூமா குரேஷி நடிப்பில் வெளியான ‘சிங்கிள் சல்மா’ (Single Salma - 2025) படத்தை பார்க்க நேர்ந்தது. படம் முடிந்த தருணம் சல்மாவாக நடித்த ஹூமா கதாபாத்திரத்தின் அணுகுமுறையும், மகள் எப்போதோ பேசிவைத்த திருமணத்தின் மீதான சடங்கு Vs சாய்ஸ் வாதமும் பெர்ஃபெக்டாகப் பொருந்திப் போனது எனக்குப் புரிந்தது.

ஒரு பெண் தனது அடையாளத்தைத் தேடும் கதைக்களம் இந்திய சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. அதுவும், திருமணம் நிச்சயமாகி, அது நின்றுபோய் தேன்நிலவுக்காக புக் செய்யப்பட்ட டிக்கெட்டில் தனியாகப் பயணித்து தன்னைத் தானே வெளிக் கொணர்ந்த ‘குயின்’ போன்ற திரைப்படங்கள், பெண்கள் மீதான ஸ்டீரியோடைப் பார்வைகளுக்கு வலுவாக அடி கொடுத்த திரை வரலாறு இருக்கிறது.

அப்படியிருக்க, ‘சிங்கிள் சல்மா’ புதிதாக என்ன கொடுக்கப் போகிறாள் என்று கேள்வி எழலாம். ராணி, சல்மா மட்டுமல்ல, இந்தியப் பெண்கள் பலருக்கும் தங்களை கட்டுப்படுத்தும், மட்டுப்படுத்தும் சமூக நெருக்கடிகள் இன்றளவும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அதில் நம் ‘சிங்கிள் சல்மா’வை கட்டுப்படுத்தியது பேரிளம் பெண் வயது வரம்புக்குள் வந்தும் திருமணம் ஆகவில்லையா என்ற அழுத்தமே.

திருமணம் என்பது என் சாய்ஸ், இதுதான் நான், இப்படித்தான் நான், என் தேவை இதுதான் என்று தனது குடும்பத்துக்கும், தனக்காக நிச்சயக்கப்பட்டவனுக்கும், தன்னுடன் காதல் வாழ்க்கையை தொடர வந்தவனுக்கும் உணர்த்தி திரை தேவதையாக ஜொலித்திருக்கிறார் ‘சிங்கிள் சல்மா’.

சல்மாவாக ஹூமா குரேஷி, சல்மாவுக்கு நிச்சயக்கப்பட்ட நபராக ஸ்ரேயாஸ் தல்படே, சல்மாவின் தோழி ரத்னாவாக வரும் நிதி சிங், சல்மா தனது அடையாளத்தை உணர உந்துதலாக இருக்கும் மீத் கதாபாத்திரத்தில் நடித்த சன்னி சிங் என அனைவரும் சேர்ந்து கலகலப்பாகவே கதையை நகர்த்தியுள்ளனர்.

இன்னும் சிங்கிளா?

நம் நாயகி சல்மா 30+ வயதில் இருக்கிறார். பொறியாளராக பணி செய்கிறாள். சுய சம்பாத்தியத்தில் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். தந்தை நவாப் பெருமையை மட்டுமே தூக்கிக் கொண்டு திரிய, அவர் பட்ட கடனை அடைத்து வீட்டை மீட்பதுதான் சல்மாவின் பிரதான இலக்காக இருக்கிறது. மற்ற குடும்பப் பொறுப்புகள் எல்லாம் கிளை இலக்குகள். சல்மா திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து அவரது அம்மாவுக்கு மட்டுமே அக்கறை இருக்கிறது. இது அம்மாவுக்கு கவலை என்றால், சல்மாவின் ஏரியாவாசிகளுக்கு அது ‘கலகல’ டாபிக்.

சல்மாவுக்கு ‘சிங்கிள்’ என்ற அடைமொழியைக் கொடுத்து லூட்டி அடிக்கும் சமூகத்தை தன் கோபத்தால், கல்வியும், வேலையும் தந்த துணிச்சலால் குதறினாலும்கூட சமூக நெருக்கடிகளை அவளால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாள்.

சல்மாவுக்கான மாப்பிள்ளை தேடும் படலத்தை கொஞ்சம் காமெடி தூக்கலாகக் காட்டிய இயக்குநர் நச்சிகேட் சமந்த், சிக்கந்தர் - சல்மா சந்திப்பிலிருந்து படத்தை வேகமெடுக்க வைக்கிறார்.

