惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
The Cloudflare Blog
IT之家
IT之家
V
V2EX
雷峰网
雷峰网
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
博客园 - 叶小钗
Blog — PlanetScale
Blog — PlanetScale
C
Check Point Blog
A
About on SuperTechFans
B
Blog
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ பங்கே...
2026-05-12 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகுதி திமுக வேட்பாள​ரான முன்​னாள் அமைச்​சர் கே.ஆர்​.பெரியகருப்பன் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் தவெக வேட்பாளர் சீனி​வாச சேதுப​தியிடம் தோல்​வியடைந்​தார் அதையடுத்து மறு​வாக்கு எண்ணிக்கை முறை​யாக நடை​பெற​வில்லை என அவர் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், “எனது தொகு​திக்கு பதி​வான ஒரு தபால் வாக்கை அதி​காரி​கள் தவறு​தலாக வேலூர் அரு​கே​யுள்ள திருப்பத்தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்பி விட்​டனர். எனவே அந்த தபால் வாக்கை மீட்டு மறு எண்​ணிக்கை நடத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். அது​வரை சீனி​வாச சேதுபதி சட்​டப்​பேர​வை​யில் நடைபெறும் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பங்​கேற்க தடை விதிக்க வேண்​டும்” என கோரி​யிருந்தார்.

இந்த வழக்கை ஞாயிறன்று விசா​ரித்த நீதிப​தி​கள் எல்​.விக்​டோரியா கவுரி, என்​.செந்​தில்​கு​மார் அமர்வு, இதுதொடர்பாக தேர்​தல் ஆணை​யம் விளக்​கமளிக்க உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி இந்த வழக்​கில் தமிழக தலைமை தேர்​தல் அதிகாரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று தாக்​கல் செய்​த பதில்​மனு​வில், “தேர்​தல் முடிவுக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்​கு​தான் தொடர முடி​யும். அந்த தேர்​தல் வழக்கை விசா​ரிக்கும் உயர் நீதி​மன்​றம்​தான் அத்​தொகுதியின் தேர்​தல் வெற்றி செல்​லுமா, செல்​லாதா என்​பதை தீர்​மானிக்​கும். அதைத் தவிர்த்து ரிட் வழக்கு தொடர்ந்து இதற்கு பரி​காரம் தேட முடி​யாது. இதை மக்​கள் பிர​தி​நி​தித்​துவச் சட்​ட​மும், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களும் உறுதி செய்​துள்ளன.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கு பதி​வான தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்டுள்ளதாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்​டுக்கு எந்த ஆதா​ர​மும் இல்​லை. மேலும் தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட பிறகு ஒரு தொகு​தி​யில் எண்​ணப்​பட்ட தபால் வாக்கை வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​க​வும் முடி​யாது. அதே​போல தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட பிறகு வேறு தொகுதிக்கு அனுப்​பப்​பட்ட தபால் வாக்கை மீட்​டு, மறு எண்​ணிக்கை நடத்​தக் கோரும் மனு மீது முடி​வெடுக்க சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் அதி​காரிக்​கும் அதி​காரம் இல்​லை.

ஒரே பெயர் கொண்ட தொகு​தி​களுக்​கான வாக்​கு​களை கையாளும்​போது தேர்​தல் அதி​காரி​கள் மிகுந்த எச்சரிக்கை உணர்​வுடன் செயல்பட ஏற்​கெனவே அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது. அதன் காரண​மாகவே தபால் வாக்​கு​களில் தொகுதி எண் குறிப்​பிடப்பட்டு சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களுக்கு அனுப்பி வைக்​கப்​படு​கின்​றன. தபால் வாக்கு வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக கற்​பனை​யாக கூறப்​படும் குற்​றச்​சாட்டு அடிப்​படை ஆதா​ரமற்​றது. எனவே இந்த வழக்கை அபராதத்​துடன் தள்ளு​படி செய்ய வேண்​டும்” என கோரி இருந்தார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலனும், பெரியகருப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளி​வைத்​தனர்.

இந்நிலையில், நம்பிக்க வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தபால் வாக்குகள், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.