惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Fortinet All Blogs
罗磊的独立博客
IT之家
IT之家
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
博客园 - Franky
博客园 - 聂微东
博客园_首页
爱范儿
爱范儿
量子位
博客园 - 三生石上(FineUI控件)
G
Google Developers Blog
Martin Fowler
Martin Fowler
小众软件
小众软件
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The Cloudflare Blog
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
போலீஸார் மீது கல்வீசி தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக...
2026-05-15 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: ஆந்​தி​ரா​வில் கைது செய்து அழைத்து வந்​த​போது போலீ​ஸார் மீது கல்​வீசி தாக்கி கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் பிரபல யூடியூப​ரான சவுக்கு சங்​கருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மிரட்டி பணம் பறித்​தல் மற்​றும் பணமோசடி ஆகிய குற்​றச்​சாட்​டு​களின் கீழ், ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் சவுக்கு மீடியா சிஇஓ-​வான யூடியூபர் சவுக்கு சங்​கரை கடந்​தாண்டு டிச.13 அன்று கைது செய்​தனர்.

அந்த வழக்​கில் மருத்​துவ காரணங்​களுக்​காக அவருக்கு மார்ச் 25 வரை உயர் நீதி​மன்​றம் இடைக்​கால ஜாமீன் வழங்​கி​யிருந்​தது. ஆனால் அந்​தக் காலக்​கெடு தாண்​டி​யும் அவர் சம்​பந்​தப்​பட்ட கீழமை நீதி​மன்​றத்​தில் சரண் அடைய​வில்​லை.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநிலம், ஓங்​கோலில் தலைமறை​வாகி​யிருந்த சவுக்கு சங்​கரை போலீ​ஸார் கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு வந்​தனர். அப்​போது, வரும் வழி​யில் சிறுநீர் கழிப்​ப​தற்​காக போலீஸ் வாக​னம் சாலை​யோரத்​தில் நிறுத்​தப்​பட்​டது.

மற்​றொரு வாக​னத்​தில் வந்த சிலர் போலீ​ஸாருடன் வாக்கு வாதத்​தில் ஈடு​பட்​டு, ஆபாச வார்த்​தைகளால் திட்​டி, போலீஸ் வாக​னம் மீது கல்​வீசி தாக்​குதலில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இதையடுத்​து, போலீ​ஸார் மீது கல்​வீசி கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக சவுக்கு சங்​கர் மீதும், அவருக்கு ஆதர​வாக மற்​றொரு வாக​னத்​தில் வந்​தவர்​கள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதி​யப்​பட்​டது.

அந்த வழக்​கில் தனக்கு ஜாமீன் கோரி சவுக்கு சங்​கர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​திருந்தார். அதில், ``அரசி​யல் அழுத்​தம் காரண​மாக போலீ​ஸார் தன் மீதுள்ள காழ்ப்​புணர்ச்​சி​யால் உள்​நோக்​கத்​துடன் இந்த பொய் வழக்கை பதிவு செய்​துள்​ளனர்.

போலீ​ஸாரை கல்​வீசி தாக்கி கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக எனக்கு எதி​ராக பொய்​யான கதை புனையப்​பட்​டுள்​ளது. அப்​படி ஒரு சம்​பவமே நடை​பெற​வில்லை'' எனக் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி எல்.விக்​டோரியா கவுரி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் அருண் அன்​புமணி, ``போலீ​ஸார் சவுக்கு சங்​கர் மீது வழக்கு மேல் வழக்கு என பல்​வேறு வழக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர்'' என்​றார்.

அதற்கு ஆட்​சேபம் தெரி​வித்து அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆ. தாமோதரன், ``உயர் நீதி​மன்​றம் அளித்த இடைக்​கால ஜாமீன் முடிவடைந்த பின்​னரும் அவர் நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் தலைமறை​வா​னார்.

சவுக்கு சங்​கர் மீது 48 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படியே ஆந்​திரா ஓங்​கோலில் தலைமறை​வாக இருந்த அவரை தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சிறை​யில் அடைக்க கொண்டு வந்​த​போது போலீ​ஸாரின் வாக​னம் மீது கல்​வீச்​சில் ஈடு​பட்டு அவரை மீட்க முற்​பட்​டனர். அதன் காரண​மாகவே, கொலை முயற்சி வழக்குப் பதி​யப்​பட்​டுள்​ளது'' என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, ``கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்ட சவுக்கு சங்​கர் தின​மும் புழல் காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும், விசா​ரணைக்கு ஒத்​துழைக்க வேண்​டும்'' என்ற நிபந்​தனை​யுடன் ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டார்.