சமூகத்துக்காகவும், தாய் வாங்கிய சத்தியத்துக்காகவும் சிக்கந்தரை சந்திக்க வரும் சல்மாவுக்கு முதல் சந்திப்பில் அவர் மீது ஏற்படுவது பரிதாப உணர்வு. அவளை இதுவரை எள்ளி நகையாடிய ஆண்களையே பார்த்திருந்த சல்மாவுக்கு தனது பரிதாப நிலையை பட்டவர்த்தமாக ஒப்புக்கொண்ட சிக்கந்தர் மீது நல்லெண்ணம் ஏற்படுகிறது. சல்மாவுக்குக் காட்டப்பட்ட மணமகன்களில் சிக்கந்தர் முதல் ரேங்க் எடுத்து நிற்க சல்மா மனம் சமரசம் அடைகிறது.

திருமணம் நிச்சயமான கையோடு சல்மாவுக்கு லண்டனில் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வர, சிக்கந்தர்தான் குடும்பத்தினரிடம் சிபாரிசு செய்து அனுப்பிவைக்கிறார். அதனால் சல்மாவுக்கு அவர் மீதான நல்லெண்ணத்தோடு மரியாதையும் சேர்ந்து கொள்கிறது. பேண்ட் வாத்தியங்களோடு வருங்கால கணவரால் லண்டனுக்கு வழியனுப்பப்படும் சல்மா அங்கே முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குள் செல்கிறாள்.

விமர்சன எல்லைகளுக்கு அப்பால்...

சல்மா லண்டனில் தன்னை ஜட்ஜ் செய்யும் கண்களுக்கு, விமர்சனம் செய்யும் வம்பர்களுக்கு அப்பால், சென்றுவிட்டதால் தனக்குப் பிரியமான ஆடைகள் தொட்டு அனைத்தையும் செய்து பார்க்கிறாள். கார் ரேஸ், மாடலிங் என்று எக்ஸ்ப்ளோர் செய்வது, மது விருந்து, பிகினி, மனசுக்குப் பிடித்த இளைஞருடன் உறவு என்று அவளது எக்ஸ்பெரிமென்ட்கள் விரிகின்றன.

அதில் முதன்முதலில் மது அருந்தியது சல்மாவுக்கு தனது மத, கலாச்சார, பாலின அடையாளங்களுக்கு ஏதோ அவமரியாதை செய்துவிட்டதாக குற்ற உணர்வை ஏற்படுத்த, அதை உடைக்கிறார் அவருடன் வந்த மத்திம வயது பெண்ணான திருமதி ஸ்ரீவஸ்தவா.

“பெண்களுக்கு அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே ‘ஒரு பெண் ஆசைப்படுவது பாவம்’ என்று போதிக்கப்படுகிறது. எனது பள்ளிப் பருவத்தில் எனக்கு சிகரெட் புகைக்க ஆசை இருந்தது. அதை நான் ஒரு பாலத்தின் கீழ் நண்பருடன் மறைந்து நின்று நிறைவேற்றினேன். அதன்பின்னர் எனக்கு புகைக்கப் பிடிக்கவில்லை. ஆனால் அன்று நான் எனது ஆசையை மறைவில் நிறைவேற்றிக் கொண்டேன். ஏதேனும் ஆசை இருந்தால் அதை சோதனை செய்து பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை” என்பார்.

சல்மா அந்தத் தருணத்தில்தான் தனக்கென்று தனியாக இருக்கும் ஆசைகள் பாவமல்ல, அது இயல்பானவை என்பதையே உணர்வாள்.

அதேபோல், சல்மா தன் செயல்கள் மீது குற்ற உணர்வு எழும்போதெல்லாம் அதற்கு ஊரில் இருக்கும் தோழி ரத்னாவிடம் ஆலோசனை கேட்டுத் தெளிவாள். தோழி ரத்னாவின் ஆலோசனைகள் எல்லாமே சல்மாவைப் போல் குழப்பத்தில் இருக்கும் பெண்கள் ரெஃபரன்ஸ் எடுத்துக் கொள்ளக் கூடிய ரகம்.

அடுத்த சில நாட்களில் பெரிய மனத்தடங்கல்கள் இல்லாமல் அவள் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வாள்.

