惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 三生石上(FineUI控件)
博客园_首页
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The GitHub Blog
The GitHub Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
F
Fortinet All Blogs
B
Blog RSS Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网
GbyAI
GbyAI
M
MIT News - Artificial intelligence
I
InfoQ
阮一峰的网络日志
阮一峰的网络日志
Recent Announcements
Recent Announcements
小众软件
小众软件
量子位
S
SegmentFault 最新的问题
Google DeepMind News
Google DeepMind News
Vercel News
Vercel News
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் - அ...
2026-04-22 · via hindutamil

Updated on

1 min read

தெஹ்ரான்: போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், இன்று ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்த நீட்டிப்பு குறித்த ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை. அதேநேரத்தில், உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் சண்டையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக இரு நாடுகளும் எச்சரித்துள்ளன.

இந்தச் சூழலில், பிரிட்டிஷ் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) மையம், ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகர காவலர் படை (IRGC), இன்று காலை 7:55 மணியளவில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு சரக்கு கப்பலைத் தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவித்தது.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு ஈரான் ராணுவம், கப்பலுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்றும் பிரிட்டிஷ் ராணுவம் கூறியது.

அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்தத் தாக்குதலால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

இரண்டாவதாக ஒரு சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கடலில் நிறுத்தப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்தது. அந்தக் கப்பலுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 19-ல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்​பற்​றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்​பட்ட மற்​றொரு ஈரானிய எண்​ணெய் கப்​பலை அமெரிக்க கடற்​படை நேற்று கைப்​பற்​றியது. இதையடுத்து, ஈரானின் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களை கைப்​பற்​று​வது போர் நிறுத்த மீறல் ஆகும் என்று அந்த நாட்டு தலை​வர்​கள் குற்​றம் சாட்டி வரு​கின்​றனர்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் ஈரான் மீது தாக்​குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 8-ம் தேதி இருதரப்​புக்கு இடையே 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல் செய்யப்பட்​டது. இதனிடையே கடந்த 11, 12-ம் தேதி​களில் அமெரிக்கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இந்த பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து இஸ்​லா​மா​பாத்​தில் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்​தையை நடத்த ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வருகின்றன. அணு ஆயுதம், ஹார்​முஸ் ஜலசந்தி கட்​டுப்​பாடு, லெப​னான் போர் நிறுத்​தம் உள்​ளிட்ட விவகாரங்களில் இரு தரப்​புக்​கும் இடையே ஒரு​மித்த கருத்து எட்​டப்​பட​வில்​லை. இதனால் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்தை தள்ளி வைக்​கப்​பட்டு வரு​கிறது கவனிக்கதக்கது.