惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
Recent Announcements
Recent Announcements
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
H
Help Net Security
aimingoo的专栏
aimingoo的专栏
宝玉的分享
宝玉的分享
U
Unit 42
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
F
Fortinet All Blogs
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
D
DataBreaches.Net
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
A
About on SuperTechFans
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
量子位
C
Check Point Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரிடம் கடிதம்:...
செய்திப்பிரிவு · 2026-05-09 · via hindutamil

Updated on: 

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்​வ​ராக அவர் பதவி​யேற்​கிறார்.

புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள என்​ஆர்​.​காங்​கிரஸ் 12, பாஜக 4, அதி​முக, லஜக முறையே ஒரு இடத்​தில் வெற்றி பெற்​றுள்​ளன.

புதுச்​சேரி​யில் உள்ள 30 எம்​எல்​ஏக்​களில் ஆட்சி அமைக்க 16 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. அதேநேரம் தற்போது தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 18 எம்​எல்​ஏக்​கள் பலம் உள்​ள​தால் மீண்​டும் ரங்​க​சாமி தலை​மை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைய உள்​ளது.

ஏற்​கெனவே கடந்த 3 நாட்​களுக்கு முன் என்​ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப்​பேரவை கட்​சித்​தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். அதே போல் பாஜக​வின் சட்​டப்​பேர​வைக் கட்​சித்​ தலை​வ​ராக நமச்​சி​வா​யம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.

என்​டிஏ கூட்​டணி அமைச்​சர​வை​யில் பாஜவுக்கு எத்​தனை அமைச்​சர்​கள் என்ற முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை நடந்​தது. இதில் எந்த முடி​வும் எட்​ட​ப்படவில்​லை. அதைத்​தொடர்ந்​து, புதிய ஆட்சி அமைய முதல்​வர் பதவியை ரங்​க​சாமி தனது பதவியை ராஜி​னாமா செய்​து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனிடம் நேற்று முன்​தினம் கடிதம் அளித்​தார்.

இதைத்​தொடர்ந்து நேற்று நடந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில், பாஜக மேலிடப் பொறுப்​பாளர் மன்​சுக் மாண்​ட​வி​யா, ரங்​க​சாமி, பேர​வை​யின் பாஜக தலை​வர் நமச்​சி​வா​யம், அதி​முக மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன், லட்​சிய ஜனநாயக கட்​சித் தலை​வர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் மற்​றும் என்​டிஏ கூட்​டணி எம்​எல்​ஏக்​கள் பங்​கேற்​றனர்.

இதில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார். ரங்​க​சாமி ஆட்சி அமைக்க பாஜக, அதி​முக, லஜக கட்​சிகள் ஆதர​வுக் கடிதங்​களை வழங்​கின. கூட்​டத்​துக்கு பின் ரங்​க​சாமி கூறும்​போது, "ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்​திக்​க​வுள்​ளேன்.

அதன்​பிறகு பதவி​யேற்பு விழா தேதி பற்றி முடிவு செய்​யப்​படும். அமைச்​சர்​கள் பதவி யார் யாருக்​கு, எந்​தக் கட்​சி​யினருக்கு என்​பது பதவி தரும்​போது தெரி​யும். பேர​வைத் தலை​வர் யார் என்​ப​தை​யும் பிறகு தெரிவிக்​கிறேன்" என்​றார்.

என்​டிஏ எம்​எல்​ஏக்​கள் தரப்​பில் விசா​ரித்​த​போது, “வரும் 13-ம் தேதி ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெறும் விழா​வில் முதல்​வர் ரங்​க​சாமி பதவி​யேற்க முடிவு எடுத்​துள்​ளார்” என்று தெரி​வித்​தனர். இதுதொடர்​பான முறை​யான அறி​விப்பு விரை​வில் வெளி​யாகும் என்று தெரி​வித்திருந்தனர்.

பாஜக அழுத்​தம்

மேலும் கட்சி வட்​டாரங்​களில் விசா​ரித்​த​போது, மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா​வும் ரங்​க​சாமி​யும் தனி​யாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது கடந்த முறையை போல பேர​வைத் தலை​வர், இரு அமைச்​சர்​கள் பதவி​களை தங்​களுக்கு வழங்​கும்​படி பாஜக தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​ட​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை தேசிய ஜனநாயக ​கூட்​டணி ஆட்சி அமைக்க உரிமைக்​கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனிடம் முதல்​வர் ரங்​க​சாமி கடிதம் அளித்​தார். என்​.ஆர்​.​காங்​கிரஸ், பாஜக, அதி​முக, லஜக எம்​எல்​ஏக்​கள் அப்போது உடனிருந்​தனர்.

இச்​சந்​திப்​புக்கு பிறகு முதல்​வர் ரங்​க​சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதுச்​சேரி​யில் என்​டிஏ ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்​கக்​கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்​துள்​ளேன்​. வரும் 13-ம் தேதி காலை முதல்​வ​ராக பதவி ஏற்​கிறேன்” என்​றார்.

தொடர்ந்து பாஜக மாநிலத்​தலை​வர் வி.பி.​ராமலிங்​கம் கூறுகையில்,“ஏற்​கெனவே கடந்த என்​டிஏ கூட்​ட​ணி​யில் இருந்​தது போல் புதி​தாக அமை​யும் தேசிய ஜனநாயக ​கூட்​டணி அரசில் பாஜக​வுக்கு பேர​வைத்​தலை​வர், இரு அமைச்​சர்​கள் தர கோரி​யிருந்​தோம்​.பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​பட்​டுள்​ளது” என்​றார்.

இதைத் தொடர்ந்​து, துணைநிலை ஆளுநர் மாளிகை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி தலை​வ​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள, என்​.ஆர்​.​காங்​கிரஸ் தலை​வர் ரங்​க​சாமி ஆளுநர் கைலாஷ்​நாதனை சந்​தித்​தார்.

அப்​போது புதுச்​சேரி​யில் ஆட்சி அமைக்க உரிமை கோரி எம்​எல்​ஏக்​களின் ஆதரவு கடிதத்தை அளித்​தார். கடிதம் குடியரசுத்​ தலை​வர் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.