தன்னை, தனது ஆசைகளை மதிக்க ஆரம்பித்துவிட்ட சல்மாவுக்கு ஒரு மனப் போராட்டம் எழும். சிக்கந்தர் மேல் இருந்த பரிதாபம், மரியாதை, தன்னை இம்ப்ரெஸ் செய்ய அவர் மேற்கொள்ளும் மெனக்கிடல்கள் ஒருபுறமும், நினைத்ததைப் பேசும், பிடித்ததை செய்யும், “என் தாய் விவாகரத்து வாங்கி தன்னை கைவிட்டதை எல்லாம் நான் குற்றமாகவே பார்க்கவில்லை. என் தாய்க்கும் ஒரு வாழ்க்கை உள்ளது” என்று அதிமெச்சூரிட்டி பேச்சை வெளிப்படுத்திய மீத் மீதான ஈர்ப்பு மறுபுறமும் அவள் மனதை ஊசலாட்டத்தில் வைத்திருக்கும்.

ஆனால், உண்மையில் மீத் மீதுதான் அவளுக்கு காதல், காம உணர்வுகள் ஏற்பட்டிருந்தது என்பதை அவனுடனான உறவுக்கு அவள் அத்தனை இயல்பாய் சம்மதிக்கும்போது தான் சல்மா புரிந்துகொள்வாள். தன் ஆசை, தேவை என்னவென்பதை, தன் திறமை, தன் மதிப்பு என்னவென்பதை புரிந்துகொண்டு லண்டனிலிருந்து புறப்படுவாள் சல்மா.

லண்டன் டூ லக்னோ...

சல்மா லண்டனிலிருந்து லக்னோ திரும்புவதற்குள் அவரது பீச் பிகினி படம் வைரலாகிவிட, அதன் பின்னர் நடப்பதெல்லாம்தான் திருமணம் சடங்காக திணிக்கப்படும் சமூகச் சிக்கலை சல்மா எப்படி எதிர்கொள்கிறாள் என்பது.

லண்டன் ரிட்டர்ன் சல்மா லக்னோ சல்மாவைப் போல் அல்லாமல் தந்தையிடம் துணிந்து கேள்வி கேட்பாள். தனது பிகினி உடைக்கு அவமானப்படவில்லை என்று உறுதியாகச் சொல்வாள். அந்த உடையில் நான் மகிழ்ச்சியாக, அதுவே நான் நானாக உணர்ந்த தருணம் என்று சிலாகிப்பாள். வீட்டை விட்டு வெளியேறி என் வாழ்க்கையை வாழ்ந்து கொள்வேன் என விடுதலையை ஏற்பாள்.

இந்தக் கட்டத்தில்தான், தன்னை தகவமைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சல்மா தன் கைநழுவவிடுவாரோ என்ற பதற்றம் சிக்கந்தருக்கு ஏற்படும். நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் திருமணம், அதுவும் அழகான பெண்ணுடன் என்று ஊர் முழுவதும் தம்பட்டமும் அடித்தாகிவிட்டது. அதனால் முன்பைவிட இன்னும் தாராள மனம் கொண்டவராவார் சிக்கந்தர்.

அதனாலேயே சல்மா மீதான விமர்சனங்களை எல்லாம் ‘பெருந்தன்மை’ காட்டிக் காட்டியே சல்மாவிடமிருந்து விலகிப் போவார்.

‘பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் மெட்டீரியல்’ ஆக காட்சியளிக்கும் சிக்கந்தரின் நேர்மை சல்மாவை இன்னும் ஆழமாக யோசிக்க வைக்கும். சிக்கந்தரை திருமணம் செய்துகொண்டு தன் கையில் கிடைத்த தனது வாழ்க்கையை இழந்தவிடக் கூடாது என்ற முடிவுக்கு சல்மாவை நகர்த்தும்.

சிக்கந்தரிடம் நேர்மையாக தனக்கு லண்டன் நண்பர் மீது ஏற்பட்ட ஈர்ப்பை கூறுவாள். ‘ஆனஸ்ட்’ சிக்கந்தர் அப்போது ‘ஆவேச’ சிக்கந்தராக மாறுவார்.

“திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் நான் பேண்ட் வாத்தியங்களோடு வருவேன், தைரியும் இருந்தால் அங்கே என்னை நிராகரி” என்று சவால் விட்டுச் செல்வார்.

