惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
J
Java Code Geeks
P
Proofpoint News Feed
Recent Announcements
Recent Announcements
罗磊的独立博客
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园_首页
Hugging Face - Blog
Hugging Face - Blog
MongoDB | Blog
MongoDB | Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网
D
DataBreaches.Net
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 聂微东
V
Visual Studio Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
N
Netflix TechBlog - Medium
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
Blog — PlanetScale
Blog — PlanetScale
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீரில் கார் மூழ்கி தம்பதி உயி...
செய்திப்பிரிவு · 2026-05-26 · via hindutamil

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி விபத்துக்குள்ளான கார்.

Updated on: 

சேலம் / ஈரோடு: சேலம் மாவட்​டம் ஓமலூர் அருகே ரயில்வே சுரங்​கப் பாதை​யில் தேங்​கி​யிருந்த மழை நீரில் கார் மூழ்​கிய​தில் வயதான தம்​பதி உயி​ரிழந்​தனர். சேலம் சின்​னத்​திருப்​ப​தி​யைச் சேர்ந்த தம்​பதி வெங்​க​டாசலம் (73), ராதா (63).

இவர்​களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்​ளனர். அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தில் மேலா​ள​ராக பணி​யாற்றி ஓய்வுபெற்ற வெங்​க​டாசலத்​தின் மகன் அமெரிக்​கா​விலும், மகள் கோவை​யிலும் வசிக்​கின்​றனர். சின்​னத்​திருப்​ப​தி​யில் தம்​பதி தனி​யாக வசித்து வந்​தனர்.

நேற்று முன்​தினம் இரவு ஓமலூர் சுற்​று​வட்​டாரத்​தில் கனமழை பெய்​தது. ஓமலூர் அருகே செம்​மாண்​டப்​பட்​டி, ஏனாதி கிராமம் வழி​யாகச் செல்​லும் ரயில்வே சுரங்​கப்​பாதை​யில் குளம்போல மழைநீர் தேங்​கி​யுள்​ளது.

ஓமலூர் சின்​னத்​திருப்​ப​தி​யில் நடை​பெறும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க வெங்​க​டாசலம், ராதா நேற்று அதி​காலை 5 மணிக்கு காரில் சென்​றுள்​ளனர்.

செம்​மாண்​டப்​பட்டி ஏனாதி ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்​கி​யிருந்த நிலை​யில், வெங்​க​டாசலம் காரில் சுரங்​கப் பாதையை கடக்க முயன்​றார்.

அப்​போது, மழைநீரில் கார் மூழ்​கியது. கார் லாக் ஆனதால், தம்​பதி வெளி​யேற முடிய​வில்​லை. குளம்​போல தேங்​கி​யிருந்த மழை நீரில் கார் முழு​மை​யாக மூழ்​கிய​தால், தம்​ப​தி​யர் காருடன் நீரில் மூழ்கி உயி​ரிழந்​தனர்.

நேற்று காலை அந்த வழி​யாகச் சென்ற கிராம மக்​கள், ரயில்வே சுரங்​கப் பாதை​யில் கார் மூழ்​கி​யிருந்​ததைப் பார்த்து ஓமலூர் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். போலீ​ஸார் சம்பவ இடம் வந்து ரயில்வே சுரங்​கப் பாதை​யில் மூழ்​கி​யிருந்த காரை வெளியே எடுத்​தனர்.

அப்​போது, காருக்​குள் வெங்​க​டாசலம், ராதா ஆகியோர் உயி​ரிழந்து இருந்​தனர். இரு​வரின் உடலை​யும் மீட்​டு, பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும், சம்​பவம் குறித்து போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சேலம் மாவட்​டத்​தில் உள்ள ரயில்வே சுரங்க பாதைகளில் மழைக் காலங்​களில் மழை நீர்தேங்கி வரு​வது வழக்​க​மாக உள்​ளது.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அதுவரை மோட்​டார் பம்ப் மூலம் சுரங்​கப் பாதை​யில் தேங்​கும் மழைநீரை அதி​காரி​கள் வெளி​யேற்​று​வதன் மூலமும் இது​போன்ற விபத்து சம்​பவங்​கள் நடக்​காமல் தடுக்க முடி​யும் என அப்​பகுதி மக்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

சிறு​வன் உயி​ரிழப்பு

ஈரோடு மாவட்​டம் தாள​வாடி அருகே உள்ள திக​னாரை கிராமத்​தைச் சேர்ந்த ரங்​க​ராஜ் மகன் கார்த்​திக் (6). அங்​குள்ள அரசு உதவி பெறும் பள்​ளி​யில் 2-ம் வகுப்பு படித்து வந்​தார்.

மழை காரண​மாக நேற்று முன்​தினம் இரவு அங்​குள்ள ஓடை​யில் காட்​டாற்று வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடியதை கார்த்​திக் வேடிக்கை பார்த்​துக் கொண்​டிருந்​தான். பின்​னர் அவன் வீடு திரும்​ப​வில்​லை.

வெள்ளத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின்பேரில் ஆசனூர் தீயணைப்​புத் துறை​யினர் மற்​றும் போலீ​ஸார் ஓடை​யில் தேடும்​பணி​யில் ஈடு​பட்​டனர்.

நேற்று காலை அதே பகு​தி​யில் ஓடை​யில் உயி​ரிழந்த நிலை​யில் சிறு​வனின் உடலை தீயணைப்​புத் துறை​யினர் மீட்​டனர்​. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.