惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
博客园 - Franky
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
量子位
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
T
Tailwind CSS Blog
宝玉的分享
宝玉的分享
Blog — PlanetScale
Blog — PlanetScale
有赞技术团队
有赞技术团队
博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
小众软件
小众软件
阮一峰的网络日志
阮一峰的网络日志
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கருப்பை உரிமையை உறுதி செய்த தீர்ப்பு
2026-04-29 · via hindutamil

Updated on

2 min read

ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக, குழந்தை பெற்றுக்கொள்ளும்படி அவரை எந்த நீதிமன்றமும் நிர்ப்பந்திக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

கருவில் உள்ள குழந்தையைவிட அதைச் சுமக்கும் தாயின் விருப்பமும் மனநலனுமே முக்கியம் என்கிற நீதிமன்றத்தின் கருத்து, பெண்களின் மகப்பேறு உரிமையை உறுதிசெய்வதாக இருக்கிறது.

18 வயதுக்கு உள்பட்ட ஒருவருடன் ஏற்பட்ட உறவால் 15 வயதுடைய தன் மகள் கருவுற்றிருப்பதால் அதைக் கலைப்பதற்கு அனுமதி அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை ஒரு பெண் அணுகினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் பூயான் அடங்கிய இருவர் அமர்வு, மருத்துவரீதியான கருக்கலைப்புக்கு அனுமதித்துத் தீர்ப்பு வழங்கியது.

பாலியல் வன்முறையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், குடும்பத்துக்குள் முறையற்ற உறவால் கருவுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் - பதின்பருவப் பெண்கள் உள்ளிட்ட எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு மருத்துவரீதியான கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021இல் நடைமுறைக்கு வந்தது.

இந்தச் சட்டம் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க வழிவகை செய்கிறது. ஆனால், 15 வயதுச் சிறுமியின் வயிற்றில் வளரும் கரு ஏழு மாதங்களைக் கடந்து விட்டதால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைச் சிறுமியின் தாய் நாடினார்.

30 வாரங்களைக் கடந்த நிலையில் கருக்கலைப்பை மேற்கொள்வது தாய் - சேய் இருவரது உயிருக்கும் ஆபத்தாக அமையலாம் எனவும், குழந்தை பிறந்த பிறகு மத்திய தத்தெடுப்பு வாரியத்தின் மூலமாகக் குழந்தையைத் தத்துக் கொடுத்துவிடலாம் எனவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

‘ஒருவரது உடல் சார்ந்த - குறிப்பாக இனப்பெருக்கம் சார்ந்த உரிமைகளில் முடிவெடுப்பது என்பது அரசமைப்புச் சட்டக்கூறு 21 வலியுறுத்தும் தனி உரிமை - அந்தரங்க உரிமையின் உட்கூறு.

குழந்தையை வளர்க்க விருப்பமில்லை என்றால் தத்துக் கொடுத்துவிடலாம் என்பதையும் இழப்பீடு கோரலாம் என்பதையும் ஏற்க முடியாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

தன் உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும் கருவைக் கலைக்க முன்வந்திருக்கும் பெண்ணின் உள்ளார்ந்த உணர்வுக்கு இத்தீர்ப்பின் மூலம் மதிப்பளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், ‘நாம் இப்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், யாரும் நீதிமன்றங்களை நாட மாட்டார்கள்.

சட்டவிரோதமான, முறையற்ற கருக்கலைப்புகள் நடைபெறக்கூடும்’ என்று குறிப்பிட்டிருப்பது, நம் சமூக அவலங்களை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

திருமணமானவர்கள் மட்டுமே மருத்துவரீதியான கருக்கலைப்புக்குத் தகுதியானவர்கள் என்று இருந்த நிலையில், கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021, விருப்பமற்ற கருவைக் கலைக்க அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று உறுதிசெய்ததோடு அதற்குப் பெண்ணின் அனுமதி மட்டுமே போதும் என்றும் வரையறுத்துள்ளது.

15 வயதுச் சிறுமியின் எதிர்காலத்தை முன்னிட்டுத் தகுந்த மருத்துவப் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு கருக்கலைப்பை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மணமான பெண்களுக்கே கருப்பை உரிமை முழுவதுமாகக் கைகூடாத இந்தியச் சமூகத்தில், 15 வயதுச் சிறுமிக்கு வழங்கிய தீர்ப்பின் மூலம் பெண்கள் அனைவருக்குமான இனப்பெருக்க உரிமைக்கு வித்திட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

அதேவேளையில், இதுபோன்ற முன்னோடித் தீர்ப்புகள் காகிதங்களில் மட்டுமே தங்கிவிடாமல் அனைத்துத் தளங்களிலும் அவை செயல்படுத்தப்படுவதும் அவசியம்.