மறுபுறம் லண்டனிலிருந்து புறப்பட்டுவரும் மீத், சல்மாவிடம் இடம், பொருள் ஏதும் பார்க்காமல் காதலை அவசர கதியில் வெளிப்படுத்துவார். அதுவும் முழுமையாக சல்மா எதிர்பார்க்கும் காதலாக இல்லாமல், தனக்கு கம்ஃபர்டபிளான ‘லண்டன் வா நாம் வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற இன்விடேஷனாக வைப்பார்.

நிச்சயிக்கப்பட்டவனின் சவால், காதல் கொண்டவனின் இன்வைட் இடையே சல்மாவின் சாய்ஸ் சிக்கி நிற்கும்.

சல்மாவின் சாய்ஸ்!

இந்தப் படத்தை சீரியஸாக சொன்னால் பிரச்சாரமாகிவிடும், சற்றே பிசகினால் கேலிக் கூத்தாகிவிடும். அப்படியான கதைக்களத்தின் க்ளைமாக்ஸை லாவகமாக கையாண்ட இயக்குநர், சல்மாவின் சாய்ஸை அங்கே பேச வைத்திருப்பார்.

நவாப் வம்சாவளி பெருமை பீற்றும் தந்தைக்கு, தனக்கு ஒரு மகன் வேண்டும் என்பதற்காகவே அடுத்தடுத்து மகள்களைப் பெற்று அவர்கள் அனைவரையும் சுமக்கும் பொறுப்பை தன் மேல் சுமத்திவிட்டதாக சல்மா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுவாள்.

அத்தனை சங்கடங்களையும் பொறுத்துக் கொண்டு வீட்டையும் மீட்டுக் கொடுத்ததையும், அதற்குப் பின்னால் தனது பிகினி உடை ஃபோட்டோ வைரலானதால் கிடைத்த மாடலிங் வாய்ப்புதான் இருக்கிறது என்பதையும் பெருமைப் பொங்க கூறுவாள். அது ரிஸ்வி போன்ற தந்தைகளின் ஈகோ நொறுங்குமிடம்.

தனது சாய்ஸ் மாடலிங் என்று தெளிவாக முடிவு செய்ததோடு, எப்போதும் தன்னைக் கட்டுப்படுத்தாத ஓபன் ரிலேஷன்ஷிப் தான் வேண்டும் என்று கூறும் மீத்துக்கும் பளீர் பதில் கூறுவாள். அதேபோல், சிக்கந்தரை அணுகும் விதமும் மாஸ் ரகம்.

என் தொழில், என் வாழ்க்கை, என் சம்பாத்தியம், என் திருமணம் எல்லாம் என் சந்தோஷம் சார்ந்தது என்று தன்னை முன்னிலைப்படுத்தும் சல்மா முன்பு எதை வெறுத்தாளோ அந்த ‘சிங்கிள்’ அடைமொழி பெண்களுக்கு மகிழ்ச்சியும், சுதந்திரமும் தருமென்றால் அதுவே பெஸ்ட் சாய்ஸ் என்பாள்.

திருமணம் அவளின் சாய்ஸ் வரம்புக்குள் எடுத்துக் கொண்ட கெத்தை வெளிப்படுத்தும் தருணம் அது.

‘சிங்கிள் சல்மா’ பேசும் அரசியல்

பெண் அடிமைத்தனத்துக்கு முதன்மைக் காரணம் அவளுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லாததே என்ற அரசியலைத்தான் ‘சிங்கிள் சல்மா’ பேசியிருக்கிறது என்று கொள்ளும் அளவுக்கு அவ்வளவு தெளிவாக படம் முழுவதும் அதை கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

பெண் விடுதலை என்பது சமூகப் பொருளாதார பங்களிப்பில் அவள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில் இருந்தே தொடங்கும். பொருளாதார விடுதலையே அவளுக்கு அனைத்து விடுதலைகளையும் தரும். அதுதான் பெண்ணியம் என்ற அரசியலை ‘சிங்கிள் சல்மா’ பேசியிருக்கிறது.

வழக்கமாகவே பெண்ணியம் பேசும் படங்களில் இருக்கும் பிரச்சார நெடி இல்லாமல் லைட்டர் வெயினில் படத்தை சொல்லியதால்தான் சல்மா ஒரு திரை தேவதையாக மிளிர்கிறாள்.

| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |